Monday 24 December 2007

கொஞ்சம் தெரிந்துகொள்வோம்

ஷண்முகசுப்பையாவின் கவிதை ஒன்று.

அணைக்க ஒரு
அன்பில்லா மனைவி
வளர்க்க இரு நோயுற்ற சேய்கள்
வசிக்கச் சற்றும்
வசதியில்லா வீடு
உண்ண என்றும்
உருசியில்லா உணவு
பிழைக்க ஒரு
பிடிப்பில்லாத் தொழில்
எல்லாமாகியும்
ஏனோ உலகம் கசக்கவில்லை

துவர்க்கும் நெல்லிக்காயின் அடிவாரத்தில் சுவைக்கப்படும் .00001 மில்லிகிராம் இனிப்புதான் வாழ்க்கை.


லிப்சன் கெய்சர் என்பவர் ஒரு மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர். உலகெங்கும் சென்று பயிற்சி வகுப்புகளை நடத்தி வருவதையே தொழிலாகக் கொண்டவர்.

ஒருமுறை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இவர் பயிற்சி வகுப்பு நடத்தியபோது, ஐநூறு வெள்ளி கட்டிவிட்டுப் பயிற்சி வகுப்பு மேற்கொண்டவர்களை நோக்கி அதிர்ச்சி தரும்படி பேசினார்.
கெய்சர் இப்படி ஆரம்பித்தார்.

நீங்கள் இறந்து விடுகிறீர்கள். உங்களைச் சவப்பெட்டியில் கிடத்தி இருக்கிறார்கள். மேல் பலகை மீது இன்னும் ஆணிகள் அறையப்படவில்லை. உங்களைச் சுற்றிப் பலரும் சூழ்ந்து நிற்கிறார்கள். சிலர் வாய்பொத்தி அழுகிறார்கள். சிலரோ கதறுகிறார்கள். வேறு சிலர் உங்கள் கால்கள் அருகே மண்டியிடுகிறார்கள். பலர் மலர்வளையம் வைக்கிறார்கள் என்றார்.
நான் இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள நேர்ந்திருந்தால், அடப்பாவி மனுஷா! நாலு நல்ல விஷயம் சொல்வாய் என்று பார்த்தால், சாகவே அடித்துவிட்டாயா? என்று எண்ணியிருப்பேன். ஆனால் இதில் கலந்துகொண்டவர்களோ, எங்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிட்ட பயிற்சி வகுப்பு இது என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
கெய்சர் தொடர்கிறார். இப்போது எவரோ ஒருவர் உங்களை விமர்சனம் செய்ய ஆரம்பிக்கிறார்.

நல்ல மனுஷன்! பாவம்! அல்ப ஆயுசுல போய்ச் சேர்ந்துட்டாரு.
இதைக் கேட்டதும், உங்கள் காதுகள் உயிர்ப்பெறுகின்றன. ஒலியை மட்டும் வாங்கிக்கொள்ளும் மூளையின் பகுதி வேலை செய்ய ஆரம்பித்துவிடுகிறது. ஆகையால் காதுகளைத் தீட்டிக்கொண்டு உங்களைப் பற்றிய விமர்சனங்களை நீங்கள் கூர்ந்து கவனியுங்கள்.

இப்போது பேசுகிறார்களே, இவைதான் உங்களைப் பற்றிய கலப்படமற்ற உண்மையான விமர்சனங்கள்.

ஒரு மனிதன் எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் சரி, அவனுக்கான அஞ்சலி கூட ஒரே நிமிடம்தான். இந்த நேரத்திற்குள் அவன் நினைக்கப்பட்டு இருந்தாலும் மறுநிமிடமே மறக்கப்பட்டுவிடுகிறான்.

இந்த ஒரு நிமிட விமர்சனம் அல்லது ஒரு நிமிடச் சிந்தனை எப்படிப்பட்டவராக இருக்கவேண்டும் என்பதை மற்றவர்கள் முடிவு செய்யக்கூடாது. இதை நாம்தான் தீர்மானிக்கவேண்டும்.

இந்த விமர்சனம்தான் இனி மேற்கொள்ள இருக்கும் வாழ்க்கைப் பாதையை நிர்ணயிக்கப்போகிறது.

நல்ல மனுஷன்தான். ஆனா புள்ளைகளுக்கு ஒண்ணும் வழி பண்ணாமப் போய்ட்டாரே. பெரிசாப் பேசினாரு. ஆனா தன்னோட உடம்பைப் பாதுகாக்காம விட்டுட்டாரு. என்றோ, இனிமே இந்தக் குடும்பம் நல்லா முன்னுக்கு வந்துடும் என்று ஆரம்பித்து ஏகமாய் விமர்சனம் செய்ய அனுமதித்து விடக்கூடாது.
நாம் எப்படியெல்லாம் பாராட்டப்படவேண்டும் என்று விரும்புகிறோமோ அவற்றை அடைவதற்கு என்ன வழி என்று இந்த நிமிடமே நாம் தீர்மானித்துவிட்டால்கூட இந்தச் சமூகத்தின் எதிர்பார்ப்புகளை நம்மால் ஈடுகட்டிவிட முடியும்.

இதுவரை வாழ்ந்த வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருப்பினும், அது துடைத்து எடுக்கப்பட்ட வாழ்க்கையாக நம் புதுவாழ்க்கை அமைய இந்த நிமிடத் தீர்மானம் உங்களுக்கு உதவப் போகிறது.
Kumudam

Wednesday 28 November 2007

கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க

சாமியார்கள் எத்தனை ரகமான கூத்து பண்ணி னாலும் சலிக்காமல் ரசிக்கிற வாசக மகா ஜனங்களுக்கு லேட்டஸ்ட் அறிமுகம் & பண்ணாரி சாமியார்!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலிருந்து ராசி புரம் செல்லும் வழியில் வையப்பமலை பஸ் ஸ்டாப்பில் இறங்கி தெற்கே ஐந்து கிலோமீட்டர் தூரம் போனால் வரும் கிராமம் பெரியமணலி. இங்குதான் பிரமாண்ட ஆசிரமம் கட்டி Ôஅருள்Õ பாலித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீலஸ்ரீ பண்ணாரி சாமியார்.
பல வருடங்களாக முடி வெட்டாமலும் எண்ணெய் வைக்காததாலும் சிடுக்கு பிடித்த நீண்ட ஜடா££... முடி! உடம்பு முழுக்க அழுத்த்த்தமான விபூதிப் பட்டை... கழுத்தை மறைத்து ருத்ராட்சக் கொட்டை... இடுப்பில் காவி வேட்டி... அதில் முடியப்பட்ட செல்போன்... இதுதான் ஸ்ரீலஸ்ரீ பண்ணாரி சாமியாரின் திருக்கோலம்.

நாம் அவரது ஆசிரமத்துக்குச் சென்றி ருந்த நேரத்தில் பொள்ளாச்சியில் இருந்து வந்திருந்த பக்தர் ஒருவருக்கு அருள் வாக்கு சொல்லிக்கொண்டிருந்தார் சாமியார். ‘‘அடுத்தவனைப் பார்த்துப் பார்த்தே உம் பொழப்பு நாசமாப் போயிட்டிருக்கு. அடுத்தவனைப் பார்க்குறதை நிறுத்திட்டு நீ பொழைக்கிற வழியைப் பாருடா. உனக்கு அடிக் கடி மூட்டு வலி வருமே, ரைட்டா? அதுக்கு ஒரு மருந்து தர்றேன். தெனமும் மூணுவேளை மூணு நாளைக்கு சாப்பிடு. அப்புறம் எந்த வலியும் உனக்கு வராது’’ என்று பொள்ளாச்சி பார்ட்டிக்கு அருள்வாக்கு பிளஸ் மூட்டுவலி மருந்துக்கு ஃபீஸ் ஐந்தாயிரம் வாங்கிக்கொண்டார்.

நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம். ‘‘உங்க பத்திரிகை எவ்வளவு
விற்கும்..? எந்த ஊருக்கெல்லாம் போகுது..?’’ என்று சர்வே ரேஞ்சுக்கு விவரம் கேட்டுக்கொண்ட பிறகே திருவாய் திறந்தார் பண்ணாரி.

‘‘மல்லசமுத்திரம் பக்கம் இருக்கிற சின்னகாளிப்பட்டிதான் என் சொந்த ஊர். வீட்டுல வச்ச பேரு நல்லதம்பி...ÕÕ என்று ஆரம்பித்து தன் பூர்வ கதை சொல்லிவிட்டு, ‘‘கொஞ்ச நாளைக்கு முன்னாடி உலகத்துல இருக்குற மக்கள் எல்லாம் நல்லா இருக்கணும்னு பனை மரத்து மேல ஏறி உட்கார்ந்து நூத்திப் பதினோரு நாள் தவமிருந்தேன். அந்த சமயத்துல என் சாப்பாடு கடலைக் கொட்டை மட்டும் தான். அதுவும் என்னோட பக்தர்கள் கீழே இருந்து கயித்துல கட்டிவிடுவாங்க. நான் மேலே இருந்து இழுத் துக்குவேன். பூமியை தோண்டி அதுக்குள்ளயும் உட்கார்ந்து தவமிருந் துட்டேன். என்னோட தவத்தாலதான் இன்னைக்கு உலகத்துல பெரிய அளவுல சண்டை சச்சரவு இல்லாம அமைதியா மக்கள் வாழ்ந்துட்டு இருக்காங்க என்று இன்றைய பராக்கிரமÕங்களை உதிர்த்தார். [அள்ளி விடறாரு]

‘‘நான் பள்ளிக் கூடத்துப் பக்கம் எட்டிக்கூடப் பார்த்தது இல்லை. ஆனா, இன்னைக்கு பல பேருடையை நோயை குணப்படுத்துறேன். டாக்டருங்களே முடியாதுன்னு சொன்ன பலபேரை காப்பாத்திருக்கேன்ÕÕ என்றவர், ÔÔஎய்ட்ஸ்க்கு மருந்து இல்லன்னு சொல்லிட்டு இருக்காங்க. ஆனா நான் கண்டுபிடிச்சிட்டேன். சில மூலிகைகளை ஒண்ணா அரைச்சு (அதைச் சொல்வாரா என்ன?) ஒரு தைலம் ரெடி பண்ணியிருக்கேன். அதை தெனமும் மூணு உருண்டை தின்னாப் போதும் எய்ட்ஸ் பறந்துபோயிடும். அதேமாதிரி சில பேருக்கு சீக்கிரமே விந்து வெளியேறிடும். நான் அதுக்கும் மருந்து வச்சிருக்கேன். ஒரு வேளைக்கு பதினைஞ்சு ரூபா ஆகுது. ஒருவாரம் தொடர்ந்து தின்னா போதும். எவ்வளவு நேரமானாலும் தாங்கும்! என்றார் Ôசிட்டுக்குருவிÕ வைத்தியர் ரேஞ்சுக்கு! இந்த பண்ணாரி சாமிக்கும் பக்த வாடிக்கையாளர்கள் அடிக்கடி வந்து போவதில், ஜோராகத்தான் கதை ஓடிக்கொண்டிருக்கிறது! [சாமி இதுக்கே கண்ணக்கட்டுதே]

ஏமாற ஆளிருந்தால்... இதுபோல நன்னாரிகளுக்கா நாட்டில் பஞ்சம்?!
Vikatan.com

Wednesday 21 November 2007

மீண்டும் ஒரு சர்ச்சையா?

படைப்புக்கும், படைப்பாளிகளுக்கும் சம்பந்தமேயில்லாமல் 'திடீர்' சேகுவாராக்கள் உருவாகிக் கொண்டிருக்கிற தமிழ்சினிமாவில், படைப்பை போலவே பேச்சும், பேச்சை போலவே படைப்பையும் கொண்டிருக்கிறார் கௌதமன். கத்தியின் வலிமையும், பிளேடின் கூர்மையும் இருக்கிறது அவரது பேச்சில்! ஆட்டோ சங்கர், சந்தனக்காடு என்று தொலைக்காட்சி வரலாற்றில் புதிய வாள்வீச்சை நடத்திக் கொண்டிருக்கிற கவுதமனை சந்தித்தோம்-

கிரிமினல்களை போற்றுவதுதான் உங்கள் நோக்கமா?

நிச்சயமாக இல்லை. ஆட்டோகிராஃப், ஆட்டோ சங்கரின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் தொடர். ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுனரை எப்படி இந்த அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் மிகப்பெரிய கிரிமினல் ஆக்கினார்கள் என்பதைதான் அந்த தொடர் விரிவாக சொன்னது. இதை பார்க்கிறபோது எச்சரிக்கை உணர்வுதான் வருமே தவிர, யாரும் ஆட்டோ சங்கர் ஆகிவிட வேண்டும் என்று விரும்ப மாட்டார்கள். எந்த கிரிமினலும் இந்த மண்ணில் தோன்றிவிடக் கூடாது என்பதால்தான் இதுபோன்ற தொடர்களை எடுக்கிறேன். ஆட்டோ சங்கர் தானே எழுதிய வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடர் அது. நிஜத்தை மட்டுமே பேசிய தொடர்.

சந்தனக்காடும் அப்படித்தான். இந்த தொடருக்காக வீரப்பன் வாழ்ந்த இடங்களையும், அவரோடு பழகிய மனிதர்களையும் நேரில் சென்று பார்த்து, பழகி, பிறகுதான் இந்த தொடரை உருவாக்கினேன். வீரப்பன் யார்? கொஞ்சம் பின்னோக்கி பார்த்தால் அவரை வெறும் சந்தனக்கடத்தல் மன்னனாக மட்டும் பார்க்க முடியாது. ஒரு தமிழின போராளியாகவும் இருந்திருக்கிறார். தமிழச்சிகள் கர்நாடக எல்லையில் அங்குள்ள போலீஸ் அதிகாரிகளால் கற்பழிக்கப்பட்டபோது, அந்த போலீஸ் ஸ்டேஷனை கைப்பற்றி ஷட்டரை மூடிவிட்டு உள்ளேயே அத்தனை போலீஸ்காரர்களையும் சுட்டுக் கொன்ற போராளிதான் வீரப்பன். இவர் வீட்டு பெண்ணை கற்பழித்தார்கள் என்றா அந்த கொலைகளை செய்தார்? இல்லையே! எல்லா தமிழச்சிகளையும் தன் குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக பார்த்ததன் விளைவுதானே அது? அதன்பின்தான் தமிழச்சிகளிடம் வாலாட்ட தயங்கியது கன்னட போலீஸ். இப்படிப்பட்ட மனிதருடைய கதையை சொல்லாமல் நான் யார் கதையை சொல்வது?

திரைப்பட இயக்குனரான நீங்கள், சந்தனக்காட்டையும் திரைப்படமாக எடுத்திருக்கலாமே?

எடுத்திருக்கலாம்தான். ஆனால், மொத்த கதையையும் 50 சீனில் சொல்லியாக வேண்டும். சீரியல் என்றால் ஒரு சம்பவத்தையும் விட்டு விடாமல் 200 எபிசோடுகளில் சொல்லலாம். அந்த சுதந்திரம் இருக்கிறதல்லவா? அதுமட்டுமல்லாமல் வீரப்பன் மரணத்தை சொல்லும்போது பல உண்மைகளை இந்த உலகத்திற்கு சொல்ல வேண்டியிருக்கிறது. சினிமாவை விட சீரியலாக இருந்தால் சென்சார் சிக்கல்கள் இருக்காது. இந்த தொடர் சூடு பிடித்ததும் பாருங்கள். தமிழ்நாட்டில் மிகப்பெரிய சர்ச்சகளை எழுப்பும்.

இந்த தொடருக்கு வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி எதிர்ப்பு தெரிவித்தாரே?

சுமார் 120 நாட்கள் காட்டிலேயே தங்கி மிகப்பெரும் இன்னல்களை சந்தித்து இந்த தொடரை எடுத்திருக்கிறோம். ஏராளமானவர்களின் கடுமையான உழைப்பு இருக்கிறது இந்த தொடருக்கு பின்னால். ஆனால், இந்த தொடரை ஒளிபரப்புவதற்கு முன் கோடிக்கணக்கில் பணம் வேண்டும் என்று அவர் கேட்டால் எப்படி? பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் அவர் கேட்கவில்லை. யாரோ அவரை தவறாக தூண்டி விட்டிருக்கிறார்கள். கடைசியில் நீதிமன்றமே அனுமதி கொடுத்துவிட்டது. முத்துலட்சுமியின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்ய ஐயா ராமதாஸ் எப்போதும் தயாராக இருக்கிறார்.

வீரப்பனுக்கு பல அரசியல்வாதிகளின் தொடர்பு இருந்ததால்தான் காட்டிற்குள் இத்தனை காலம் இருக்க முடிந்ததா?

யாருடைய உதவியோடும் அவர் காட்டுக்குள் இருந்தததில்லை. ஒவ்வொரு நாளும் ஒடிக்கொண்டேதான் இருந்தார். அத்தனை பெரிய காட்டில் அவருக்கு யார் வருகிறார்கள். எங்கே வருகிறார்கள் என்பதெல்லாம் கூட தெரியும். பறவைகள், மிருகங்கள் உதவியுடன்தான் அவர் காட்டிற்குள் இருந்தார் என்பதுதான் உண்மை. இந்த தொடரை பாருங்கள். பல உண்மைகள் உங்களுக்கு ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஊட்டும்!

மறுபடியும் சினிமா பக்கம் செல்வீர்களா?

மகிழ்ச்சி, நலமறிய ஆவல் என்ற இரண்டு படங்களை இயக்க தற்போது சம்மதித்துள்ளேன். இதில் ஒரு கதையில் நானே ஹீரோவாக நடிக்கும் எண்ணமும் இருக்கிறது.

தமிழ் சினிமா.காம்

Tuesday 13 November 2007

அரசியல் நட்சத்திர தீபாவளி

தீபாவளி, பொங்கல் என்று வந்துவிட்டால் எல்லா பத்திரிகைகளும், டி.வி. சேனல்களும் சர்வம் சினிமா மயமாக மாறிவிடுகின்றன. அப்போதுதான் தீபாவளி கொண்டாடிய திருப்தியே ஏற்படுகிறது. நாம் மட்டும் விதிவிலக்காக இருந்து என்ன சுகத்தைக் கண்டோம்? எனவே, சினிமா ரசிகர்களைத் திருப்திபடுத்தும் வகையில், அரசியல் தலைவர்களை சினிமா நட்சத்திரங்களாக மாற்றிவிட்டோம்.

நட்சத்திர சந்திப்பு

(வாசகர்களே, புரட்சி ஸ்டார் ஜெயலலிதாவும், வட இந்திய சீனியர் ஸ்டார் வாஜ்பாயும் உங்களுக்காக சந்தித்துப் பேசுகிறார்கள்.)

ஜெயலலிதா : வணக்கம். நாம முதல் முதல்லே எந்த படத்திலே சேர்ந்து நடிச்சோம்னு ஞாபகமிருக்கா?

வாஜ்பாய் : "டெல்லி கோட்டை' படத்தைத்தானே சொல்றீங்க? அதெல்லாம் மறக்கக்கூடிய விஷயமா? அந்தப் படத்திலே ஏற்பட்ட அனுபவங்களை நினைச்சா இப்ப கூட உடம்பெல்லாம் நடுங்குது. ஒரு மாதிரி ஆன்ட்டி ஹீரோயினா நீங்க அதுலே நடிச்சிருந்தீங்க இல்லே?

ஜெயலலிதா : ஆமா! என்னை நம்ப வெச்சு, ஏமாத்தற கூட்டத்துக்கு தலைவரா நீங்க நடிச்சிருந்தீங்க. உங்களை நான் எப்படி பழிவாங்கறேன்றதுதான் கதை. படம் நல்லபடியா ரிலீஸ் ஆனாத்தான் எனக்கு எதிர்காலமேன்ற மாதிரி, அப்போ நிலைமை இருந்தது.

வாஜ்பாய் : படம் முழுக்க உங்களை சமாதானப்படுத்தற ரோல்தான் எனக்கு கிடைச்சது. எவ்வளவு பயங்கரமா வசனம் பேசியிருந்தீங்க அதுலே. என் லைஃப்லே அந்த மாதிரி திகில் வசனங்களை நான் கேட்டதேயில்லை.

ஜெயலலிதா : அது மட்டுமா? "ஏமாத்திப் போட்டீங்களே, ஐயா. வாஜ்பாய் ஐயா'ன்னு நான் சொந்தக் குரல்லே பாடின பாட்டு, பெரிய ஹிட் ஆச்சே.

வாஜ்பாய் : அந்த க்ளைமாக்ஸ் டீ பார்ட்டி ஸீன் மாதிரி, எந்தப் படத்திலேயும் வந்ததில்லை.

ஜெயலலிதா : அதை ஏன் ஞாபகப்படுத்தறீங்க? செலவு பண்ணதுதான் மிச்சம். ஒரு பிரயோஜனமும் இல்லை.

வாஜ்பாய் : போகட்டும் விடுங்க. விதியை யாராலே மாத்த முடியும்? நாம மறுபடியும் இணைஞ்சு நடிக்கணும்னு நம்ம ரசிகர்கள் ஆசைப்படறாங்கன்னு கேள்விப்பட்டேன்.

ஜெயலலிதா : அதைப் பத்தித்தான் நானும் யோசிச்சுக்கிட்டிருந்தேன். மூன்றாவது அணி கம்பைன்ஸ்லேர்ந்து பேச வந்தாலும் வரலாம். யாரை திருப்பி அனுப்பறதுன்னு இனிமேதான் முடிவு பண்ணனும்.


""மறக்க முடியாத காட்சிகள்''– வளரும் நடிகர் ராமதாஸ்

நான் நடிச்ச பல காட்சிகளை என்னாலே மறக்க முடியாது. குறிப்பா, "நான் சொன்னா கேட்டுக்கணும்' படத்திலே எங்க ஆளுங்களோட, டாஸ்மாக் கடைகளுக்குப் போய், "தயவு செஞ்சு மூடுங்க'ன்னு கெஞ்சுவேன். மூடமாட்டாங்க. மரியாதையா கடையை மூடுங்க'ன்னு எச்சரிப்பேன். அப்பவும் மூடமாட்டாங்க. கோபம் வந்து நானே கடைக்கு பூட்டுபோட்டு, மறுநாள் திறந்து விட்டுட்டு மறுபடியும் கெஞ்சுவேன். அப்படியும் வியாபாரம் நிக்காது. அதுக்காக லட்சியத்தை விட்டுட முடியுமா? கடையை அடிச்சு நொறுக்கிட்டு, அதுக்கப்புறம் கால்லே விழுந்து "வேண்டாம்.... என் பேச்சைக் கேளுங்க'ன்னு கேட்டுக்குவேன். அப்பவும் மூடமாட்டாங்க. கலெக்டரை மூடச் சொல்வேன். பெண்களை மூடச் சொல்வேன். "யாராவது மூடுங்களேன்'னு கத்துவேன். யாரும் மூடமாட்டாங்க. சரி, பத்து மணியிலேர்ந்து ஆறு மணி வரைக்கும் மட்டும் வியாபாரம் நடத்தித் தொலைங்க'ன்னு சொல்லிட்டு வேடிக்கை பார்ப்பேன். அந்தக் காட்சியை எத்தனை தடவை பார்த்தாலும் அலுப்புத் தட்டாது.

"மகனே உன் சமர்த்து'ன்னு ஒரு படம். ஹீரோ அன்புமணிக்கும் ஒரு பெரிய வில்லனுக்கும் சண்டை வருது. யாரும் அன்புமணிக்கு ஆதரவா வரமாட்டாங்க. எல்லார் கிட்டேயும் நான் தனி ஆளாவாதாடுவேன். ஆனா யாரும் பதில் சொல்லாம நக்கலா சிரிப்பாங்க. என் உருக்கமான நடிப்பைப் பார்த்து எனக்கே அழுகை வந்தது. அன்புமணிக்கு நிச்சயமா ஆஸ்கார் விருது கிடைக்கத்தான் போகுது. கிடைக்கலைன்னா விடமாட்டேன்.

இப்ப நான் ஒரு முடிவெடுத்துட்டேன். ஒப்பந்தப்படி கலைஞரோட படங்களிலே நடிச்சுக் கொடுத்த பிறகு, 2011லேர்ந்து நானே சொந்தமா படமெடுத்து ஹீரோவா நடிக்கப் போறேன். அப்புறம் பாருங்க என் நடிப்பை.

கழக ஸ்டார் கலைஞர் பதிலளிக்கிறார்

கேள்வி : கழக ஸ்டார் கலைஞர் அவர்களே! குடும்பப் படங்களிலே மட்டும் நீங்க அதிகமா சோபிக்கிறீங்களே. அது ஏன்?

கலைஞர் : விஷமத்தனமா கேக்கறீங்க! "சென்னை கார்ப்பரேஷன்' படத்திலே அமைதியான வில்லனா நான் எவ்வளவு அட்டகாசமா பண்ணியிருந்தேன்னு ராமதாஸ், வரதராஜன், தா.பாண்டியனைக் கேட்டுப் பாருங்க. நினைச்சா அதிருதுல்ல? அவ்வளவு ஏன்? "பந்த் அல்ல உண்ணாவிரதம்' முழு நீள காமெடி படத்திலே, என் நடிப்பைப் பார்த்து நாடே சிரித்து மகிழ்ந்ததே. அதையெல்லாம் மறந்துட்டு குடும்பப் படத்துக்குத்தான் நான் லாயக்குன்னு முத்திரை குத்தறது என்ன நியாயம்?

கேள்வி : என் மனம் கவர்ந்த டாப் ஸ்டார் அவர்களே! நீங்கள் நடித்த படங்களில் உங்களுக்குப் பிடித்தது எது?

கலைஞர் : நான் குழந்தை நட்சத்திரமா சற்றொப்ப 14 வயதிலிருந்தே நடித்து வருகிறேன். இருந்தாலும், இலங்கைப் பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட "தமிழனாகிய நான்' படத்தில் தமிழ் வீரனாகவும், அமைதியே வடிவான அப்பாவியாகவும் இரட்டை வேடத்தில் தோன்றி, என்னுடைய முத்திரையைப் பதித்திருப்பேன். லட்சக்கணக்கான ரசிகர்களை எனக்கு உருவாக்கித் தந்த படம் அது.

கேள்வி : புகழின் உச்சியில் இருக்கும் கழக ஸ்டாரே! உங்களுக்கு புகழ் தந்த படம் எது?

கலைஞர் : நானே திரைக்கதை எழுதி இயக்கித் தயாரித்த "சட்டமன்றப் பொன்விழா' படம்தான். ஒரு பெரும் தலைவரை நாடு எப்படியெல்லாம் பாராட்டுகிறது என்பதுதான் கதை. அப்படம் வெளிவர விடாமல் செய்யப்பட்ட சதிகளை முறியடித்து ரிலீஸ் ஆனபோது பலர் வயிறு எரிந்தார்கள். அதுதான் அப்படத்தின் வெற்றி.

கேள்வி : கழக ஸ்டார் அவர்களே! கதாசிரியர் என்ற முறையில் நீங்கள் மிகவும் ரசித்து எழுதிய வசனம் எது?

கலைஞர் : "சத்தம் போடாதே' படத்திலே கௌரவ நடிகர் வெற்றிகொண்டான் ஒரு காட்சியில் ராமதாஸைத் தாக்கி, நாக்கைப் பிடுங்கிக்கொள்கிற மாதிரி, வசனம் எழுதியிருந்தேன். ரசிகர்களுக்குத் தெரியாமல் மாறுவேடத்தில் தியேட்டருக்குப் போய், அந்தக் காட்சியில் மக்கள் எப்படி கை தட்டுகிறார்கள் என்று பார்த்து ரசித்தேன். மறுபடியும் அப்படி வசனம் எழுதுகிற வாய்ப்பு கிட்டாமலா போய்விடும்?

"என்னை உருவாக்கிய டைரக்டர்' – குணச்சித்திர நடிகர் மன்மோகன் சிங்

ஆரம்ப காலத்திலே எனக்கு நடிப்பெல்லாம் அவ்வளவா வராது. இருந்தாலும் டைரக்டர் சோனியாதான், "உங்க மேலே எனக்கு நம்பிக்கை இருக்குது. நான் சொல்றபடி செய்யுங்க. அது போதும்'னு ஊக்கம் கொடுத்து ஹீரோவா அறிமுகப்படுத்தினாங்க. ஆனா, சில சமயங்களிலே ஷூட்டிங் நடக்கிற இடத்துக்கு லாலு பிரசாத் யாதவ், பரதன், கராத், ராகுல் காந்தி, டி.ஆர். பாலுன்னு ஆள் ஆளுக்கு வந்து டைரக்ட் பண்ணும்போது, கொஞ்சம் வருத்தமா இருக்கும். ஆனா, வருத்தத்தைக் காட்டிக்க மாட்டேன். காட்டி என்ன பிரயோஜனம்? சொல்றதைச் செய்யறதுதானே நம்ம வேலை?

அன்னையின் ஆணை' படத்திலே, வில்லன் க்வாட்ரோச்சி என் எதிர்லேயே ஜெயில்லேர்ந்து தப்பி ஓடுவாரு. நான்தான் இன்ஸ்பெக்டர். "பார்த்து மெதுவா போங்க ஸார்'னு நான் அவருக்கு விஷ் பண்ணி அனுப்பணுமே தவிர, பிடிக்க முயற்சிக்கக் கூடாது. கதை அப்படித்தான் போகணும்னு டைரக்டர் சொல்லிட்ட பிறகு நான் என்ன பண்ண முடியும்? என் ஹீரோ இமேஜ் பாதிக்கப்பட்டாலும், படம் எதிர்பார்த்தபடி வந்ததேன்னு டைரக்டருக்கு திருப்தி. அவங்க திருப்திதானே என் திருப்தி!

"அணுவும் அமெரிக்காவும்'னு ஒரு படத்திலே எனக்கு மெயின் ரோல் கொடுத்திருக்காங்க. ரொம்ப வித்தியாசமான முறையிலே சில இடங்களிலே வீரமா வசனம் பேசியிருக்கேன். ஆனா ஃபைட்டிங் கிடையாது. வாய் வீரம் மட்டும்தான். படம் ரிலீஸாகும்போதுதான் என் சம்பந்தப்பட்ட ஸீன் எல்லாம் படத்திலே இருக்குமா, டைரக்டர் கட்பண்ணிட்டாரான்னு தெரியும். சோனியா எனக்கு தொடர்ந்து ஹீரோ சான்ஸ் கொடுப்பாங்கன்னு நம்பிக்கை இருக்குது. எங்க டைரக்டர் சோனியா இல்லைன்னா நான் இல்லை.

துக்ளக் - சத்யா

Wednesday 7 November 2007

Namitha , க்ளைமாக்ஸ் ஜுரம்!

'ரயில் நிலையத்தில் க்ளைமாக்ஸ் வைத்தால் அந்த படம் பெரிய வெற்றி பெரும்' இப்படி போகிற போக்கில் ஊதிவிட்டு போகிற சில புண்ணியவான்களின் கருணையால் ரயில்வே துறைக்கு அமோக விளைச்சல்!

பதினாறு வயதினிலே தொடங்கி, இதயம் உள்ளிட்ட பல்வேறு படங்களின் வெற்றியை இதற்கு உதாரணமாக காட்டியதால், ஹீரோவோ, ஹீரோயினோ வலுக்கட்டாயமாக ரயில்வே ஸ்டேஷனில் பிரிந்து, பின் அபாயசங்கலியின் உதவியுடன் ரயிலை நிறுத்தி, ஒன்று சேர்வார்கள்! ஊருக்கு போகிற ஹீரோயின் பஸ்சில் ஏறி போனால் என்ன என்று எந்த ரசிகனும் இயக்குனர்களை கேட்டதாக வரலாறே இல்லை. அதுமட்டுமல்ல... இந்த ரயில் போய்விட்டால் அவ்வளவுதான். வாழ்க்கையே போச்சு என்று தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு போகிற ஹீரோக்கள், அடுத்த ரயில் பிடித்து ஹீரோயின் வீட்டுக்கு போனால் என்ன என்றும் யோசித்தது இல்லை. போகட்டும் விடுங்கள்...

ரயில் சம்பந்தப்பட்ட படப்பிடிப்புகளில் எப்படிப்பட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. இனிமேல் ரயிலின் கூரை மேல் சண்டை போடுவது, படியில் அமர்ந்து கொண்டு பயணம் செய்வது போலவோ, படிகளில் தொங்கிக் கொண்டு செல்வது போலவோ காட்சிகள் எடுக்கக்கூடாது என்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. படப்பிடிப்புக்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும் போதே படத்தின் கதை சுருக்கத்தையும் காட்சி விளக்கத்தையும் கொடுக்க வேண்டுமாம். (கதை சுருக்கமா? அதை தயாரிப்பாளர்களுக்கே காட்டுவதில்லையே பல இயக்குனர்கள்?) இப்படி பல கெடுபிடிகளை விதித்திருக்கும் ரயில்வே துறை, சென்னை போன்ற பெரு நகர ரயில்வே நிலையங்களில் படப்பிடிப்பு நடத்த ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் நிர்ணயித்துள்ளது.

பெரிய தயாரிப்பாளர்கள் என்றால் ஓ.கே! சின்ன தயாரிப்பாளர்கள் இனிமேல் நல்ல பஸ் நிறுத்தமாக பார்த்து க்ளைமாக்சை வைத்துக் கொள்ள வேண்டியதுதான்!


ஆர்ஜுன், CaptainVijayakanth நடிகர்கள் பாடு திண்டாட்டம்தான்


நமிதா படம் எதுக்குனு கேட்கப்படாது, எல்லாம் ஒரு விளம்பரம் தான்.

தமிழ் சினிமா.com

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Sunday 4 November 2007

இந்திய திரையில் முதன் முறையாக Tomb Raider & Charlies Angel

தீபாவளி சிறப்பு








இது Lara Croft Tomb Raider பார்த்த பாதிப்பு














இது நேற்று Charlie's Angel பார்த்ததின் பாதிப்பு





















இன்னும் ஒரு கிளி (sorry angel) அட படத்துல அப்படித்தான் சொல்லுவாங்க,
யாருங்கறது உங்க Choice...முடிஞ்சா சொல்லுங்க

Friday 26 October 2007

அம்பு குறி இட்ட இடத்தை பார்க்கவும்!


எழுத்தறிவில்லாத ஒருவன் மன்னரின் முன் சென்று கன்னா, பின்னா, மன்னா, தென்னா என்று கூறினானாம். அதை கேட்ட மன்னன் அவனை பெரும் புலவர் என்று கருதி பொன்னையும் பொருளையும் அள்ளிக் கொடுத்து அனுப்பினானாம். மன்னன் ஏன் அவ்வாறு செய்தான்? கன்னா என்பதற்கு கண்ணனே என்றும், பின்னா என்பதற்கு கண்ணனுக்கு பின்னால் வந்தவனே என்றும், மன்னா, தென்னா என்பதற்கு தென் நாடே போற்றுகின்ற மன்னனே என்றும் அர்த்தம் கொண்டானாம் மன்னன்.

நகைப்புக்குரிய இந்த விஷயம் எந்த காலத்திலோ நடந்தது என்றுதானே நினைக்க தோன்றுகிறது. அதுதான் இல்லை. இப்போதும் அப்படிப்பட்ட புண்ணியவான்கள் இருக்கிறார்கள். ரஜினி ஒரு விழாவில் யதார்த்தமாக விரலை ஒரு நாட்டிய முத்திரையில் வைத்திருக்க, அதற்கு பொழிப்புரை, பதவுரை, முகவுரை, முன்னுரையெல்லாம் எழுத ஆரம்பித்திருக்கின்றன நமது பத்திரிகைகள். ரஜினி பிடித்திருப்பது 'சோடிகா முத்திரை' என்கிறார் ஒரு சிவாச்சாரியார்.

கட்டை விரல் பரமாத்மா, சுட்டுவிரல் ஜீவாத்மா, ஜீவாத்மாவும் பரமாத்மாவும் இணைய வேண்டும் என்பதைதான் ரஜினி அப்படி உணர்த்தினார் என்கிறார் இன்னொரு சிவாச்சாரியார். அடக்கடவுளே... உங்களை பற்றி அந்த ரஜினிதான் என்ன நினைப்பார்? சும்மா பொடி போடுற ஞாபகம் வந்தது. விரலை அப்படி வச்சிருந்தேன். அடப்பாவிகளா, அதுக்குகூட கதை எழுதிட்டீங்களே என்று சிரிப்பாரோ?!
தமிழ்சினிமா.com

Wednesday 24 October 2007

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க


வாழை மரம் வடக்குப் பக்கமா தார் போடணும். வேற திசையில தார் போட்டுச்சுனா, அந்த வீடு அவ்வளவுதான்; வெளங்காதுன்னு சொல்றது சம்பிரதாயம். இது உண்மையா? வாழை மரத்துக்கும், வீடு வெளங்கறதுக்கும் என்ன சம்பந்தம்? விளக்கமா தெரிஞ்சுக்கலாமா...

உண்மை என்னன்னா... இது விவசாயத்தோடு சம்பந்தப்பட்டது. வாழை பயிரிடுவதற்கு தகுந்த காலமா, ஆடி மாசத்தைச் சொல்வோம். ஆடிப் பட்டம் தேடி விதைனு சொல்வாங்களே! அப்ப அடிக்கற காத்தை ஆடிக் காத்துன்னு சொல்வாங்க. அதையே இன்னொரு விதமா& தென்மேற்குப் பருவக் காத்துனும் சொல்வோம். இந்தக் காத்து ஒழுங்கா வீசினால், நாடு வளமா இருக்கும். இது முறையா வீசுதா இல்லையானு நமக்கு எப்படித் தெரியும்? ஆடிக் காத்து ஒழுங்கா வீசுனா, வாழை மரம் வடக்குப் பார்த்துத் தார் போடும். அதை வெச்சு ஆடிக் காத்து நல்லா வீசுது; பயிர் பச்சையெல்லாம் நல்லா விளையும்னு தெரிஞ்சுக்கலாம். அப்படி இல்லாம வாழை மரம் வேற திசையில் தார் போட்டுச்சுனா, ஆடிக் காத்து சரியா அடிக்கலை; பயிர் பச்சைங்க ஒழுங்கா விளையாது, உணவுப் பண்டங்களுக்குத் திண்டாட்டம்னு தெரிஞ்சுக்கலாம்.
ஆக, வாழைத் தார் விஷயம்& விவசாயத்துக்காகச் சொல்லப்பட்டது. இதைச் சொல்லி வெச்ச பாட்டன், பூட்டனை எல்லாம் நிக்க வெச்சு, சுத்தி வந்து தரையில விழுந்து நாம நமஸ்காரம் செய்யணும். ஆனால், நாம உண்மை தெரியாம இந்த விஷயத்தை வீட்டோட தொடர்புபடுத்தி, நாமும் குழம்பி அடுத்தவங்களையும் குழப்பறோம்.

இதே மாதிரி வீட்டுத் தோட்டத்துல ஆமணக்கு வளர்க்கக் கூடாதுனும் சொல்வாங்க. வளர்த்தால், அதன் காய் வெடிச்சுச் சிதறுவதைப் போல, அந்தக் குடும்பமும் வெடிச்சுச் சிதறிடும்பாங்க. இதுல என்ன இருக்குனு பாக்கலாமா?
பொதுவா, வெடிச்சுப் பரவும் விதைகள் கடினமா இருக்கும். ஆனால், ஆமணக்கு விதைகள் இளகின தன்மை கொண்டதா இருக்கும். வெயில் ஏற ஏற, முற்றிய ஆமணக்குக் காய்கள்லாம் வெடிச்சு, விதைகள் இறைஞ்சு கெடக்கும்.
விஷத் தன்மையோட பளபளப்பா இருக்கற அந்த விதைகளை, குழந்தைகள் எடுத்து வாயில போட்டா, என்னாகும்? விபரீதம்தான்! அதனால இதை வீட்டுத் தோட்டத்துல வளர்க்கக் கூடாதுனு சொன்னாங்க! சரி, வாங்க... அடுத்த கேள்வியைப் பார்க்கலாம்!

இதுவும் நம்ம சம்பிரதாயத்துல சொல்லப்படுற தகவலைப் பற்றிய கேள்விதான்... ‘வீட்டுல புறா வளர்க்கக் கூடாது; வளர்த்தால், புறாக்கள் எழுப்புற ‘கும்கும்’ சத்தத்தால, குடும்பம் வளராது; நசிஞ்சுடும்கறது உண்மையா?’னு கேட்டிருக்காங்க.

புறாவை வீட்டில் வளர்க்கக் கூடாதுங்கறது சரிதான். ஆனா, புறாக்களோட சத்தத்துக்கும், நம்ம குடும்பத்துக்கும் எந்த விதமான சம்பந்தமும் கெடையாது. புறாக்களோட கழிவு வாடை, பாம்புங்களைக் கவர்ந்து இழுக்கும். பகுதி & 28 படிக்க பகுதி & 29 படிக்க மேலும் படிக்க...

அதனால புறாக் கூண்டுக்கு வரும் பாம்புகள், அங்க இருக்கற புறா முட்டைகளை உடைச்சுக் குடிச்சுட்டு, கூண்டுக்குள்ளேயே மயங்கிச் சுருண்டு படுத்துக்கும். வெவரம் தெரியாம நாம புறாக் கூண்டு கிட்டப் போனால், ‘இவன் தன்னைத்தான் அடிக்க வர்றான்’னு நெனச்சு, பாம்பு நம்மளப் போட்டுத் தள்ளிடும். அப்புறம் கதை கந்தல்தான்!

இப்படி பாம்பு கீம்புனு சொல்லி, நம்மள பயப்படுத்தக் கூடாதுங்கறதால, புறாக்களோட சத்தம் குடும்பத்துக்கு ஆகாதுனு டெக்னிக்கலா சொல்லி வெச்சாங்க!’’ என்ற தாத்தா அடுத்த கேள்விக்குத் தாவினார்.

‘‘அடுத்த கேள்வியும் சூப்பர்! ‘உச்சி வேளையில கிணத்துக்குள்ள எட்டிப் பார்க்கக் கூடாது. பார்த்தால், பேய் அடிச்சு கிணத்துக்குள்ள தள்ளிடும்னு, ஊர்ப் பக்கம் சொல்றாங்களே... அது உண்மையா?’ங்கிறது கேள்வி.

மொதல்ல பேய்& பிசாசைத் தூக்கி ஓரமா போடுங்க. இல்லாட்டி, அந்தக் கெணத்துக்குள்ளேயே தூக்கிப் போட்ருங்க! பேய் பயத்தை விட்டுட்டு, கேள்விக்கான பதிலை நம்ம வழிப்படி பார்க்கலாம்!

கெணறுகள்ல அதுவும் நாம உபயோகப்படுத்தாத கெணறுகள்ள விஷ வாயுங்கற நச்சுக்காத்து உருவாகும் வாய்ப்பு உண்டு. உச்சி வெயில் நேரத்துல, சூரியக் கதிர்கள் நேரா கெணத்துல பாயும். சூடுபட்ட பால் பொங்கற மாதிரி, சூரியச் சூட்டுல, கெணத்துல இருக்கற விஷ வாயு பொங்கி மேலே வரும். அப்ப நாம கெணத்துக்குள்ளே எட்டிப் பார்த்தோம்னா விஷ வாயு தாக்கி, நாம அப்படியே அந்தக் கெணத்துக்குள்ள விழ வேண்டியதுதான்! இந்த மாதிரி விஷ வாயு தாக்கி இப்படி நடந்துச்சுனு அடிக்கடி செய்தித் தாள்கள்ல படிச்சிருப்பீங்களே...

இந்த விபரீதம்லாம் வேண்டாம்னுதான் நம்ம முன்னோர் விஞ்ஞானபூர்வமான தகவலை, இப்படி ஒரு நம்பிக்கையா சொல்லி வெச்சாங்க’’ என்ற தாத்தா குஷியாகத் தொடர்ந்தார்.
விகடன்.com

Sunday 21 October 2007

நாட்டின் முக்கிய இடை தேர்தல்

நாட்டில் இடைத்தேர்தல் வருவது பற்றி பேசிக்கொண்டிருக்கும் காலம். இடைத் தேர்தல் வந்தால் யார் வெற்றி பெறுவார்கள் என்று, சென்னை மக்களிடையே ஒரு மினி கருத்தெடுப்பு நடத்தினோம்.
வெற்றி பெற்றது யார் தெரியுமா? அசின். நாற்பத்திரண்டு சதவிகித ஓட்டுக்கள்.
புரிந்திருக்குமே. நாம் நடத்தியது அரசியல் இடைத்தேர்தல் கருத்துக் கணிப்பு அல்ல. நடிகைகளின் இடை களைப் பற்றிய கருத்துக் கணிப்பு.

எங்கிருந்து சார் உங்களுக்கு இந்த மாதிரி ஐடியாவெல்லாம் வருது. இதுக்குன்னே ரூம் போட்டு யோசிப்பீங்களா? என்று கேட்ட கடற்கரை பஞ்சு மிட்டாய் வியாபாரி முத்துவுக்குப் பிடித்த இடை நமீதாவுடையதாம். வெட்கமாய்ச் சிரிக்கிறார்.

அசினுக்கு அடுத்து இடையில் ரசிகர்களை இழுத்திருப்பது ஸ்ரேயா. இருபத்துநான்கு சதவிகிதத்தினர். மூன்றாவது இடம் நயன்தாராவுக்கு, இருபது சதவிகிதம். நான்காவது இடத்துக்கு த்ரிஷா வந்து விடுகிறார். ஒன்பது சதவிகிதம் ஓட்டுக்கள். மிச்சமிருக்கும் ஓட்டுக்களை இரண்டு பேர் பங்கு போட்டுக் கொள்கிறார்கள் நமீதாவும், சினேகாவும். கருத்துக்கணிப்பில் பல இளைஞர்கள் ஸ்ரேயாவைக் குறிப்பிட்டாலும் ஓட்டுப் போடும்போது அசினுக்குப் போடுகிறார்கள்.

அசின் அம்சமான அழகு சார். மாத்திப்போட மனசில்லை என்று சொல்கிறார், திருவல்லிக்கேணியில் தங்கியிருக்கும் பிரம்மச்சாரி வேல். இப்படி அசினுக்கு நிறைய சப்போர்ட்.

ரொம்ப ஒல்லியாய் இருப்பதாலோ என்னவோ த்ரிஷாவுக்கு ஓட்டுக்கள் அதிகம் விழவில்லை. அதேபோல் சினேகாவுக்கும்.

