Monday 15 October 2007

ராமதாஸ், கருணாநிதி, ஜெயலலிதா - துணுக்ஸ்

தொண்டர்களின் ரத்தத்தைக் குழைத்து, எலும்புகளை செங்கற்களாக மாற்றி கட்டப்பட்டதுதான் அண்ணா அறிவாலயம்.

– கருணாநிதி
பயங்கரமாக இருக்கிறதே! இப்படி கட்டிடம் கட்டுவதற்கு, எந்த பொறியியல் கல்லூரியில் படித்து பொறியாளராக வேண்டும்?

தி.மு.க. அரசைக் கவிழ்க்க வேண்டும் என்று சொல்ல, ஜெயலலிதாவுக்கு எந்தத் தகுதியும் இல்லை.
– ராமதாஸ்
தனக்குத்தான் அந்தத் தகுதி இருக்கிறது என்று நினைக்கிறாரா?

விஜயகாந்த் கட்சியில் சேருபவர்கள் எல்லாம் கழிசடைகள்.
– எம்.ஆர்.கே.
பன்னீர்செல்வம் அதனால் என்ன? அவர்கள் கட்சி மாறி தி.மு.க.வில் சேர முன்வந்தால், "நீங்கள் இருக்க வேண்டிய இடமே இதுதான்' என்று கூறி கலைஞர் பாசத்துடன் சேர்த்துக்கொள்ள மாட்டாரா என்ன?

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி மலரும்போது, நிச்சயமாக திருப்பூர் குமரன் பற்றிய திரைப்படம் எடுக்கப்படும்.
– ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
இந்த கிண்டல்தானே வேண்டாம் என்பது? படம் எடுக்க இஷ்டமில்லையென்றால் நேரடியாகச் சொல்லலாமே?

கல்விக் கொள்ளைகள் தொடர்பாக, தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன...? – ராமதாஸ்
"எதற்கும் ஒரு எல்லை உண்டு' என்று முதல்வர் அப்போதே எச்சரித்துவிட்டாரே! அது நடவடிக்கை இல்லையா?


துக்ளக்

1 comment: