Wednesday 28 November 2007

கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க

சாமியார்கள் எத்தனை ரகமான கூத்து பண்ணி னாலும் சலிக்காமல் ரசிக்கிற வாசக மகா ஜனங்களுக்கு லேட்டஸ்ட் அறிமுகம் & பண்ணாரி சாமியார்!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலிருந்து ராசி புரம் செல்லும் வழியில் வையப்பமலை பஸ் ஸ்டாப்பில் இறங்கி தெற்கே ஐந்து கிலோமீட்டர் தூரம் போனால் வரும் கிராமம் பெரியமணலி. இங்குதான் பிரமாண்ட ஆசிரமம் கட்டி Ôஅருள்Õ பாலித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீலஸ்ரீ பண்ணாரி சாமியார்.
பல வருடங்களாக முடி வெட்டாமலும் எண்ணெய் வைக்காததாலும் சிடுக்கு பிடித்த நீண்ட ஜடா££... முடி! உடம்பு முழுக்க அழுத்த்த்தமான விபூதிப் பட்டை... கழுத்தை மறைத்து ருத்ராட்சக் கொட்டை... இடுப்பில் காவி வேட்டி... அதில் முடியப்பட்ட செல்போன்... இதுதான் ஸ்ரீலஸ்ரீ பண்ணாரி சாமியாரின் திருக்கோலம்.

நாம் அவரது ஆசிரமத்துக்குச் சென்றி ருந்த நேரத்தில் பொள்ளாச்சியில் இருந்து வந்திருந்த பக்தர் ஒருவருக்கு அருள் வாக்கு சொல்லிக்கொண்டிருந்தார் சாமியார். ‘‘அடுத்தவனைப் பார்த்துப் பார்த்தே உம் பொழப்பு நாசமாப் போயிட்டிருக்கு. அடுத்தவனைப் பார்க்குறதை நிறுத்திட்டு நீ பொழைக்கிற வழியைப் பாருடா. உனக்கு அடிக் கடி மூட்டு வலி வருமே, ரைட்டா? அதுக்கு ஒரு மருந்து தர்றேன். தெனமும் மூணுவேளை மூணு நாளைக்கு சாப்பிடு. அப்புறம் எந்த வலியும் உனக்கு வராது’’ என்று பொள்ளாச்சி பார்ட்டிக்கு அருள்வாக்கு பிளஸ் மூட்டுவலி மருந்துக்கு ஃபீஸ் ஐந்தாயிரம் வாங்கிக்கொண்டார்.

நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம். ‘‘உங்க பத்திரிகை எவ்வளவு
விற்கும்..? எந்த ஊருக்கெல்லாம் போகுது..?’’ என்று சர்வே ரேஞ்சுக்கு விவரம் கேட்டுக்கொண்ட பிறகே திருவாய் திறந்தார் பண்ணாரி.

‘‘மல்லசமுத்திரம் பக்கம் இருக்கிற சின்னகாளிப்பட்டிதான் என் சொந்த ஊர். வீட்டுல வச்ச பேரு நல்லதம்பி...ÕÕ என்று ஆரம்பித்து தன் பூர்வ கதை சொல்லிவிட்டு, ‘‘கொஞ்ச நாளைக்கு முன்னாடி உலகத்துல இருக்குற மக்கள் எல்லாம் நல்லா இருக்கணும்னு பனை மரத்து மேல ஏறி உட்கார்ந்து நூத்திப் பதினோரு நாள் தவமிருந்தேன். அந்த சமயத்துல என் சாப்பாடு கடலைக் கொட்டை மட்டும் தான். அதுவும் என்னோட பக்தர்கள் கீழே இருந்து கயித்துல கட்டிவிடுவாங்க. நான் மேலே இருந்து இழுத் துக்குவேன். பூமியை தோண்டி அதுக்குள்ளயும் உட்கார்ந்து தவமிருந் துட்டேன். என்னோட தவத்தாலதான் இன்னைக்கு உலகத்துல பெரிய அளவுல சண்டை சச்சரவு இல்லாம அமைதியா மக்கள் வாழ்ந்துட்டு இருக்காங்க என்று இன்றைய பராக்கிரமÕங்களை உதிர்த்தார். [அள்ளி விடறாரு]

‘‘நான் பள்ளிக் கூடத்துப் பக்கம் எட்டிக்கூடப் பார்த்தது இல்லை. ஆனா, இன்னைக்கு பல பேருடையை நோயை குணப்படுத்துறேன். டாக்டருங்களே முடியாதுன்னு சொன்ன பலபேரை காப்பாத்திருக்கேன்ÕÕ என்றவர், ÔÔஎய்ட்ஸ்க்கு மருந்து இல்லன்னு சொல்லிட்டு இருக்காங்க. ஆனா நான் கண்டுபிடிச்சிட்டேன். சில மூலிகைகளை ஒண்ணா அரைச்சு (அதைச் சொல்வாரா என்ன?) ஒரு தைலம் ரெடி பண்ணியிருக்கேன். அதை தெனமும் மூணு உருண்டை தின்னாப் போதும் எய்ட்ஸ் பறந்துபோயிடும். அதேமாதிரி சில பேருக்கு சீக்கிரமே விந்து வெளியேறிடும். நான் அதுக்கும் மருந்து வச்சிருக்கேன். ஒரு வேளைக்கு பதினைஞ்சு ரூபா ஆகுது. ஒருவாரம் தொடர்ந்து தின்னா போதும். எவ்வளவு நேரமானாலும் தாங்கும்! என்றார் Ôசிட்டுக்குருவிÕ வைத்தியர் ரேஞ்சுக்கு! இந்த பண்ணாரி சாமிக்கும் பக்த வாடிக்கையாளர்கள் அடிக்கடி வந்து போவதில், ஜோராகத்தான் கதை ஓடிக்கொண்டிருக்கிறது! [சாமி இதுக்கே கண்ணக்கட்டுதே]

ஏமாற ஆளிருந்தால்... இதுபோல நன்னாரிகளுக்கா நாட்டில் பஞ்சம்?!
Vikatan.com

Wednesday 21 November 2007

மீண்டும் ஒரு சர்ச்சையா?

படைப்புக்கும், படைப்பாளிகளுக்கும் சம்பந்தமேயில்லாமல் 'திடீர்' சேகுவாராக்கள் உருவாகிக் கொண்டிருக்கிற தமிழ்சினிமாவில், படைப்பை போலவே பேச்சும், பேச்சை போலவே படைப்பையும் கொண்டிருக்கிறார் கௌதமன். கத்தியின் வலிமையும், பிளேடின் கூர்மையும் இருக்கிறது அவரது பேச்சில்! ஆட்டோ சங்கர், சந்தனக்காடு என்று தொலைக்காட்சி வரலாற்றில் புதிய வாள்வீச்சை நடத்திக் கொண்டிருக்கிற கவுதமனை சந்தித்தோம்-

கிரிமினல்களை போற்றுவதுதான் உங்கள் நோக்கமா?

நிச்சயமாக இல்லை. ஆட்டோகிராஃப், ஆட்டோ சங்கரின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் தொடர். ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுனரை எப்படி இந்த அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் மிகப்பெரிய கிரிமினல் ஆக்கினார்கள் என்பதைதான் அந்த தொடர் விரிவாக சொன்னது. இதை பார்க்கிறபோது எச்சரிக்கை உணர்வுதான் வருமே தவிர, யாரும் ஆட்டோ சங்கர் ஆகிவிட வேண்டும் என்று விரும்ப மாட்டார்கள். எந்த கிரிமினலும் இந்த மண்ணில் தோன்றிவிடக் கூடாது என்பதால்தான் இதுபோன்ற தொடர்களை எடுக்கிறேன். ஆட்டோ சங்கர் தானே எழுதிய வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடர் அது. நிஜத்தை மட்டுமே பேசிய தொடர்.

சந்தனக்காடும் அப்படித்தான். இந்த தொடருக்காக வீரப்பன் வாழ்ந்த இடங்களையும், அவரோடு பழகிய மனிதர்களையும் நேரில் சென்று பார்த்து, பழகி, பிறகுதான் இந்த தொடரை உருவாக்கினேன். வீரப்பன் யார்? கொஞ்சம் பின்னோக்கி பார்த்தால் அவரை வெறும் சந்தனக்கடத்தல் மன்னனாக மட்டும் பார்க்க முடியாது. ஒரு தமிழின போராளியாகவும் இருந்திருக்கிறார். தமிழச்சிகள் கர்நாடக எல்லையில் அங்குள்ள போலீஸ் அதிகாரிகளால் கற்பழிக்கப்பட்டபோது, அந்த போலீஸ் ஸ்டேஷனை கைப்பற்றி ஷட்டரை மூடிவிட்டு உள்ளேயே அத்தனை போலீஸ்காரர்களையும் சுட்டுக் கொன்ற போராளிதான் வீரப்பன். இவர் வீட்டு பெண்ணை கற்பழித்தார்கள் என்றா அந்த கொலைகளை செய்தார்? இல்லையே! எல்லா தமிழச்சிகளையும் தன் குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக பார்த்ததன் விளைவுதானே அது? அதன்பின்தான் தமிழச்சிகளிடம் வாலாட்ட தயங்கியது கன்னட போலீஸ். இப்படிப்பட்ட மனிதருடைய கதையை சொல்லாமல் நான் யார் கதையை சொல்வது?

திரைப்பட இயக்குனரான நீங்கள், சந்தனக்காட்டையும் திரைப்படமாக எடுத்திருக்கலாமே?

எடுத்திருக்கலாம்தான். ஆனால், மொத்த கதையையும் 50 சீனில் சொல்லியாக வேண்டும். சீரியல் என்றால் ஒரு சம்பவத்தையும் விட்டு விடாமல் 200 எபிசோடுகளில் சொல்லலாம். அந்த சுதந்திரம் இருக்கிறதல்லவா? அதுமட்டுமல்லாமல் வீரப்பன் மரணத்தை சொல்லும்போது பல உண்மைகளை இந்த உலகத்திற்கு சொல்ல வேண்டியிருக்கிறது. சினிமாவை விட சீரியலாக இருந்தால் சென்சார் சிக்கல்கள் இருக்காது. இந்த தொடர் சூடு பிடித்ததும் பாருங்கள். தமிழ்நாட்டில் மிகப்பெரிய சர்ச்சகளை எழுப்பும்.

இந்த தொடருக்கு வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி எதிர்ப்பு தெரிவித்தாரே?

சுமார் 120 நாட்கள் காட்டிலேயே தங்கி மிகப்பெரும் இன்னல்களை சந்தித்து இந்த தொடரை எடுத்திருக்கிறோம். ஏராளமானவர்களின் கடுமையான உழைப்பு இருக்கிறது இந்த தொடருக்கு பின்னால். ஆனால், இந்த தொடரை ஒளிபரப்புவதற்கு முன் கோடிக்கணக்கில் பணம் வேண்டும் என்று அவர் கேட்டால் எப்படி? பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் அவர் கேட்கவில்லை. யாரோ அவரை தவறாக தூண்டி விட்டிருக்கிறார்கள். கடைசியில் நீதிமன்றமே அனுமதி கொடுத்துவிட்டது. முத்துலட்சுமியின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்ய ஐயா ராமதாஸ் எப்போதும் தயாராக இருக்கிறார்.

வீரப்பனுக்கு பல அரசியல்வாதிகளின் தொடர்பு இருந்ததால்தான் காட்டிற்குள் இத்தனை காலம் இருக்க முடிந்ததா?

யாருடைய உதவியோடும் அவர் காட்டுக்குள் இருந்தததில்லை. ஒவ்வொரு நாளும் ஒடிக்கொண்டேதான் இருந்தார். அத்தனை பெரிய காட்டில் அவருக்கு யார் வருகிறார்கள். எங்கே வருகிறார்கள் என்பதெல்லாம் கூட தெரியும். பறவைகள், மிருகங்கள் உதவியுடன்தான் அவர் காட்டிற்குள் இருந்தார் என்பதுதான் உண்மை. இந்த தொடரை பாருங்கள். பல உண்மைகள் உங்களுக்கு ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஊட்டும்!

மறுபடியும் சினிமா பக்கம் செல்வீர்களா?

மகிழ்ச்சி, நலமறிய ஆவல் என்ற இரண்டு படங்களை இயக்க தற்போது சம்மதித்துள்ளேன். இதில் ஒரு கதையில் நானே ஹீரோவாக நடிக்கும் எண்ணமும் இருக்கிறது.

தமிழ் சினிமா.காம்

Tuesday 13 November 2007

அரசியல் நட்சத்திர தீபாவளி

தீபாவளி, பொங்கல் என்று வந்துவிட்டால் எல்லா பத்திரிகைகளும், டி.வி. சேனல்களும் சர்வம் சினிமா மயமாக மாறிவிடுகின்றன. அப்போதுதான் தீபாவளி கொண்டாடிய திருப்தியே ஏற்படுகிறது. நாம் மட்டும் விதிவிலக்காக இருந்து என்ன சுகத்தைக் கண்டோம்? எனவே, சினிமா ரசிகர்களைத் திருப்திபடுத்தும் வகையில், அரசியல் தலைவர்களை சினிமா நட்சத்திரங்களாக மாற்றிவிட்டோம்.

நட்சத்திர சந்திப்பு

(வாசகர்களே, புரட்சி ஸ்டார் ஜெயலலிதாவும், வட இந்திய சீனியர் ஸ்டார் வாஜ்பாயும் உங்களுக்காக சந்தித்துப் பேசுகிறார்கள்.)

ஜெயலலிதா : வணக்கம். நாம முதல் முதல்லே எந்த படத்திலே சேர்ந்து நடிச்சோம்னு ஞாபகமிருக்கா?

வாஜ்பாய் : "டெல்லி கோட்டை' படத்தைத்தானே சொல்றீங்க? அதெல்லாம் மறக்கக்கூடிய விஷயமா? அந்தப் படத்திலே ஏற்பட்ட அனுபவங்களை நினைச்சா இப்ப கூட உடம்பெல்லாம் நடுங்குது. ஒரு மாதிரி ஆன்ட்டி ஹீரோயினா நீங்க அதுலே நடிச்சிருந்தீங்க இல்லே?

ஜெயலலிதா : ஆமா! என்னை நம்ப வெச்சு, ஏமாத்தற கூட்டத்துக்கு தலைவரா நீங்க நடிச்சிருந்தீங்க. உங்களை நான் எப்படி பழிவாங்கறேன்றதுதான் கதை. படம் நல்லபடியா ரிலீஸ் ஆனாத்தான் எனக்கு எதிர்காலமேன்ற மாதிரி, அப்போ நிலைமை இருந்தது.

வாஜ்பாய் : படம் முழுக்க உங்களை சமாதானப்படுத்தற ரோல்தான் எனக்கு கிடைச்சது. எவ்வளவு பயங்கரமா வசனம் பேசியிருந்தீங்க அதுலே. என் லைஃப்லே அந்த மாதிரி திகில் வசனங்களை நான் கேட்டதேயில்லை.

ஜெயலலிதா : அது மட்டுமா? "ஏமாத்திப் போட்டீங்களே, ஐயா. வாஜ்பாய் ஐயா'ன்னு நான் சொந்தக் குரல்லே பாடின பாட்டு, பெரிய ஹிட் ஆச்சே.

வாஜ்பாய் : அந்த க்ளைமாக்ஸ் டீ பார்ட்டி ஸீன் மாதிரி, எந்தப் படத்திலேயும் வந்ததில்லை.

ஜெயலலிதா : அதை ஏன் ஞாபகப்படுத்தறீங்க? செலவு பண்ணதுதான் மிச்சம். ஒரு பிரயோஜனமும் இல்லை.

வாஜ்பாய் : போகட்டும் விடுங்க. விதியை யாராலே மாத்த முடியும்? நாம மறுபடியும் இணைஞ்சு நடிக்கணும்னு நம்ம ரசிகர்கள் ஆசைப்படறாங்கன்னு கேள்விப்பட்டேன்.

ஜெயலலிதா : அதைப் பத்தித்தான் நானும் யோசிச்சுக்கிட்டிருந்தேன். மூன்றாவது அணி கம்பைன்ஸ்லேர்ந்து பேச வந்தாலும் வரலாம். யாரை திருப்பி அனுப்பறதுன்னு இனிமேதான் முடிவு பண்ணனும்.