சினேகாவும் த்ரிஷாவும் ரொம்ப அழகு சார். ஆனால் இடைனு வரும்போது அவங்களைச் சொல்ல முடியலை என்கிறார், மயிலாப்பூரிலிருக்கும் இளம் குடும்பத்தலைவி சௌம்யா.

கல்லூரி மாணவர்களுக்கு நமீதாவின் இடை பிடித்திருக்கிறது. கல்லூரி மாணவிகளுக்கு த்ரிஷாவைப் பிடித் திருக்கிறது. ஆனால் மொத்த ஓட்டுக்களில் முந்தியது அசின்தான்.

கவர்ச்சியும் இருக்கிறது. குடும்பப் பெண் லுக்கும் இருக்கிறது. தமிழ் சினிமாவில் இப்படியொரு நடிகையைப் பார்ப்பது அரிது என்று மனம் மகிழ்ந்து சொல்கிறார் புகழேந்தி. ஆட்டோ மொபைல் வொர்க் ஷாப் வைத்திருக்கிறார்.

இந்தக் கருத்துக் கணிப்பில் ஒரு ஆச்சர்யம் இருக்கிறது. நம்மிடம் பேசிய எல்லோரும் மறக்காமல் ஒரு நடிகையைக் குறிப்பிட்டார்கள்.
என்ன இருந்தாலும் அவங்களோட இடையைப் போல் வராது. நடனமாடும் போது எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா? என்பதுதான் பலரது கமெண்ட்.
அந்த நடிகை. சிம்ரன்!.

குமுதம்.com

Monday 15 October 2007

ராமதாஸ், கருணாநிதி, ஜெயலலிதா - துணுக்ஸ்

தொண்டர்களின் ரத்தத்தைக் குழைத்து, எலும்புகளை செங்கற்களாக மாற்றி கட்டப்பட்டதுதான் அண்ணா அறிவாலயம்.

– கருணாநிதி
பயங்கரமாக இருக்கிறதே! இப்படி கட்டிடம் கட்டுவதற்கு, எந்த பொறியியல் கல்லூரியில் படித்து பொறியாளராக வேண்டும்?

தி.மு.க. அரசைக் கவிழ்க்க வேண்டும் என்று சொல்ல, ஜெயலலிதாவுக்கு எந்தத் தகுதியும் இல்லை.
– ராமதாஸ்
தனக்குத்தான் அந்தத் தகுதி இருக்கிறது என்று நினைக்கிறாரா?

விஜயகாந்த் கட்சியில் சேருபவர்கள் எல்லாம் கழிசடைகள்.
– எம்.ஆர்.கே.
பன்னீர்செல்வம் அதனால் என்ன? அவர்கள் கட்சி மாறி தி.மு.க.வில் சேர முன்வந்தால், "நீங்கள் இருக்க வேண்டிய இடமே இதுதான்' என்று கூறி கலைஞர் பாசத்துடன் சேர்த்துக்கொள்ள மாட்டாரா என்ன?

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி மலரும்போது, நிச்சயமாக திருப்பூர் குமரன் பற்றிய திரைப்படம் எடுக்கப்படும்.
– ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
இந்த கிண்டல்தானே வேண்டாம் என்பது? படம் எடுக்க இஷ்டமில்லையென்றால் நேரடியாகச் சொல்லலாமே?

கல்விக் கொள்ளைகள் தொடர்பாக, தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன...? – ராமதாஸ்
"எதற்கும் ஒரு எல்லை உண்டு' என்று முதல்வர் அப்போதே எச்சரித்துவிட்டாரே! அது நடவடிக்கை இல்லையா?


துக்ளக்

Tuesday 9 October 2007

புஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.........

‘சொர்க்கத்தின் வாசலில்’ அன்று ஏகப்பட்ட கூட்டம். வாசலில் நின்று கொண்டிருந்த கடவுளின் ஏஜெண்ட் ஒவ்வொருவரையும் யார் என்று விசாரித்த பிறகே உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார்.

முதலில் எதிர்ப்பட்ட ஐன்ஸ்டீனிடம்.....”நீங்கள்தான் உண்மையான ஐன்ஸ்டீன் என்பதை எப்படி நம்புவது? நிரூபித்துக் காட்டுங்கள்’’ என்று கூற....

”எனக்கொரு கரும்பலகையையும், சாக்பீசையும் கொடுங்கள். நிரூபித்துக் காட்டுகிறேன்’’ என்றார் ஐன்ஸ்டீன். இரண்டும் கொடுக்கப்பட்டது.
ஆற்றல்....நிறை....என ஏதேதோ கணக்குப் போட்டு தான் கண்டுபிடித்த E-MC2 என்கிற ஃபார்முலாவை நிரூபித்துக் காட்ட.... “அட...நீங்க உண்மையிலேயே ஐன்ஸ்டீன் தான். உள்ளே போங்கள்’’ என்று வழிவிட்டார் கடவுளின் ஏஜெண்ட்.
அடுத்து வந்தவரோ உலகப் புகழ் பெற்ற ஓவியர் பிக்காஸோ. அவரையும் நிரூபித்துக் காட்டச் சொல்ல... பிக்காஸோ கரும்பலகையில் முன்னர் ஐன்ஸ்டீன் எழுதியிருந்த சூத்திரத்தை அழித்துவிட்டு வரையத் தொடங்கினார். அவர் வரைந்த அற்புதமான ஓவியங்களைப் பார்த்ததும் மகிழ்ச்சிப் பெருக்கில் அப்படியே கட்டித் தழுவி.... ”நீங்க மாபெரும் கலைஞர் பிக்காஸோதான். நம்புகிறேன். உள்ளே போங்கள்’’ என்று வழி விட்டார் கடவுளின் ஏஜெண்ட்.

அடுத்து வந்து நின்றவர் மற்றவர்களைப் போல் இல்லை. அவர் ஒரு மகா மேதை.

ஆனால் அவரோ காவலுக்கு நின்றவரைத் தள்ளிவிட்டுவிட்டு உள்ளே போக முயற்சிக்க....

“முதலில் நீங்கள் யாரென்று சொல்லி நிரூபியுங்கள். அப்புறம் அனுமதிக்கிறேன்’’ என்று கடவுள் ஏஜெண்ட் கடுப்புடன் கூற....

“நான் தான் ஜார்ஜ் புஷ்’’ என்றார் புஷ்.

“சரி நீங்கள் தான் ஜார்ஜ் புஷ் என்பதை எப்படி நம்புவது? உங்கள் அறிவுத் திறமையால் உங்களை நிரூபித்துக் காட்டுங்கள்’’ என்றார் க.ஏ.

“எப்படி நிரூபிப்பது?’’ என்று மீண்டும் புஷ் கேட்க...

“உங்களுக்கு முன்பு வந்த ஐன்ஸ்டீனும்....பிக்காஸோவும் எப்படி நிரூபித்தார்களோ அப்படி’’ என்றார் கடவுளின் ஏஜெண்ட்.

“அது சரி, யார் அந்த ஐன்ஸ்டீனும்.....பிக்காஸோவும்?’’ என்றார் ஜார்ஜ் புஷ்.

“இம்புட்டு “அறிவு’’ இருக்குன்னா....சந்தேகமேயில்லை நீங்க ஜார்ஜ் புஷ்ஷேதான். உள்ளே போங்கள்’’ என்று கதவுகளை அகலத் திறந்துவிட்டபடி வெளியில் குதித்தோடினார் கடவுளின் ஏஜெண்ட்.

குமுதம்.com

மல மல மல மலைக்கோட்டை

ஊருக்குள் ஒரு தாதா. வெளியூரிலிருந்து ஒரு இளைஞன் வருகிறான். இப்போது உங்களுக்கு கதை புரிந்திருக்குமே. அதேதான்.

தமிழ் சினிமாவில் சில காட்சிகளை ஐந்து வருடங்களுக்குத் தடை செய்ய வேண்டும்.




வில்லன் காரிலிருந்து இறங்கும்போது, கீழ்க் கோணத்திலிருந்து காலையும் காரையும் திரை முழுக்க காட்டுவது. புவி ஈர்ப்பு விதிகளை மீறி பறந்துகொண்டே சண்டை போடுவது...

நூறு பேர் வந்தாலும் ஹீரோ ஒரே அடியில் வீழ்த்துவது. விழுபவர்கள் எல்லோரும் காய்கறி வண்டியில் விழுவது...


மற்றவர்களை சுட கிடைக்கும் துப்பாக்கி, ஹீரோ வரும்போது மட்டும் ஒளிந்துகொள்வது...


‘மலைக்கோட்டை’யில் இதுபோன்ற காட்சிகள் மலிந்து கிடக்கின்றன.

ஆக்ஷன் படங்கள் இரண்டு ரகம்.

திரையில் ஹீரோ வில்லன்களைத் துரத்தி, புரட்டி எடுக்கும் போது நாமும்கூட சேர்ந்து புரட்ட வேண்டும் என்ற எண்ணம் வர வைப்பது ஒரு ரகம்.

திரையில் ஹீரோ, வில்லன்களை அடிஅடியென்று அடித்துக்கொண்டிருக்கும்போது எப்போது அவர் அடித்து முடிப்பார், வீட்டுக்கு கிளம்பலாம் என்பது இன்னொரு ரகம்.

மலைக்கோட்டை இரண்டாவது ரகம். இப்ப இருக்கற முக்காவாசி ஆக்ஷன் தமிழ் படம் இரண்டாவது ரகம்.
குமுதம்.com

Sunday 7 October 2007

காதல் means, this is it































என்னங்க நா Ready, நீங்க Ready ?
எல்லாம் பாராட்டி / காரி துப்பத்தான்
Ready ஜுட்ட்..............




Friday 5 October 2007

அமெரிக்காவில் ஒரு பகுத்தறிவாளர் ! – எஸ். குருமூர்த்தி

அமெரிக்க குட்டி கருணாநிதிக்கு நேர்ந்த கதி – ஒரு உண்மைக் கதை. நம் நாட்டில் பெரும்பாலான மக்கள், தங்களைப் பற்றியும், நம் நாட்டைப் பற்றியும் தாழ்வான எண்ணங்கள் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் மற்ற நாடுகளைப் பற்றி உயர்வாகவும் நினைக்கிறார்கள். இப்போது வெளிவந்திருக்கும் ஒரு அமெரிக்கச் செய்தி, நம்முடைய கவனத்திற்குரியது.

அமெரிக்காவின் ஒரு "பகுத்தறிவாளர்' செய்திகளில் வெளிப்பட்டார். அவருடைய பெயர் ஸ்டீவ் பிட்டர்மேன். அவர் அமெரிக்காவின் 50 மாநிலங்களில் ஒன்றான ஐயோவா மாநிலத்தில் உள்ள, "ரெட் வோக்' என்கிற குட்டி நகரத்தில் உள்ள ஒரு கல்லூரியின் பேராசிரியர். அந்தக் கல்லூரி அரசு உதவியுடன் நடக்கும் கல்விக் கூடம்.

ஈரோடில் கருணாநிதி கீமாயணம் துவங்கிய மூன்றாம் நாள் – செப்டம்பர் 18ஆம் தேதி – பிட்டர்மேன் தன்னுடைய மாணவர்களுக்காக மேற்கத்திய கலாச்சாரம் பற்றிய வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார். வகுப்பு முடிந்த பிறகு மாணவர்களிடம் அவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவனிடம் அவர் பைபிளின் முதல் பகுதியான பழைய ஏற்பாட்டில் இடம் பெறும், முதல் ஆண் – பெண் ஜோடியான ஆதம் ஏவாள் பற்றி குறிப்பிட்டு, ""இந்த ஜோடி பற்றிய பைபிள் கதையை அப்படியே நம்பிவிடக் கூடாது'' என்று கூறினார். இந்தப் பேச்சு, தன்னுடைய மதத்தை இழிவுபடுத்துவதாகும் – எனக் கூறி, "நான் உடனேயே வக்கீலிடம் சென்று உங்கள் மேல் வழக்குத் தொடர வழி செய்கிறேன்' என்று அவரை எச்சரித்தான் அந்த மாணவன்.

அவருடைய இந்த விளக்கம் ஐயோவா மாநில டெலிவிஷன் இணைப்பு மூலமாக, இதர மாணவர்களுக்கும் ஒளிபரப்பப்பட்டதால், மேலும் பல மாணவர்களும் "தங்கள் மத உணர்வுகளை அந்தப் பேராசிரியர் இழிவு செய்தால், அவருக்கு எதிராக வழக்கு தொடர்வோம்' என்று குரல் கொடுத்தனர்.
ஆதம்ஏவாள் கதை ஒரு கற்பனை என்று கூட அவர் கூறவில்லை; அவர் பைபிளின் "பழைய ஏற்பாட்டை' மத அடிப்படையில் இல்லாமல், கல்வி முறையில் விளக்கினார் என்று செய்திகள் கூறுகின்றன. பகுத்தறிவாளர் ஸ்டீவ் பிட்டர்மேன் இப்படி பேசிய 48 மணி நேரத்துக்குள் டெலிஃபோன் மூலமாக பேராசிரியர் பதவியிலிருந்து "டிஸ்மிஸ்' செய்யப்படுகிறார். அந்தக் கல்லூரியின் கல்வித்துறை துணை முதல்வர் லிண்டா வைலட், அவருக்கு டெலிஃபோன் செய்து பதவியிலிருந்து "கல்தா' கொடுக்கிறார்.
"இப்படிப்பட்ட புகழ்பெற்ற, அரசு நடத்தும் சமுதாயக் கல்லூரியிலா, இதுபோன்ற நியாயமற்ற கேட்பாரற்ற நடவடிக்கை? என்று ஆடிப் போய்விட்டார், அமெரிக்காவின் பகுத்தறிவாளர். அரசியல் சாசனத்தில் பேச்சுரிமைக்குப் பெயர் போன நாடாயிற்றே அமெரிக்கா! அங்கு எப்படி இப்படி... என்று அந்தக் கல்லூரியின் அதிகாரிகளிடம் பத்திரிகையாளர் கேட்டபோது, அவர் கொடுத்த ஒரு வரி இதுதான். ""நாங்கள் செய்தது – பிட்டர்மேனை டிஸ்மிஸ் செய்தது – பேச்சு சுதந்திரத்திற்கு விரோதமானதல்ல. அதற்கு அர்த்தம், பிட்டர்மேன்தான் பேச்சுரிமை வரம்புகளை மீறி பேசியிருக்கிறார்''.

""எப்படி அந்தப் பேராசிரியரை பதவி நீக்கம் செய்யலாம்? பைபிள் ஒரு கட்டுக்கதை. ஆதம்ஏவாள் ஒரு கற்பனை என்பது எல்லா கல்வியாளர்களும் ஒப்புக்கொண்ட விஷயமாயிற்றே'' – என்று கூறி பிட்டர்மேனுக்கு அத்திப்பூத்தாற் போல ஒரு நாத்திகவாதி – ஹெக்டர் அவலோஸ் – மட்டுமே வக்காலத்து வாங்குகிறார். ""அப்படியானால் உலகம் ஆறு நாட்களில் உருவாக்கப்பட்டது என்று பைபிள் கூறுவதை நம்ப வேண்டுமா?'' என்று கேட்கிறார் அவலோஸ். இவர்களுடைய பகுத்தறிவு வாதத்தை அந்த முற்போக்கு சமுதாயத்தில் யாரும் சட்டை செய்யவேயில்லை.
தனிப்பட்ட முறையில் மக்களுடைய மதஉணர்வுகளைப் புண்படுத்திய பிட்டர்மேன், பேராசிரியர் பதவிக்கு லாயக்கில்லாதவர். ஆனால் இங்கு பொதுமேடையிலும், டெலிவிஷனிலும் ஸ்ரீராமரை கட்டுக்கதை என்று கூறியது மட்டுமல்லாமல், "ராமன் குடிகாரன்' என்று கீழ்த்தரமாக வசைபாடிய கருணாநிதி தமிழ்நாட்டு முதலமைச்சராக பதவியில் தொடர்கிறார். அவர் தன்னை "கருணாநிதி' என்று யாராவது கூறினாலே தனக்கு மரியாதைக் குறைவு – என்று நினைக்கும் அளவுக்கு புண்படும் மென்மையான மனம் படைத்தவர்.

ஆனால் பிறர் உணர்வுகள் புண்படுவது பற்றி அவருக்குக் கவலையோ வருத்தமோ கிடையாது. மேலும் இப்படி அவர் தன்னை முற்போக்குவாதி, மதச்சார்பற்றவர், சிறுபான்மையினரின் காவலர், பகுத்தறிவாளர் என்றும் பிரபலப்படுத்திக் கொண்டிருப்பவர். இப்படிப்பட்ட கருணாநிதியையும் அமெரிக்காவின் ஸ்டீவ் பிட்டர்மேனையும் ஒப்பிடும்போது, ஒரு விபரீதமான கற்பனை எழத்தான் செய்கிறது. நம் கருணாநிதி அமெரிக்காவில் பிறந்து, அந்தப் பேராசிரியர் போல பகுத்தறிவு பாடம் நடத்தியிருந்தால், ஸ்டீவ் பிட்டர்மேனுக்கு நேர்ந்த கதிதானே அவருக்கும்? அதுபோல இவருக்கு இங்கு நடக்காததற்குக் கருணாநிதியே கூறியது போல, நம் நாட்டு மக்கள், குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள், மூடர்களாகவும், மௌடீகர்களாகவும் இருப்பதுதான் காரணமா?

பின்குறிப்பு: அமெரிக்க பேராசிரியர் ஸ்டீவ் பிட்டர்மேன் பற்றிய விவரங்களை மேலும் அறிய http://foxnews.com/story/0,2933,297847,00.html என்கிற இணைய தளத்தைப் பார்க்கவும். அதற்கு மேலும் விவரம் வேண்டுபவர்கள் இந்தச் செய்தியை வெளிக்கொண்டு வந்த பத்திரிகையாளர் "மேகன் ஹாக்கின்ஸ்' அவர்களை, 0015152848169 என்கிற தொலைபேசியிலோ அல்லது mehawkins@dmreg.com என்கிற ஈமெயில் விலாசத்திலோ தொடர்பு கொள்ளலாம்.

சுட்டது துக்ளக்

கதம்பமா சுட்டது









கே : "இனி யாருக்கும் லட்சிய தி.முக. பல்லக்குத் தூக்காது' – என்ற விஜய் டி. ராஜேந்தரின் திடீர் முழக்கம் பற்றி?

ப : சரி, கட்சிக்கு ஏதாவது வேலை இருக்க வேண்டாமா? அதற்கு என்ன செய்யப்போகிறார்?


கே : "காங்கிரஸ் கட்சியினர் "காமராஜ் ஆட்சி அமைப்போம்' என்று கூறி, தி.மு.க.வினர் வீட்டில் எடுபிடி வேலைகள் பார்க்கின்றனர்' – என்று விஜயகாந்த் கூறியுள்ளது பற்றி?

ப : அந்த வேலையும் இல்லை என்றால், தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர்கள் என்னதான் செய்வது? எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சிற்குப் போக வேண்டியதுதானா?
Just துக்ளக் நக்கல்'s
தேர்தல் வரும்போதெல்லாம், நாம் பெரிய கட்சிகளால் தேடப்படும் அளவுக்கு வளர்ந்து விட்டோம். இதுவே நமக்குக் கிடைத்த பெரிய வெற்றிதான். – திருமாவளவன்
அடக்கடவுளே! தேடப்படும் நிலையில் இருப்பது கூட வெற்றியா?
எம்.எல்.ஏ. கோடீஸ்வரர் ஆகும் அதிசயம் தமிழகத்தில் மட்டும்தான் நடக்கும். – என். வரதராஜன்

அதெல்லாம் அந்தக் காலம் ஸார். இப்போது கௌன்சிலர்களே அந்த அதிசயத்தை நிகழ்த்த முடியுமே!


ஏன் இந்தப் பெயர் மாற்றம் ?
தமிழக அரசின் மின்துறை அமைச்சரின் பெயர் ஆற்காடு என். வீராசாமி என்றுதான் இருந்தது – இதுவரை. அது ஆற்காடு என். வீராஸ்வாமி என்று இனி மாற்றப்படும் என்று கெஸட் செய்தி கூறுகிறது.


இரண்டு கேள்விகள் :
1. சாமி என்ற தமிழ்ப் பெயரை "ஸ்வாமி' என்ற வடமொழிப் பெயராக மாற்றுவது (தி.மு.க. கொள்கைப்படி) சரிதானா?
2. இது நியூமராலஜி சாத்திரத்துக்காகச் செய்யப்பட்ட மாறுதல் என்பது வெளிப்படை. இந்த "மூடநம்பிக்கை' பற்றித் தி.க. தலைவர் கி. வீரமணி என்ன கூறுகிறார்?


கே : "தமிழகத்தில் அடுத்து அமையப் போவது, பா.ம.க. தலைமையிலான கூட்டணி ஆட்சிதான்' – என்று டாக்டர் ராமதாஸ் அடித்துச் சொல்கிறாரே?

ப : அவர் இப்படித்தான் ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார். சாட்டையால் அடிப்பேன், பூட்டுப் போடுவேன்... என்றெல்லாம் சொன்ன மாதிரி இதுவும் ஒரு பூச்சாண்டி. அவ்வளவுதான். பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

சுட்டது துக்ளக்




Monday 1 October 2007

அடித்தேன் ஒரு Quarter

அப்படியே, ஒரு வழிய, 28 பதிவு ஆச்சு

அத கொண்டாடத்தான் இந்த பதிவு, இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள அலை என திரண்டு வாரீர்.


வாழ்த்தும் நண்பர்களுகும், காரித்துப்பும் அன்புக்கும் நன்றி.





இந்த படத்துக்கும் பதிவுக்கும் கிடையாது, மொக்கை பதுவுக்கு எது இருந்த என்ன, அதுதான் சும்மா :)

2011_ல் ஏகப்பட்ட பேர் தமிழ்நாட்டுல முதலமைச்சர்!

அய்யய்யோ.... 2011_ல் ஏகப்பட்ட பேர் தமிழ்நாட்டுல முதலமைச்சர் ஆயிருவாங்க போலிருக்கே’’ என்று அலறியபடி வந்தார் ‘சட்ட சிக்கல்’ சிவா.
“ரொம்ப உணர்ச்சிவசப்பட வேண்டாம்....பொறுங்க...’’ என்று அவரை ஆறுதல் படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது நண்பர்கள் வட்டத்திற்கு.

“பின்ன என்னங்க.....

‘2011 ல் நான் தான் முதலமைச்சர்’ என்கிறார் அ.இ.ச.ம.க சரத்குமார்......
‘தி.மு.க., அ.தி.மு.க.வை மண்ணைக் கவ்வ வைத்து நான்தான் முதல்வராகப் போகிறேன்’ என்கிறார் தே.மு.தி.க விஜயகாந்த்......

‘எத்தன கட்சி, இருந்தாலும் மச்சி, அவங்கெல்லாம் குச்சி, ஊர்வாயத் தச்சி, குடுக்கப்போறேன் பச்சி’ என அடித்துச் சத்தியம் செய்கிறார் ல.தி.மு.க விஜய டி.ராஜேந்தர்.

என்னாகப் போகுதோ தமிழ்நாடு? என்று புலம்ப ஆரம்பித்து விட்டார் ‘மறதி’ மயில்வண்ணன்.

“வேணும்ன்னா ஒண்ணு பண்ணலாம்... முதல் ஆறு மாதம் சரத்குமார்... அடுத்த ஆறு மாதம் விஜயகாந்த்.... அடுத்தது ராஜேந்தர்....ன்னுமாத்தி மாத்தி ஆட்சி நடத்தச் சொல்லலாம்.....’’ என்று டேட்டா தங்கவேலு ஆசி வழங்க....
“சரி அப்ப நம்ம கார்த்திக்க எப்ப முதல்வராக்கறது?” என்று முந்திரிக் கொட்டையாய் மூக்கை நுழைத்தார் ‘பேக்வேர்டு ஒயிட்’ பாண்டியன்.
“அட... அவரையும் சுழற்சி முறைல ஆக்கிடலாம்..... இப்ப அதில்ல பிரச்னை.... இவுங்க எல்லாம் முதலமைச்சர் சரி...ஆனா அமைச்சரவைல யார் யாரப் போடறது?” என்கிற முக்கியமான பிரச்னையைக் கிளப்பி விட்டார் ‘அகோரப்பசி’ கு.செயக்குமார்.

அவ்வளவுதான், நண்பர்கள் வட்டமே கலகலத்து விட்டது. குளிர் காலக் கூட்டத் தொடர் போல மணிக்கணக்கில் அலசி ஆராய்ந்து ஒரு அமைச்சரவை பட்டியலினையே தயாரித்துத் தந்து விட்டார்கள்.
அதைப் பார்த்ததும் மயக்கம் போட்டு விழாதது ஒன்றுதான் மிச்சம். இதோ 2011_ல் அமையப் போகும் புதிய அமைச்சரவை:

தமிழக கல்வி அமைச்சர்: மாண்புமிகு.சிம்பு (என்கிற) சிலம்பரசன்.

பொதுப்பணித்துறை அமைச்சர்: மாண்புமிகு. நமீதா.

சமூக நலத் துறை அமைச்சர்: மாண்புமிகு. எஸ்.ஜே.சூர்யா.

நிதி அமைச்சர்:மாண்புமிகு. நயன்தாரா

ராணுவ அமைச்சர்: மாண்புமிகு.அர்ஜுன்.

அறநிலையத் துறை அமைச்சர்: மாண்புமிகு. சொர்ணமால்யா.

மின்சார அமைச்சர்: மாண்புமிகு.மணிரத்னம்.

தொழில் துறை அமைச்சர்: மாண்புமிகு. விஜயகுமார்.

தேர்தல் முடிவுகள் வெளிவர வெளிவரவே தமிழகத்தைத் தனியாக பிரித்துக் கொடுத்து விடுவார்கள் என்பதால், ராணுவ அமைச்சகம் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கிறது. காமராஜர் காலத்திற்குப் பிறகு சிக்கனமாக அமையப் போகும் இந்த அமைச்சரவையின் ஆயுளை மனதில் கொண்டு மேலே சிலருக்குக் கொடுக்கப்பட இருந்த பால்வளத் துறை மட்டும் முதலமைச்சர் வசமே இருக்கும் என்று அறிவிக்கப்படுகிறது.

எல்லாம் ஓ.கே...ஆனால்...இந்த சட்டமன்றம்...எம்.எல்.ஏ.ஹாஸ்டல் இதையெல்லாம் இடம் மாத்தனுமே என்றேன்.....

“எங்கே?’’ என்றார்கள் நண்பர்கள் கோரசாக.

சேப்பாக்கத்திலிருந்து....கீழ்ப்பாக்கத்திற்கு. என்றதுதான் தாமதம்.....

“அப்ப அங்கிருக்கவங்க எல்லாம் எங்கே போறதாம்?” என்றது ‘மறதி’ மயில்.
அவங்க மட்டுமில்ல.... ஒட்டு மொத்தத் தமிழ்நாடும் குடி போறதுக்கு இப்ப இருக்கறதை விட நல்ல வசதியான அற்புதமான இடம் ஒண்ணு இருக்கு....என்றவனிடம்,

“எங்கே என்று சீக்கிரம் சொல்லித் தொலை’’ என்றது மொத்த நண்பர்கள் வட்டமும்.

“வேறெங்கே.....வங்காள விரிகுடா கடல்தான்......’’ என்றபடி

எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்.......

சுட்டது குமுதம்.com

ராஜயோகம் செய்தி இதுதானா?

உலகத்தில் எந்த ஆண்களுக்கும் அடிக்காத யோகம் இந்திய ஆண்களுக்கு அடித்திருக்கிறது அதுவும் சாதாரண யோகமில்லை, ராஜயோகம்.
செய்தி இதுதான் : ரஷ்யாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்து விட்டதாம். இந்த நிலை நீடித்தால் அங்கு ஆட்களே இல்லாமல் ஆட்சி செய்ய வேண்டி வந்துவிடுமாம். அதனால் மக்கள் தொகை பெருக்கத்திற்கு என்றே ஆண்களை இறக்குமதி செய்யலாம் என்று ஒரு புரட்சிகரமான யோசனையைத் தெரிவித்திருக்கிறார் மரியா என்கிற பெண்ணியவாதி.

அதிலும் “மற்ற நாட்டு ஆண்களைவிடவும் இந்திய ஆண்கள்தான் ‘இலட்சியக் கணவர்களாக’ இருப்பார்கள்...

உலகமே இடிந்து விழுந்தாலும் ‘காரியமே கண்ணாக’ இருப்பவர்கள் இந்திய ஆண்கள்தான்...’’ என்று அடித்துச் சொல்கிறார் இந்த மரியா தனது ஜிணீstவீஸீரீ மிஸீபீவீணீ என்கிற புத்தகத்தில்.

இந்த “உற்பத்தி’’ விஷயத்தில் மட்டும் கவலையே படவேண்டாம் ரஷ்யர்கள். ‘ம்‘ என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும்....’நீ’... ’நான்’...என்று ஆளாளுக்கு ரயிலேறி அடச்சே.....விமானமேறி விடுவார்கள் நம்மவர்கள்.

என்ன... இதில் ஒரே ஒரு பிரச்னைதான்.... “கிளைமேக்ஸில்’’ ஏதாவது சிக்கல் என்றால் ‘ஊக்குவிப்பதற்கு’ சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமாரையோ... டாக்டர். ஷர்மிளாவையோ..... அல்லது நாராயணரெட்டியையோ உடன் அனுப்பி வைக்க வேண்டியிருக்கும். அவ்வளவுதான்.

இது ஒரு புறமிருக்க.... இப்போது இரண்டுக்கு மேல் பிள்ளை பெறுபவர்களுக்கு பத்தாயிரம் டாலர் பரிசளிக்க முடிவு செய்திருக்கிறது ரஷ்ய அரசு. பத்துக்கு மேல் பிள்ளை பெறுபவர்களுக்கு “வீரத்தாய்” பட்டமும் கொடுத்து....ஒரு வீர வாளையும் பரிசாகக் கொடுக்கலாம் அவர்கள்.
இதன் உச்சகட்டமாக..... “நீங்கள் இதுவரை தொழிற்சாலைகளில் உற்பத்தியைப் பெருக்கியது போதும்....இனி நீங்கள் எல்லோரும் வீட்டுக்குப் (கவனிக்க: அவரவர் வீட்டுக்கு) படையெடுத்துப் போய் “அந்த” உற்பத்தியைப் பெருக்குங்கள்’’ என்று அறிவித்ததோடு செப்டெம்பர் 12 அன்று விடுமுறையும் விட்டிருக்கிறது அரசு.

அதுசரி, எதற்காக செப்டம்பர் 12_ஐ “உற்பத்திக்கான” நாளாக தேர்ந்தெடுத்தார்களாம்? அதில்தான் இருக்கிறது ரஷ்யர்களின் தேசபக்தி.
செப்டம்பர் 12_ல் செயலில் சுறுசுறுப்பாக இறங்குபவர்களுக்கு.....
இலக்கும் சரியாக அமைந்து.... கணக்கும் சரியாக அமைந்துவிட்டால்..... சரியாக அடுத்த ஜூன் 12_ல் குவா...குவாதான். ஏனென்றால், ஜூன் 12 தான் ரஷ்யாவின் தேசிய தினம்.