""மறக்க முடியாத காட்சிகள்''– வளரும் நடிகர் ராமதாஸ்

நான் நடிச்ச பல காட்சிகளை என்னாலே மறக்க முடியாது. குறிப்பா, "நான் சொன்னா கேட்டுக்கணும்' படத்திலே எங்க ஆளுங்களோட, டாஸ்மாக் கடைகளுக்குப் போய், "தயவு செஞ்சு மூடுங்க'ன்னு கெஞ்சுவேன். மூடமாட்டாங்க. மரியாதையா கடையை மூடுங்க'ன்னு எச்சரிப்பேன். அப்பவும் மூடமாட்டாங்க. கோபம் வந்து நானே கடைக்கு பூட்டுபோட்டு, மறுநாள் திறந்து விட்டுட்டு மறுபடியும் கெஞ்சுவேன். அப்படியும் வியாபாரம் நிக்காது. அதுக்காக லட்சியத்தை விட்டுட முடியுமா? கடையை அடிச்சு நொறுக்கிட்டு, அதுக்கப்புறம் கால்லே விழுந்து "வேண்டாம்.... என் பேச்சைக் கேளுங்க'ன்னு கேட்டுக்குவேன். அப்பவும் மூடமாட்டாங்க. கலெக்டரை மூடச் சொல்வேன். பெண்களை மூடச் சொல்வேன். "யாராவது மூடுங்களேன்'னு கத்துவேன். யாரும் மூடமாட்டாங்க. சரி, பத்து மணியிலேர்ந்து ஆறு மணி வரைக்கும் மட்டும் வியாபாரம் நடத்தித் தொலைங்க'ன்னு சொல்லிட்டு வேடிக்கை பார்ப்பேன். அந்தக் காட்சியை எத்தனை தடவை பார்த்தாலும் அலுப்புத் தட்டாது.

"மகனே உன் சமர்த்து'ன்னு ஒரு படம். ஹீரோ அன்புமணிக்கும் ஒரு பெரிய வில்லனுக்கும் சண்டை வருது. யாரும் அன்புமணிக்கு ஆதரவா வரமாட்டாங்க. எல்லார் கிட்டேயும் நான் தனி ஆளாவாதாடுவேன். ஆனா யாரும் பதில் சொல்லாம நக்கலா சிரிப்பாங்க. என் உருக்கமான நடிப்பைப் பார்த்து எனக்கே அழுகை வந்தது. அன்புமணிக்கு நிச்சயமா ஆஸ்கார் விருது கிடைக்கத்தான் போகுது. கிடைக்கலைன்னா விடமாட்டேன்.

இப்ப நான் ஒரு முடிவெடுத்துட்டேன். ஒப்பந்தப்படி கலைஞரோட படங்களிலே நடிச்சுக் கொடுத்த பிறகு, 2011லேர்ந்து நானே சொந்தமா படமெடுத்து ஹீரோவா நடிக்கப் போறேன். அப்புறம் பாருங்க என் நடிப்பை.

கழக ஸ்டார் கலைஞர் பதிலளிக்கிறார்

கேள்வி : கழக ஸ்டார் கலைஞர் அவர்களே! குடும்பப் படங்களிலே மட்டும் நீங்க அதிகமா சோபிக்கிறீங்களே. அது ஏன்?

கலைஞர் : விஷமத்தனமா கேக்கறீங்க! "சென்னை கார்ப்பரேஷன்' படத்திலே அமைதியான வில்லனா நான் எவ்வளவு அட்டகாசமா பண்ணியிருந்தேன்னு ராமதாஸ், வரதராஜன், தா.பாண்டியனைக் கேட்டுப் பாருங்க. நினைச்சா அதிருதுல்ல? அவ்வளவு ஏன்? "பந்த் அல்ல உண்ணாவிரதம்' முழு நீள காமெடி படத்திலே, என் நடிப்பைப் பார்த்து நாடே சிரித்து மகிழ்ந்ததே. அதையெல்லாம் மறந்துட்டு குடும்பப் படத்துக்குத்தான் நான் லாயக்குன்னு முத்திரை குத்தறது என்ன நியாயம்?

கேள்வி : என் மனம் கவர்ந்த டாப் ஸ்டார் அவர்களே! நீங்கள் நடித்த படங்களில் உங்களுக்குப் பிடித்தது எது?

கலைஞர் : நான் குழந்தை நட்சத்திரமா சற்றொப்ப 14 வயதிலிருந்தே நடித்து வருகிறேன். இருந்தாலும், இலங்கைப் பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட "தமிழனாகிய நான்' படத்தில் தமிழ் வீரனாகவும், அமைதியே வடிவான அப்பாவியாகவும் இரட்டை வேடத்தில் தோன்றி, என்னுடைய முத்திரையைப் பதித்திருப்பேன். லட்சக்கணக்கான ரசிகர்களை எனக்கு உருவாக்கித் தந்த படம் அது.