இத எப்படி எடுத்துகறதுனு எனக்கு தெரியல, உங்களுக்கு?

சுட்டது குமுதம்.com

Monday 24 September 2007

இவர யாரும் காமடி கீமடி பண்ணலையே?






தடாலடி என்றால் டி.ஆர். சமீபத்திய அவரது பாய்ச்சல் விஜயகாந்த் மீது திரும்பியிருக்கிறது! அவரிடம் பேசினோம்.
தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சியினருமே உங்களை தங்கள் பிரசாரத்திற்கு கூட்டத்தைக் கூட்டும் ஒரு பேச்சாளராகத்தான் பார்க்கிறார்கள்.
ஒரு கட்சித் தலைவராக அங்கீகரிக்கவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?

‘‘இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்டக்கூடிய இவன், ஒரு கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராகப் பணியாற்றும் அளவிற்குத் திறமையானவன், சின்னத்திரையில் பேசினால் கூட பெரிய அளவிற்கு பெண்கள் கூட்டத்தைக் கவர்ந்து இழுக்கும் டி.ஆர்.பி. ரேட்டிங்கைத் தன் கையில் வைத்திருப்பவன் வளர்ந்தால், தங்களுக்கு ஆபத்து என்று இரண்டு கழகங்களும் நினைக்கின்றன. மற்றவர்கள் வளர்ந்தால் ஆபத்தில்லை என்று நினைக்கிறார்கள். நான் ஏ.வி.சி. கல்லூரியிலும், அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் படித்தபோது நான் ஒரு பெரிய இயக்குநராக வருவேன் என்று சொன்னபோது நீங்கள் எதிர்பார்த்தீர்களா? திரையுலகத்தினர்தான் ஒப்புக்கொண்டார்களா? மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் ஐயா!’’
இவ்வளவு தூரம் திறமைசாலியாக எண்ணும் நீங்கள், யாருடன் கூட்டணி வைப்பது என்று குழம்புகிறீர்களே?
‘‘யார் சொன்னது? தி.மு.க., அ.தி.மு.க.விடம் கூட்டு இல்லை என்று சொல்லிவிட்டு, பழனி நாடாளுமன்ற இடைத் தேர்தலில் நாற்பதாயிரம் ஓட்டுக்கள் வாங்கியபோது, அப்போது பா.ம.க.கூட வளரவில்லை. ம.தி.மு.க. தோன்றவே இல்லை. பர்கூரில் தனித்துப் போட்டியிட்டேன். ‘ஜெயலலிதாவுக்குக் கிலி’ என்று பத்திரிகைகள் கவர் ஸ்டோரி எழுதினார்கள். கடைசி நேரத்தில் தி.மு.க. வாபஸ் வாங்கியது யாருக்காக?’’
நீங்கள் மட்டும் ஓட்டு வாங்கி விட்டால் போதுமா? கட்சி வேட்பாளர்கள்?
‘‘விஜயகாந்த் 234 தொகுதிகளில் நூறு கோடி ரூபாய் வரை செலவு செய்து எத்தனை தொகுதிகளில் ஜெயித்தார். ஒன்றில்தானே! அவர்போல இவ்வளவு செலவு செய்தால் நான் ஆட்சியைப் பிடிப்பேன்.’’
சரி, லட்சிய தி.மு.க.வுக்கு எத்தனை சதவிகிதம் ஓட்டு இருக்கிறது?
‘‘பதினைந்திலிருந்து இருபது சதவிகிதம். நடுநிலையாளர்களைக் கவரும் சக்தி எனக்குள்ளது என்பதால்தான், என்னை அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் பிரசாரத்திற்கு அழைக் கின்றன.’’

இருபது சதவிகிதம் என்பதெல்லாம் உங்களுக்கே ஜாஸ்தியாகப் படவில்லையா?

‘‘அதைச் சொல்ல நீங்கள் யார்? (சீறுகிறார்) 2011_ல் முதல்வர் ஆவேன் என்று சரத்குமார் சொல்கிறார். விஜயகாந்த், சரத்குமார் போல் முதல்வர் என்ற அந்த மியூஸிக்கல் சேரைச் சுற்றி ஓடப்போவதில்லை. தமிழக மக்களுக்குக் குரல் கொடுப்பதில் மட்டும் முதல்வனாக இருப்பேன். எந்தப் பிரச்னை வந்தாலும் ஆளுங்கட்சிக்கு எதிராகக் குரல் கொடுப்பவன் என்று நிரூபித்தவன்.
தி.மு.க.வை விட்டு வைகோ பிரிந்தபோது, ‘டி.ஆரின் ஆதரவு வேண்டும்’ என்று கலைஞர் அறிக்கை விட்டாரா இல்லையா?’’

சரி, இப்போது முதல்வர் கலைஞரை எதற்கு சந்திக்கப்போகிறீர்கள்?
‘‘எங்களை தேர்தல் காலத்தில் மட்டும் பயன்படுத்துவது என்றில்லாமல் உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப் போகிறேன். அது இருந்தால்தான் அடுத்தவர்களுக்காக குரல் கொடுக்க முடியும்! அவர் முடிவைப் பொறுத்து எங்கள் முடிவு அமையும். அவருடைய வெற்றிக்காக பாடுபட்டவன்.’’

உங்களை அவர் கறிவேப்பிலை போல பயன்படுத்திக் கொள்ளும்போது, நீங்கள் ஏன் திரும்பத் திரும்ப அங்கே போக வேண்டும்?

‘‘காரணம், அவர் என்னுடைய அரசியல் ஆசான். அவர் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. தமிழினத்திற்காகக் குரல் கொடுப்பவர் அவர். எனக்கு அவர் மீது அபிமானம்.
அடுத்தது, தமிழ் நாட்டை ஐந்து முறை ஆண்ட கலைஞர், எங்கள் ஆதரவை வெளிப்படையாகக் கேட்கிறார். ஆனால், விஜயகாந்த் யாருமே எனக்குத் தேவையில்லை என்கிறார். ஒரு சமையல் செய்தால் கூட நான்கு பண்டங்கள் தேவைப்படுகிறது. இவர் தனியாகவே சாய்ச்சுடுவாராம்.

உங்களை உதாசீனப்படுத்திய கழகங்களை விட்டுவிட்டு தேவை யில்லாமல் விஜயகாந்தை ஏன் சீண்டுகிறீர்கள்?

‘‘ஏன் என்றால் அவர் பேச்சு! ஊழலை ஒழித்து விடுவாராம். அ.தி.மு.க.வில் இருந்த எத்தனை ஊழல் மந்திரிகள் உங்களோடு இருக்கிறார்கள்? எத்தனை பேருக்கு பணம் வாங்கிக் கொண்டு பதவி கொடுத்திருக்கிறார்? இவர் பிறந்த தினம் வறுமை ஒழிப்பு தினமாம்! ‘ஐயய்யோ! தமிழ் நாட்டில் வறுமை ஒழிந்து போச்சு சார்’ (சிரிக்கிறார்) இதைப் பார்த்து விட்டு நான் சும்மா இருக்க முடியுமா?

நான் எம்.ஏ. வரலாறு படித்தவன். விஜயகாந்தின் தகுதி என்ன? என்ன பேசறார்? எம்.ஜி.ஆரையே எதிர்த்துக் குரல் கொடுத்த எனக்கு இந்த விஜயகாந்த் யார்? நூறு கோடி ரூபாய் கட்சிக்கு செலவு செய்தாரே, எப்படி வந்தது? ஒரு தமிழன் என்ற முறையில் அவர் ஊழல் முகத் திரையைக் கிழிப்பேன்.’’
கலைஞர் டி.வி.யில் உங்களுக்கு அழைப்பு இல்லை என்று கோபமாமே?
‘‘கிடையவே கிடையாது? என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். திறந்திருக்கிறது’ என்றார்கள். அமிர்தம் மற்றும் ராமநாராயணன்கூட கேட் டார்கள். இவர்கள் செப்டம்பர் 15_ம் தேதி துவக்கம் என்றபோது, நான் வெளிநாட்டில் இருந்தேன். பிஸியாக இருந்ததால் முடியவில்லை.
அப்புறம், சன் டி.வி. அரட்டை அரங்கத்தில் எனக்குக் கிடைத்த அங்கீகாரம், நான் அடுத்த தேர்தலில் ஈடுபட்டால் எங்கள் கைக்கு வந்துவிடும் அதிகாரம்! பேச்சுத் திறமை இருக்கிறது. படிப்பு இருக்கிறது. துடிப்பு இருக்கிறது. உண்மை இருக்கிறது. உழைப்பு இருக்கிறது. தன்னம்பிக்கை இருக்கிறது.’’

உங்களது அதீத தன்னம்பிக்கைதான் உங்கள் பிரச்னையே என்றால் ஒப்புக் கொள்வீர்களா?

(எழுந்து கொள்கிறார்?) ‘‘மன்மோகன் சிங் பிரதமராவேன் என்று தனது 48_வது வயதில் சொல்லியிருந்தால் அவரை பைத்தியம் என்றிருப்பார்கள். எனக்கு என்ன வயசு ஆச்சு? இருபத்து மூன்று வயதில் சினிமாவைக் கலக்கியவன். ரஜினியைத் தாண்டி வசூல் சக்ரவர்த்தியாக இருந்தவன்! (சொடுக்குப் போடுகிறார்)
புதுக்கோட்டையில் விஜயகாந்த் மாநாடு நடத்தியபோது வந்தது, அந்த ஊர்க் கூட்டம் இல்லை. சுற்றியுள்ள மாவட்ட ஆட்களை லாரிகளில் கொண்டு வருகிறார். இது பண்ருட்டி ஐடியாவாக இருக்கும். எனக்கு அப்படிச் சேர்க்கத் தேவையில்லை. என் கட்சியில் தொண்டன் அவனே செலவு பண்ண வேண்டும். விஜயகாந்த் மாதிரி பணத்தைக் கொட்டி ஆட்களைச் சேர்க்க வேண்டியதில்லை.’’

லட்சிய தி.மு.க.வின் அடுத்த லட்சியம்?

‘‘தொடர்ந்து சுற்றுப் பயணம் செய்யப்போகிறேன். மாவட்டந்தோறும் 300 கொடிகள் வீதம் முப்பது மாவட் டங்களிலும் ஏற்றப் போகிறேன். இனி எந்தக் கட்சியையும் வளர்க்கப் போகப்போவதில்லை. கூட்டணி இல்லா விட்டாலும் தனித்து என்னால் நிற்க முடியும்! தமிழகம் முழுவதும் இந்தக் கொடியை (காட்டுகிறார்) ஏற்றிக் காட்டுவேன். லட்சிய தி.மு.க.வை ஆட்சியில் ஏற்றிக் காட்டுவேன்!.


தமிழகம் முழுவதும் இந்தக் கொடியை (காட்டுகிறார்) ஏற்றிக் காட்டுவேன்.
சுட்டது குமுதம்.com நன்றி

Sunday 23 September 2007

HR = HIGH RISK

After 2 years of selfless service, a man realized that he has not been promoted, no transfer, no salary increase no commendation and that the Company is not doing any thing about it. So he decided to walk up to His HR Manager one morning and after exchanging greetings, he told his HR Manager his observation.



The boss looked at him, laughed and asked him to sit down saying. My friend, you have not worked here for even one day.


The man was surprised to hear this, but the manager went on to explain.
Manager:- How many days are there in a year?
Man:- 365 days and some times 366
Manager:- how many hours make up a day?
Man:- 24 hours
Manager:- How long do you work in a day?
Man:- 8am to 4pm. i.e. 8 hours a day.
Manager:- So, what fraction of the day do you work in hours?
Man:- (He did some arithmetic and said 8/24 hours i.e. 1/3(one third)
Manager:- That is nice of you! What is one-third of 366 days?
Man:- 122 (1/3x366 = 122 in days)
Manager:- Do you come to work on weekends?
Man:- No sir
Manager:- How many days are there in a year that are weekends?
Man:- 52 Saturdays and 52 Sundays equals to 104 days
Manager:- Thanks for that. If you remove 104 days from 122 days, how many days do you now have?
Man:- 18 days.
Manager:- OK! I do give you 2 weeks sick leave every year. Now remove that14 days from the 18 days left. How many days do you have remaining?
Man:- 4 days
Manager:- Do you work on New Year day?
Man:- No sir!
Manager:- Do you come to work on workers day?
Man:- No sir!
Manager:- So how many days are left?
Man:- 2 days sir!
Manager:- Do you come to work on the (National holiday )?
Man:- No sir!
Manager:- So how many days are left?
Man:- 1 day sir!
Manager:- Do you work on Christmas day?
Man:- No sir!
Manager:- So how many days are left?
Man:- None sir!
Manager:- So, what are you claiming?
Man:- I have understood, Sir. I did not realise that I was stealing Company money all these days.
Moral - NEVER GO TO HR FOR HELP!!!

Have a Nice Day.
HR = HIGH RISK

Friday 21 September 2007

சுப்பிரமணியன் சுவாமி விட்ட ராம பாணம்...

ராமர் என்பது கற்பனைக் கதாபாத்திரம். ராமர் பாலம் என்று ஒன்று இல்லை’ என்பது தொல்லியல் துறையின் கருத்து என்று ராமர் பாலம் தொடர்பாக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடுத்த வழக்குக்கு பதில் மனு தாக்கல் செய்தது மத்திய அரசு. இதைக் கண்டித்து நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சியும் பிற இந்து அமைப்புகளும் இந்துக்களை மத்திய அரசு இழிவுபடுத்தி விட்டதாகப் போராட்டங்களை நடத்தியது. எதிர்ப்பின் வலுகண்டு மறுநாளே, மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்ட மத்திய அரசு, மாற்றுப்பாதையில் சேதுசமுத்திரத் திட்டத்தை செயல்படுத்துவதாகவும் சொல்லியிருக்கிறது.
இந்நிலையில் முதல்வர் கருணாநிதி, ஈரோடு முப்பெரும் விழாவில் பேசும்போது, ‘‘யார் ராமன்? அவன் எந்தப் பொறியியல் கல்லூரியிலே படித்து பொறியாளராக ஆனவன்? எப்போது அந்தப் பாலத்தைக் கட்டினான்? ஆதாரம் உண்டா?’’ என்றெல்லாம் கேள்விகள் எழுப்பியிருந்தார்.
முதல்வரின் இந்தப் பேச்சைக் கண்டித்து அவர் மீது வழக்கு தொடுக்கப் போவதாக அறிவித்-திருக்கும் சுப்பிரமணியன் சுவாமி, ‘ராவணன் பிராமணன், ராமன் சத்திரியன்’ என்று இன்னொரு திரியையும் பற்றவைத்திருக்கிறார்.
சுவாமியை சந்தித்தோம். ‘‘கருணாநிதி ஆவேசப்படவும், ஆத்திரப்படவும் காரணம் இருக்கிறது. மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சொன்ன பொய்யை மறுநாளே வாபஸ் பெற்றுவிட்டதால், அதிர்ச்சியடைந்திருக்கும் கருணாநிதிக்கு என்ன பேசுகிறோம் என்றே புரியவில்லை. இனிமேல் பகுத்தறிவுக் கதைகள் பேசி அரசியல் செய்ய முடியுமா? கவலை வந்துவிட்டது. ‘ராமர் எந்தக் கல்லூரியில் பொறியியல் படித்தார்?’ என்று கேட்கும் இவரால், ‘கன்னிமேரிக்கு கர்த்தர் எப்படிப் பிறந்தார்’ என்று கேட்க முடியுமா? கருணாநிதி, இந்துக்களை இழிவுபடுத்துவதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. அதனால், கவர்னரிடம் அனுமதி வாங்கி அவர்மேல் வழக்கு தொடரப் போகிறேன்’’ என்றவரிடம், ‘ராவணன் பிராமணன் என்று சொல்லியிருக்கிறீர்களே?’ என்றோம்.
‘‘ராமாயணத்திலேயே ராமன் சத்திரியன் என்பது தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. ராம சேது பாலத்தை அமைத்த ராமன் தன் குருவான வசிஷ்டரிடம், ‘யாரைக்கொண்டு ராம சேதுவைத் திறக்க யாகம் நடத்தலாம்?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு ‘அந்தப் பகுதியில் யாகம் செய்யத் தகுதியான பிராமணன், ராவணன் மட்டுமே. அவனை அழைத்து யாகம் நடத்துங்கள்’ என்று வசிஷ்டர் அறி-வுறுத்த, ராமனும் ராவணனை அழைத்திருக்கிறான். ராவணனும் யாக பூஜையில் கலந்துகொண்டான். அதனால் இனி, திராவிடக் கட்சிகள் சத்திரியனான ராமனுக்கு விழா எடுக்குமா?’’ என்றார்



அ.தி.மு.க. எம்.எல்.ஏ வான எஸ்.வி. சேகர் :



‘‘முதல்வர் கருணாநிதி சொல்வது போல ராமர் கற்பனைப் பாத்திரம் என்றால் முருகர், விநாயகர் எல்லாமே கற்பனைதானே. கடவுளே கற்பனை என்று சொல்லும்போது உண்டியல் காசு மட்டும் அரசுக்கு எதற்கு? அறநிலையத்துறை எதற்கு? கோயில்களை மத நம்பிக்கை உடையவர்கள் நடத்திக்கொள்ளட்டும். மூடநம்பிக்கை என்று கேலி பேசும் கருணாநிதி, அறநிலையத்துறை அலுவலகத்துக்குப் பூட்டுப் போடுவாரா?’’ என்கிறார் அ.தி.மு.க. எம்.எல்.ஏ&வான எஸ்.வி. சேகர் ஆவேசமாக.



சுட்டது from JuniorVikatan

Thursday 20 September 2007

முதல்வர் கருணாநிதி நாக்கில் Saturday


ஆணவமே, உன் பெயர்தான் கலைஞரோ !

தமிழக முதல்வர், ஹிந்துமத நம்பிக்கை கொண்டவர்கள் மனம் புண்படும்படி பேசுவது புதிய விஷயமல்ல. ஆனால், ஈரோட்டில் நடந்த தி.மு.க.வின் முப்பெரும் விழாவில் அவர் பேசியுள்ளது, அவர் காட்டி வருகிற ஹிந்துமத துவேஷத்தில், ஒரு புதிய அத்தியாயம்.
ராமர் பாலத்தை இடிக்காமல், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற மாற்று வழிகளை ஆராய்கிறோம் – என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கூறியிருப்பது, தமிழக முதல்வருக்கு பெரும் எரிச்சலை உண்டாக்கியிருக்கிறது. சேது சமுத்திரத் திட்டம் வருவதை விட, ராமர் பாலம் இடிக்கப்படுவதைத்தான் அவர் பெரிதும் விரும்புகிறார்; அதனால்தான் மாற்று வழியை ஆராய்வதில் அவருக்கு இவ்வளவு கோபம் வருகிறது. ஆனால் கோபம் வந்து என்ன பயன்?

மத்தியில், காங்கிரஸிற்கு ஓட்டு பயம் வந்து விட்டதால், அதற்கு முன் தி.மு.க. காட்டக்கூடிய "ஆதரவு வாபஸ்' பூச்சாண்டி பயம் எடுபடாது என்கிற நிலை; அதனால் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில், ராமர் மீது இருக்கிற மரியாதையை பிரகடனம் செய்ததோடு மட்டுமல்லாமல், புதிய வழியை ஆராய மூன்று மாத தவணை வாங்கியிருக்கிறது. முதல்வர் முப்பெரும் விழாவில், "...மூட, மௌடீக, மடத்தனமான மதவாதங்களை இன்றைக்கும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையின் காரணமாக, ராமன் பெயரை இழுத்து அவர்கள் இன்றைக்கு நம்மோடு விளையாடுகிறார்கள்... இன்றைக்கு நமக்கு ஏற்பட்டிருக்கிற, எதிர்காலத்தில் இருள் மயமாக ஆக்குகிற ஒரு பயங்கரமான சதித் திட்டத்தை முறியடிப்பதற்கு, ஒரு தீர்மானத்தை உங்கள் முன் வைக்கிறேன்' என்று கூறிவிட்டு – அந்த தீர்மானத்தில் "மதவாத அமைப்புகளுக்கு மத்திய அரசு அஞ்சி... சேது சமுத்திரத் திட்டத்தை தடுக்கிற முயற்சிக்கு இடம்கொடுத்து விடக்கூடாது என்று குரல் கொடுக்கிறோம்' – என்று கூறியிருக்கிறார்.

இப்படி குரல் கொடுத்தால் போதுமா? "மூட, மௌடீக, மடத்தனமான' மதவாதத்தை காங்கிரஸும், மத்திய அரசும் பேசத் தொடங்கி விட்டனவே? மத்திய சட்ட அமைச்சர், "இந்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக ராமர் விளங்குகிறார். விவாதத்திற்கு இடமளிக்கிற விஷயமல்ல இது. ராமர் இருந்தார் என்பதை சந்தேகிக்கவே முடியாது. இமயமலை, இமயமலையே; கங்கை, கங்கையே. அதுபோல ராமர், ராமரே! இதை நிரூபிக்கத் தேவையே இல்லை' என்று கூறிவிட்டார்.

மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து "ராமாயணம் புனிதமானது; மத்திய அரசு மதங்களை – அதுவும் இந்த வழக்கு தொடர்பாக குறிப்பாக ஹிந்து மதத்தை – முழுமையாக மதிக்கிறது' என்று கூறிவிட்டது.

அதாவது, முதல்வர் கூறுகிற "சதித் திட்டம்' மத்திய அரசின் ஒத்துழைப்பைப் பெற்றுவிட்டது. "எதிர்காலத்தை இருள் மயமாக்க' மத்திய அரசு முன்வந்து விட்டது. அப்படியிருந்தும் முதல்வர் மத்திய அரசுக்கு எப்படி ஆதரவு தரலாம்? எதிர்காலத்தை இருள் மயமாக்குகிற சதித் திட்டத்தை ஏற்கிற அரசில் தி.மு.க. எப்படி பதவிகள் வகிக்கலாம்? சதிகாரர்களுக்கு உடந்தையான கட்சியாகிவிட்ட காங்கிரஸின் ஆதரவைப் பெற்று, தமிழகத்தில் எப்படி அரசு நடத்தலாம்? இதெல்லாம் பெரியாருக்கு தி.மு.க. இழைக்கிற துரோகமல்லவா?
மத்திய அரசிலிருந்து விலகி, மத்திய அரசுக்குத் தருகிற ஆதரவை வாபஸ் பெற்று, தமிழக அரசுக்கு காங்கிரஸ் தருகிற ஆதரவையும் வேண்டாம் என்று உதறிச் செயல்பட்டால்தானே, சதித் திட்டத்தை முறியடிக்க முடியும்? அதற்கு முதல்வர் துணியாதது ஏன்? பதவி ஆசையைத் தவிர இதற்கு வேறு என்ன காரணம்?

"குடிலர்கள், குள்ள நரிகள்' என்று முதல்வர் வர்ணித்துள்ளவர்களின் பட்டியலில் இடம்பெற முன்வந்து விட்ட மத்திய அரசினரை எதிர்க்காத முதல்வர், குடிலர் ஆதரவாளரா? குள்ளநரி போஷகரா? தன்னுடைய பதவி, தன் குடும்பத்தினரின் பதவிகள் என்றால், பெரியார் கொள்கைகளை பலி கொடுக்கத் தயங்காதவர், வெறும் சவடால் பேச்சினால், வீரத்தைக் காட்டுகிறார்! வாய்ச்சொல் வீரம் என்பது இதுதான்.
இப்படி மத்திய அரசைக் கோபிக்க முடியாமல், அவரும் அவர் குடும்பத்தினரும் வகிக்கிற பதவிகள், முதல்வரைத் தடுக்கின்றன.
சரி; முதல்வர் தன்னுடைய கோபத்தை யார் மீது காட்டுவது? இருக்கவே இருக்கிறது ஹிந்து மத நம்பிக்கைகள்.

கோபத்தில், துவேஷத்தைக் கொட்டி முதல்வர் இப்படிப் பேசியிருக்கிறார்: "யார் ராமன்? எந்தப் பொறியியல் கல்லூரியிலே படித்து பொறியாளராக ஆனவன்? எப்போது அந்தப் பாலத்தைக் கட்டினான்? ஆதாரம் உண்டா?' என்றெல்லாம் கேட்டிருக்கிறார் முதல்வர்.
துவேஷம் தலைக்கேறியதால், ரொம்ப புத்திசாலித்தனமாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு, அவர் பிதற்றியிருக்கிறார்.

பாலத்தைக் கட்டியது ராமர் என்றால், அவரேதான் கற்களை எடுத்து அடுக்கி, அவற்றை ஒன்றிணைத்து, பாலத்தை தன் கையாலேயே கட்டினார் என்று அர்த்தமல்ல. ஒரு மன்னன் கோவில் கட்டினான்; சிற்பங்கள் வைத்தான் – என்றால் அவை, அவனே உளியைக் கையில் எடுத்து, செதுக்கியவை அல்ல. அவன் ஆணையின் மீது, அவன் விருப்பத்திற்கிணங்க, சிற்பக் கலை வல்லுனர்கள் செய்துள்ள பணிகள் அவை. ஆனால் அவை அந்த சிற்பிகளின் பெயரில் வழங்கப்படுவதில்லை; சம்பந்தப்பட்ட மன்னன் வைத்த சிற்பங்களாகவே அவை புகழ் பெறுகின்றன.

அதே போலத்தான் ராமர் கட்டிய பாலமும். முதல்வருக்கு ராமாயணத்தைப் பற்றி இழிவாகப் பேசத்தான் தெரியுமே தவிர, அதிலிருந்து மேற்கோள் காட்டுகிற போதெல்லாம் எதையாவது தப்பும் தவறுமாகப் பேச அவர் தவறுவதில்லை. (இதற்கு முன்பும் நாம் இதைச் சுட்டிக்காட்டியிருக்கிறோம்.)
அந்த பாலம் கட்ட, ராமருக்கு சமுத்திரராஜன் வழி கூறினான். அவனே, அதற்கு நளன் என்ற நிபுணனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் யோசனை கூறினான்.

"....நளன், தேவதச்சனாகிய விச்வகர்மாவின் மகன்; தந்தையிடமிருந்து வரமும் பெற்று, தொழிலும் கற்றவன்; நிபுணன். அவன் பாலத்தைக் கட்ட முன்வந்து, சுக்ரீவனைப் பார்த்து, "வானரர்களில் சிறந்தவரே! பாலம் கட்டுவதற்கான எல்லாப் பொருட்களும் உடனே சேகரிக்கப்பட வேண்டும்' என்று கேட்டுக்கொண்டான்.

நளன் கேட்ட பொருட்களை சேகரிக்க வானரர்கள் புறப்பட்டனர். (வானரர்கள் என்றால் ஆங்கிலத்தில் சொல்கிற "மங்கி' அல்ல; அவர்கள் குரங்குகள் அல்ல; பெரும் வீரர்கள்; கற்றவர்கள்; நகரத்தில் அரண்மனைகளைக் கட்டிக்கொண்டு வாழ்ந்தவர்கள்.... என்கிற விவரங்கள் வால்மீகி ராமாயணத்தில் இருக்கின்றன).
"வானரர்களின் உதவியுடன், பாறைகள் தகர்க்கப்பட்டன; மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டு, கொண்டுவரப்பட்டன. இம்மாதிரி பாறைகளும், மரங்களும், மற்ற பொருட்களும் கடற்கரையில் கொண்டு வந்து சேர்ப்பிக்கப்பட்டன. பாலம் கட்டப்படுகையில், பாறைகளை நேர்க்கோட்டில் நிறுத்தி வைக்க, பலமான கயிறுகள் பயன்படுத்தப்பட்டன. நளன் உத்திரவிட்டவாறு, பாறைகளை சமுத்திரத்தில் தள்ளிக் கொண்டும், மரங்களை பாறைகள் மீது நிறுத்தியும், பல வேலைகளைச் செய்தும், வானரர்கள் சுறுசுறுப்பாக இயங்கினர். கட்டி முடிக்கப்பட்ட பாலம், வான வீதியில் தெரிகிற நக்ஷத்திர மண்டலம் போல காட்சி அளித்தது. மேல் வானத்திலிருந்து பார்ப்பதற்கு, ஒரு பெண்ணின் கூந்தலை, இருபுறம் விலக்கி எடுக்கப்பட்ட வகிடு போல தோற்றமளித்த அந்த பாலத்தின் மீதேறி, வானரர்களும், மற்றவர்களும் கடலைக் கடந்து சென்றனர்...'

இவையெல்லாம் வால்மீகி ராமாயணத்தில், கூறப்பட்டுள்ள விவரங்கள். ஆகையால் புத்திசாலித்தனமாக கேட்பதாக நினைத்துக்கொண்டு, பிதற்றியுள்ள முதல்வர், "நளன் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தார்?' என்றாவது கேட்டிருக்கலாம். அப்படிக் கேட்டிருந்தால், அதற்கு நம்முடைய பதில் : நளன் தனது தந்தையிடம் தொழில் கற்றவன். நிபுணன் என்று பெயர் பெற்றவன்.
அது இருக்கட்டும். "ராமன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்து பாலம் கட்டினா(ன்)ர்?' என்று கேட்கிற முதல்வர், இதேபோல வேறு சில விஷயங்களைப் பற்றியும் கேள்வி கேட்பாரா?

"கண்ணகி தன்னுடைய மார்பகத்தைக் கிள்ளி எறிந்து, மதுரையை எரித்ததாகச் சொல்கிறார்களே – அந்த டெக்னிக்கை, அவள் எந்தக் கல்லூரியில் படித்தாள்? அது என்ன பயாலஜியா? அல்லது வெடிகுண்டு தயாரிக்கிற கலையா?' என்று முதல்வர் கேட்பாரா? நாம் கேட்க மாட்டோம்; ஏனெனில் கண்ணகி காட்டியது, கற்பின் சக்தி என்பதை ஏற்பவர்கள் நாம்.
தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய முதல்வர், "தொல்காப்பியர் எந்தக் கல்லூரியில் இலக்கணம் படித்தார்? தமிழ் இலக்கணத்தையே வகுத்ததாகச் சொல்லப்படுபவருக்கு இலக்கணம் கற்பித்தது யார்?' என்று கேட்பாரா? நாம் கேட்க மாட்டோம்; ஏனெனில், நமது சிற்றறிவுக்கு எட்டாத, பெரும் புலமையும், வல்லமையும் படைத்தவர்கள் முன் காலத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டவர்கள் நாம்.

"திருவள்ளுவர், திருக்குறள் எழுதியதாகச் சொல்கிறார்களே – அவர் எங்கு செய்யுள் இலக்கணம் படித்தார்? எங்கு தமிழ் கற்றார்? எங்கு ஃபிலாஸபி என்கிற தத்துவ விசாரணையை கற்றார்?' என்றெல்லாம் கேட்பாரா முதல்வர்? நாம் கேட்க மாட்டோம்; ஏனென்றால், திருவள்ளுவர் இறையருள் பெற்ற மகான் என்பதை உணர்ந்தவர்கள் நாம்.