கேள்வி : புகழின் உச்சியில் இருக்கும் கழக ஸ்டாரே! உங்களுக்கு புகழ் தந்த படம் எது?

கலைஞர் : நானே திரைக்கதை எழுதி இயக்கித் தயாரித்த "சட்டமன்றப் பொன்விழா' படம்தான். ஒரு பெரும் தலைவரை நாடு எப்படியெல்லாம் பாராட்டுகிறது என்பதுதான் கதை. அப்படம் வெளிவர விடாமல் செய்யப்பட்ட சதிகளை முறியடித்து ரிலீஸ் ஆனபோது பலர் வயிறு எரிந்தார்கள். அதுதான் அப்படத்தின் வெற்றி.

கேள்வி : கழக ஸ்டார் அவர்களே! கதாசிரியர் என்ற முறையில் நீங்கள் மிகவும் ரசித்து எழுதிய வசனம் எது?

கலைஞர் : "சத்தம் போடாதே' படத்திலே கௌரவ நடிகர் வெற்றிகொண்டான் ஒரு காட்சியில் ராமதாஸைத் தாக்கி, நாக்கைப் பிடுங்கிக்கொள்கிற மாதிரி, வசனம் எழுதியிருந்தேன். ரசிகர்களுக்குத் தெரியாமல் மாறுவேடத்தில் தியேட்டருக்குப் போய், அந்தக் காட்சியில் மக்கள் எப்படி கை தட்டுகிறார்கள் என்று பார்த்து ரசித்தேன். மறுபடியும் அப்படி வசனம் எழுதுகிற வாய்ப்பு கிட்டாமலா போய்விடும்?

"என்னை உருவாக்கிய டைரக்டர்' – குணச்சித்திர நடிகர் மன்மோகன் சிங்

ஆரம்ப காலத்திலே எனக்கு நடிப்பெல்லாம் அவ்வளவா வராது. இருந்தாலும் டைரக்டர் சோனியாதான், "உங்க மேலே எனக்கு நம்பிக்கை இருக்குது. நான் சொல்றபடி செய்யுங்க. அது போதும்'னு ஊக்கம் கொடுத்து ஹீரோவா அறிமுகப்படுத்தினாங்க. ஆனா, சில சமயங்களிலே ஷூட்டிங் நடக்கிற இடத்துக்கு லாலு பிரசாத் யாதவ், பரதன், கராத், ராகுல் காந்தி, டி.ஆர். பாலுன்னு ஆள் ஆளுக்கு வந்து டைரக்ட் பண்ணும்போது, கொஞ்சம் வருத்தமா இருக்கும். ஆனா, வருத்தத்தைக் காட்டிக்க மாட்டேன். காட்டி என்ன பிரயோஜனம்? சொல்றதைச் செய்யறதுதானே நம்ம வேலை?

அன்னையின் ஆணை' படத்திலே, வில்லன் க்வாட்ரோச்சி என் எதிர்லேயே ஜெயில்லேர்ந்து தப்பி ஓடுவாரு. நான்தான் இன்ஸ்பெக்டர். "பார்த்து மெதுவா போங்க ஸார்'னு நான் அவருக்கு விஷ் பண்ணி அனுப்பணுமே தவிர, பிடிக்க முயற்சிக்கக் கூடாது. கதை அப்படித்தான் போகணும்னு டைரக்டர் சொல்லிட்ட பிறகு நான் என்ன பண்ண முடியும்? என் ஹீரோ இமேஜ் பாதிக்கப்பட்டாலும், படம் எதிர்பார்த்தபடி வந்ததேன்னு டைரக்டருக்கு திருப்தி. அவங்க திருப்திதானே என் திருப்தி!