சரி, இதெல்லாம் போகட்டும். ராமர் இருந்தாரா என்று கேட்கிற முதல்வர், இதுவரை தப்பித் தவறியாவது மற்ற மத நம்பிக்கைகள் பற்றி ஒரு சிறு விமர்சனமாவது செய்தது உண்டா? காஷ்மீரில் உள்ள ஹஸ்ரத்பால் மசூதியில் (புனித ஸ்தலத்தில்) நபிகள் நாயகத்தின் தலை முடி ஒன்று இருப்பதாகக் கூறப்பட்டு, அது பெரிதும் மரியாதைக்குரியதாகக் கருதப்படுகிறதே – அது பற்றி முதல்வர் பேசியதுண்டா?
"அந்த முடி, நபிகள் முடிதான் என்று எப்படித் தெரியும்? என்ன ஆதாரம்?' என்று அவர் கேட்பாரா? நாம் கேட்க மாட்டோம்; ஏனென்றால் மற்ற மத நம்பிக்கைகளை மதிக்கக் கற்றவர்கள் நாம்; மற்ற மதத்தவர்கள் போற்றி வணங்குகிற மகான்கள் பற்றி அவமரியாதையாகப் பேசுவது, அற்பத்தனம் என்று நம்புகிறவர்கள் நாம்.

"ஏசு கிறிஸ்து சிலுவையில் மாண்டு, பின்னர் உயிர்ப்பித்து வந்ததாகச் சொல்கிறார்களே? அவர் அந்தக் கலையை எந்த ஆராய்ச்சிக் கூடத்தில் பயின்றார்? அல்லது அவரை உயிர்ப்பித்தவர் எந்த விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலம் இந்த சிகிச்சையைக் கற்றார்? ஆதாரம் உண்டா?' என்று முதல்வர் கேட்பாரா? நாம் கேட்க மாட்டோம். மற்ற மத நம்பிக்கையையும், மற்ற மதத்தவர்கள் போற்றுகிற இறைத் தூதர்களையும் மட்டமாகப் பேசுவது, காட்டுமிராண்டித்தனமான செயல் என்பதை உணர்ந்தவர்கள் நாம்.
இவ்வளவு போவானேன்? "புத்தர் அணிந்த ஆடை – மஞ்சள் நிறமுடையது என்பதால், நானும் மஞ்சள் துண்டு போடுகிறேன்' என்பது முதல்வர், தன்னுடைய மஞ்சள் மகிமை பற்றி அருளிய பற்பல காரணங்களில் ஒன்று. "புத்தர் மஞ்சள் ஆடை அணிந்தார் என்பதற்கு என்ன ஆதாரம்? அவர் எங்கே அந்த ஆடைக்கு சாயம் ஏற்றினார்?' என்று முதல்வர் கேட்பாரா? நாம் கேட்க மாட்டோம். ஏனென்றால், அவதார புருஷர்கள் போல தோன்றிய பெரியவர்கள் பற்றி, மடத்தனமான விமர்சனங்கள் செய்வது, சுத்த முட்டாள்தனம் என்பதை உணர்ந்தவர்கள் நாம்.

இராமாயணம் வெறும் கதை என்று நேரு கூறியிருக்கிறார் – என்பது முதல்வர் காட்டுகிற பெரிய ஆதாரம்! நேரு உட்பட – எந்த நாஸ்திகரும், ராமாயணம் பற்றியோ, ஹிந்துக்கள் நம்பிக்கைகள் பற்றியோ, கூறுகிற கருத்துக்கள், அவை பற்றிய தீர்ப்பாகிவிடாது.
சரி, நேரு சொன்னதை இப்படி வேத வாக்காக – மன்னிக்கவும், பெரியார் வாக்காக – எடுத்துக்கொள்கிற முதல்வர், நேரு சொன்ன மற்றொரு கருத்து பற்றி என்ன சொல்லப்போகிறார்? "நான்சென்ஸ்' என்று தி.மு.க.வினரை நேரு வர்ணித்ததற்காக, இவர்கள் ஏன் போராட்டம் நடத்தினார்கள்? நேருவே சொல்லிவிட்டாரே? அப்புறம் ஏது அப்பீல்? "நான்சென்ஸ்' என்று ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே!

முதல்வர் வாய்க்கு வந்தபடி பேசியிருக்கிறார் – அதுவும் ஹிந்து மத நம்பிக்கைகளை பற்றி மட்டும்தான். ஏனென்றால் ஹிந்துக்கள் இளிச்சவாயர்கள் என்பது அவருடைய தீர்மானமான அபிப்ராயம். இல்லாவிட்டால், கோடானுகோடி மக்கள் வணங்குகிற புருஷோத்தமனை, இப்படி தாறுமாறாகப் பேசுவாரா அவர்?

பணம் தருகிற கர்வம், பதவி தருகிற பித்து, அரசியல் புகழ் தருகிற ஆணவம் போன்றவை ஒன்று கூடி ஒருவரிடம் இருக்கும்போது, அவர் வாய் இப்படித்தான் பேசும். ராமரின் பொறியியல் தகுதி பற்றி பேசுகிறவர், எந்தத் தகுதி கொண்டு முதல்வர் பதவி வகிக்கிறார்? மக்கள் தருகிற ஓட்டு; அதே மக்களில் முக்காலே மூணு வீசம் பேர் ராமரை தெய்வமாக வணங்குகிறவர்கள்.

"அந்த ஓட்டு வேண்டாம்; ராமனை தெய்வமாக நினைக்கிற மூடர்களின் ஓட்டு வேண்டவே வேண்டாம்!' என்று சொல்வாரா முதல்வர்? அவர் சொல்லாவிட்டால் என்ன? நாம் சொல்வோம். ராமரையும், மற்ற தெய்வங்களையும் வணங்குகிற ஹிந்துக்கள், இந்த முதல்வருக்கும், அவர் சார்ந்துள்ள கட்சிக்கும், இனியும் வாக்களிப்பது, வெட்கக்கேடான செயலாகத்தான் இருக்கும்.

சுட்டது from துக்ளக் (திரு.சோ)

Monday 17 September 2007

பட்சதும் கீசினதும்

செம்மொழித் தமிழின் பெருமையை மேலும் பன்மடங்கு உயர்த்த பெரும் போட்டியே நடந்து கொண்டிருக்கிறது கோடம்பாக்கத்தில்.
தங்களது படத்தின் தலைப்பை “தூய தமிழில்”
“பொறுக்கி” என்று வைப்பதா?
“பொல்லாதவன்” என்று வைப்பதா?
“கெட்டவன்” என்று வைப்பதா? என பட்டிமன்றமே நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு வார்த்தைக்கும் இவர்கள் கொடுக்கும் நெத்தியடி விளக்கங்களைக் கேட்டால், ஆனானப்பட்ட தமிழ்ப் பேராசிரியர்களே மயக்கம் போட்டு விழுந்து விடுவார்கள்.
“பொறுக்கி” என்றால் சமூகத்தில் நடைபெறும் குற்றங்களையும், அநீதிகளையும் பொறுக்கி எடுப்பவன் என்கிறார், பல்வேறு “கலைப் படைப்புகளை” தமிழுக்கு அளித்த ஷக்தி சிதம்பரம். இருந்தாலும் தயாரிப்பாளர் சங்கத்தின் வேண்டுகோளுக்காக வேறு பெயரையும் யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.
“ “கெட்டவன்” என்றால், ஒரு பெண்ணால் கெட்டவன் என்று அர்த்தம். யாரையும் திட்டுவதாக அர்த்தம் வராது. பெயரை மாற்றப் போவதில்லை நான்” என்கிறார் சிலம்புக்கு அரசன்.
“ “பொல்லாதவன்” என்கிற வார்த்தை யாரையும் திட்டுகிற அர்த்தத்தில் இல்லை. அதைவிட எனது மாமனாரே இந்தப் பெயரில் நடித்திருக்கும் போது...அங்கிள் மெச்சிய மருமகனாய் அதே பெயரில் நடிப்பதில் என்ன தவறு?” என்கிறார் தனுஷ்.
அதானே! இவர்கள் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?
ரொம்ப ரொம்பச் சரி...
நாளை “எச்சக்கலை” என்று தலைப்பு வைத்தால் கூட “நாங்கள் கலைகளின் எச்சத்தைப் பற்றிப் படம் எடுக்கிறோம்” என்று போட்டுத் தாக்கக் கூடவா நமக்குத் தெரியாது?.
அதனால் அப்படியே வேலையோடு வேலையாக.....
பேமானி
சோமாறி
கசுமாலம்
கம்மனாட்டி
முடிச்சவிக்கி
மொள்ளமாறி
விருந்தாளிக்குப் பொறந்தவன்
போன்ற “அரிய” டைட்டில்களையும் உடனே பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே....
ஏமாந்து விட்டா வேற எவனாவது லவட்டீட்டுப் போயிருவான்.


-------------------------------------------------------------------------------------


மிகச் சரியாய்
இசைக்கும்
இசைக் கருவிக்கு
இங்கெவனோ
பெயர் வைத்தான்
‘தப்’பென்று. [‘பாரதி ஜிப்ரான்']


எல்லாரும்
காதலிக்கிறார்கள்
பின்னொரு நாளில்
வருத்தப்படுகிறார்கள்.
சிலர் சேர்ந்ததற்காக
சிலர் பிரிந்ததற்காக.... [‘பாரதி ஜிப்ரான்']


சுட்டது from குமுதம்

Thursday 13 September 2007

Believe it or not






This page is been visited by nearly 14 crore people every day






சுட்டது Tamilcinema.com



ஐந்து மணிக்கு இன்டர்வியூவுக்கு போக வேண்டிய ஆள், பத்து மணிக்கு படுக்கையைவிட்டு எழுந்து குய்யோ முறையோ என்று குமுறிய மாதிரி குமுறிக் கொண்டிருக்கிறார் டி.ராஜேந்தர். எந்த கட்சியோடு கூட்டணி சேர்ந்தாலும் அந்த கட்சியை அங்கிருந்து கொண்டே ஏகடியம் பேசுவதும், கேட்டால் நான் யாருக்கும் பயந்தவன் அல்ல என்று குரல் உயர்த்துவதும் ராஜேந்தரின் வாடிக்கை.
இதை வேடிக்கையாக எடுத்துக் கொண்டு அவரை கண்டு கொள்ளாமல் இருந்தால், அந்த கூட்டணியை விட்டு வெளியேறி வேறொரு கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளவும் தயங்க மாட்டார் இந்த தன்மான சிங்கம். இப்படி கடந்த பலமுறை அ.தி.மு.க-தி.மு.க என்று மாறி மாறி வாழ்க்கை நடத்தியவர், திடீரென்று யாருக்கும் ஆதரவில்லை என்று குரல் கொடுத்திருக்கிறார். (அவருடைய கோடிக்கணக்கான(?) தொண்டர்கள் பலம் இல்லாமல் எப்படிதான் தங்கள் கட்சியை நடத்த போகிறார்களோ இவருடைய முன்னாள் தோழமை கட்சிக்காரர்கள்?!)
ராஜேந்தரின் இந்த புலம்பலுக்கு என்ன காரணம்? தனக்கு பின்னால் கட்சி ஆரம்பித்துவிட்ட விஜயகாந்த், சரத்குமார் போன்றவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் வளர ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களை மக்கள் ஏற்றுக் கொண்டதற்கு ஒரே காரணம், அவர்கள் யாருடனும் கூட்டணி வைத்துக் கொள்ளாததுதான். நாமும் அதுபோல் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டேன் என்று அறிக்கை விட்டால் மக்கள் தன்னை ஆதரிக்க மாட்டார்களா? ராஜேந்தரின், Ôகூட்டணி இல்லை' கோஷத்திற்கு அர்த்தம் புரிகிறதா?
மன்சூரலிகானும் இயக்குனர்தான். மணிரத்னமும் இயக்குனர்தான். இந்த உண்மை ராஜேந்தருக்கு புரிகிறதோ, இல்லையோ... மக்களுக்கு நன்றாகவே புரியும்!
Mikka nandri Tamilcinema.com

Ellarum oru O podunga, TR ippo kootanilerndhu vilagirukaar, innum koncha naala Arasiyala vitu vilagiruvaar. Vaarungal varaverpoam

Tuesday 4 September 2007

IS it True

Salary & Govt. Concessions for a Member of Parliament (MP)

Monthly Salary : 12,000

Expense for Constitution per month : 10,000

Office expenditure per month : 14,000

Traveling concession (Rs. 8 per km) : 48,000 ( eg.For a visit from kerala to Delhi & return: 6000 km)

Daily DA TA during parliament meets : 500/day

Charge for 1 class (A/C) in train: Free (For any number of times) (All over India )

Charge for Business Class in flights : Free for 40 trips / year (With wife or P.A.)

Rent for MP hostel at Delhi : Free

Electricity costs at home : Free up to 50,000 units

Local phone call charge : Free up to 1 ,70,000 calls.

TOTAL expense for a MP [having no qualification] per year : 32,00,000 [i.e . 2.66 lakh/month]

TOTAL expense for 5 years : 1,60,00,000

For 534 MPs, the expense for 5 years : 8,54,40,00,000 (nearly 855 crores)

AND THE PRIME MINISTER IS ASKING THE HIGHLY QUALIFIED, OUT PERFORMING
CEOs TO CUT DOWN THEIR SALARIES…..

Ennatha solla

Proud to be Indian

Wednesday 11 July 2007

மீண்டும் சுட்டது - துக்ளக் 2



ஒரு வேலை, இப்படித்தான் நடக்குமா?

Monday 2 July 2007

சுட்டது - துக்ளக்














































































ரொம்ப தெளிவாத்தா இருக்காங்க

UltimateTruth

Whenever I find the key to success, someone changes the lock. !

To Err is human, to forgive is not a COMPANY policy.

The road to success........ is always under construction.

Alcohol doesn't solve any problems, but if you think again, neither does Milk ..

In order to get a Loan, you first need to prove that you don't need it.

All the ! desirable things in life are either illegal, expensive or fattening.

Since Light travels faster than Sound, people appear brighter before you hear them speak.

Everyone has a scheme of getting rich..... which never works.

If at first you don't succeed.... Destroy all evidence that you ever tried.

You can never determine which side of the bread to butter. If it falls down, it will always land on the buttered side.


Anything dropped on the floor will roll over to the most inaccessible corner.

***** 42.7% of all statistics is made on the spot. *****

As soon as you mention something...... if it is good, it is taken.... If it is bad, it happens.

He who has the gold, makes the rules ---- Murphy's golden rule.

If you come early, the bus is late. If you come late...... the bus is still late.

Once you have bought something, you will find the same item being sold somewhere else at a cheaper rate.


If you have paper, you don't have a pen....... If you have a pen, you don't have paper...... if you have both, no one calls.

Especially for engg. Students----
If you have bunked the class, the professor has taken attendance.

You will pick up maximum wrong numbers when on roaming.


All PMT buses are crowded.
On Contrary PMT buses in opposite direction always go empty.

The door bell or your mobile will always ring when you are in the bathroom.

After a long wait for bus no.20, two 20 number buses will always pull in together and the bus which you get in will be crowded than the other.

If your exam is tomorrow, there will be a power cut tonight.

The last person to be fired or quit is responsible for all the errors until another person is fired or quits.

Irrespective of the direction of the wind, the smoke from the cigarette will always tend to go to the non- smoker ...............

Friday 27 April 2007

சும்மா ஒரு ஜல்லி பதிவு

சுர்யா கொடுத்துவேச்சுருக்கணும்


















ஒரு மொக்கை Joke










Hint: T nagar பக்கத்துல இருக்கு









scroll down....









scroll down....













WestMambalamங்க