"அணுவும் அமெரிக்காவும்'னு ஒரு படத்திலே எனக்கு மெயின் ரோல் கொடுத்திருக்காங்க. ரொம்ப வித்தியாசமான முறையிலே சில இடங்களிலே வீரமா வசனம் பேசியிருக்கேன். ஆனா ஃபைட்டிங் கிடையாது. வாய் வீரம் மட்டும்தான். படம் ரிலீஸாகும்போதுதான் என் சம்பந்தப்பட்ட ஸீன் எல்லாம் படத்திலே இருக்குமா, டைரக்டர் கட்பண்ணிட்டாரான்னு தெரியும். சோனியா எனக்கு தொடர்ந்து ஹீரோ சான்ஸ் கொடுப்பாங்கன்னு நம்பிக்கை இருக்குது. எங்க டைரக்டர் சோனியா இல்லைன்னா நான் இல்லை.

துக்ளக் - சத்யா

Wednesday 7 November 2007

Namitha , க்ளைமாக்ஸ் ஜுரம்!

'ரயில் நிலையத்தில் க்ளைமாக்ஸ் வைத்தால் அந்த படம் பெரிய வெற்றி பெரும்' இப்படி போகிற போக்கில் ஊதிவிட்டு போகிற சில புண்ணியவான்களின் கருணையால் ரயில்வே துறைக்கு அமோக விளைச்சல்!

பதினாறு வயதினிலே தொடங்கி, இதயம் உள்ளிட்ட பல்வேறு படங்களின் வெற்றியை இதற்கு உதாரணமாக காட்டியதால், ஹீரோவோ, ஹீரோயினோ வலுக்கட்டாயமாக ரயில்வே ஸ்டேஷனில் பிரிந்து, பின் அபாயசங்கலியின் உதவியுடன் ரயிலை நிறுத்தி, ஒன்று சேர்வார்கள்! ஊருக்கு போகிற ஹீரோயின் பஸ்சில் ஏறி போனால் என்ன என்று எந்த ரசிகனும் இயக்குனர்களை கேட்டதாக வரலாறே இல்லை. அதுமட்டுமல்ல... இந்த ரயில் போய்விட்டால் அவ்வளவுதான். வாழ்க்கையே போச்சு என்று தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு போகிற ஹீரோக்கள், அடுத்த ரயில் பிடித்து ஹீரோயின் வீட்டுக்கு போனால் என்ன என்றும் யோசித்தது இல்லை. போகட்டும் விடுங்கள்...

ரயில் சம்பந்தப்பட்ட படப்பிடிப்புகளில் எப்படிப்பட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. இனிமேல் ரயிலின் கூரை மேல் சண்டை போடுவது, படியில் அமர்ந்து கொண்டு பயணம் செய்வது போலவோ, படிகளில் தொங்கிக் கொண்டு செல்வது போலவோ காட்சிகள் எடுக்கக்கூடாது என்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. படப்பிடிப்புக்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும் போதே படத்தின் கதை சுருக்கத்தையும் காட்சி விளக்கத்தையும் கொடுக்க வேண்டுமாம். (கதை சுருக்கமா? அதை தயாரிப்பாளர்களுக்கே காட்டுவதில்லையே பல இயக்குனர்கள்?) இப்படி பல கெடுபிடிகளை விதித்திருக்கும் ரயில்வே துறை, சென்னை போன்ற பெரு நகர ரயில்வே நிலையங்களில் படப்பிடிப்பு நடத்த ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் நிர்ணயித்துள்ளது.

பெரிய தயாரிப்பாளர்கள் என்றால் ஓ.கே! சின்ன தயாரிப்பாளர்கள் இனிமேல் நல்ல பஸ் நிறுத்தமாக பார்த்து க்ளைமாக்சை வைத்துக் கொள்ள வேண்டியதுதான்!


ஆர்ஜுன், CaptainVijayakanth நடிகர்கள் பாடு திண்டாட்டம்தான்


நமிதா படம் எதுக்குனு கேட்கப்படாது, எல்லாம் ஒரு விளம்பரம் தான்.

தமிழ் சினிமா.com

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Sunday 4 November 2007

இந்திய திரையில் முதன் முறையாக Tomb Raider & Charlies Angel

தீபாவளி சிறப்பு








இது Lara Croft Tomb Raider பார்த்த பாதிப்பு














இது நேற்று Charlie's Angel பார்த்ததின் பாதிப்பு





















இன்னும் ஒரு கிளி (sorry angel) அட படத்துல அப்படித்தான் சொல்லுவாங்க,
யாருங்கறது உங்க Choice...முடிஞ்சா சொல்லுங்க