Monday 24 September 2007

இவர யாரும் காமடி கீமடி பண்ணலையே?






தடாலடி என்றால் டி.ஆர். சமீபத்திய அவரது பாய்ச்சல் விஜயகாந்த் மீது திரும்பியிருக்கிறது! அவரிடம் பேசினோம்.
தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சியினருமே உங்களை தங்கள் பிரசாரத்திற்கு கூட்டத்தைக் கூட்டும் ஒரு பேச்சாளராகத்தான் பார்க்கிறார்கள்.
ஒரு கட்சித் தலைவராக அங்கீகரிக்கவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?

‘‘இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்டக்கூடிய இவன், ஒரு கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராகப் பணியாற்றும் அளவிற்குத் திறமையானவன், சின்னத்திரையில் பேசினால் கூட பெரிய அளவிற்கு பெண்கள் கூட்டத்தைக் கவர்ந்து இழுக்கும் டி.ஆர்.பி. ரேட்டிங்கைத் தன் கையில் வைத்திருப்பவன் வளர்ந்தால், தங்களுக்கு ஆபத்து என்று இரண்டு கழகங்களும் நினைக்கின்றன. மற்றவர்கள் வளர்ந்தால் ஆபத்தில்லை என்று நினைக்கிறார்கள். நான் ஏ.வி.சி. கல்லூரியிலும், அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் படித்தபோது நான் ஒரு பெரிய இயக்குநராக வருவேன் என்று சொன்னபோது நீங்கள் எதிர்பார்த்தீர்களா? திரையுலகத்தினர்தான் ஒப்புக்கொண்டார்களா? மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் ஐயா!’’
இவ்வளவு தூரம் திறமைசாலியாக எண்ணும் நீங்கள், யாருடன் கூட்டணி வைப்பது என்று குழம்புகிறீர்களே?
‘‘யார் சொன்னது? தி.மு.க., அ.தி.மு.க.விடம் கூட்டு இல்லை என்று சொல்லிவிட்டு, பழனி நாடாளுமன்ற இடைத் தேர்தலில் நாற்பதாயிரம் ஓட்டுக்கள் வாங்கியபோது, அப்போது பா.ம.க.கூட வளரவில்லை. ம.தி.மு.க. தோன்றவே இல்லை. பர்கூரில் தனித்துப் போட்டியிட்டேன். ‘ஜெயலலிதாவுக்குக் கிலி’ என்று பத்திரிகைகள் கவர் ஸ்டோரி எழுதினார்கள். கடைசி நேரத்தில் தி.மு.க. வாபஸ் வாங்கியது யாருக்காக?’’
நீங்கள் மட்டும் ஓட்டு வாங்கி விட்டால் போதுமா? கட்சி வேட்பாளர்கள்?
‘‘விஜயகாந்த் 234 தொகுதிகளில் நூறு கோடி ரூபாய் வரை செலவு செய்து எத்தனை தொகுதிகளில் ஜெயித்தார். ஒன்றில்தானே! அவர்போல இவ்வளவு செலவு செய்தால் நான் ஆட்சியைப் பிடிப்பேன்.’’
சரி, லட்சிய தி.மு.க.வுக்கு எத்தனை சதவிகிதம் ஓட்டு இருக்கிறது?
‘‘பதினைந்திலிருந்து இருபது சதவிகிதம். நடுநிலையாளர்களைக் கவரும் சக்தி எனக்குள்ளது என்பதால்தான், என்னை அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் பிரசாரத்திற்கு அழைக் கின்றன.’’

இருபது சதவிகிதம் என்பதெல்லாம் உங்களுக்கே ஜாஸ்தியாகப் படவில்லையா?

‘‘அதைச் சொல்ல நீங்கள் யார்? (சீறுகிறார்) 2011_ல் முதல்வர் ஆவேன் என்று சரத்குமார் சொல்கிறார். விஜயகாந்த், சரத்குமார் போல் முதல்வர் என்ற அந்த மியூஸிக்கல் சேரைச் சுற்றி ஓடப்போவதில்லை. தமிழக மக்களுக்குக் குரல் கொடுப்பதில் மட்டும் முதல்வனாக இருப்பேன். எந்தப் பிரச்னை வந்தாலும் ஆளுங்கட்சிக்கு எதிராகக் குரல் கொடுப்பவன் என்று நிரூபித்தவன்.
தி.மு.க.வை விட்டு வைகோ பிரிந்தபோது, ‘டி.ஆரின் ஆதரவு வேண்டும்’ என்று கலைஞர் அறிக்கை விட்டாரா இல்லையா?’’

சரி, இப்போது முதல்வர் கலைஞரை எதற்கு சந்திக்கப்போகிறீர்கள்?
‘‘எங்களை தேர்தல் காலத்தில் மட்டும் பயன்படுத்துவது என்றில்லாமல் உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப் போகிறேன். அது இருந்தால்தான் அடுத்தவர்களுக்காக குரல் கொடுக்க முடியும்! அவர் முடிவைப் பொறுத்து எங்கள் முடிவு அமையும். அவருடைய வெற்றிக்காக பாடுபட்டவன்.’’

உங்களை அவர் கறிவேப்பிலை போல பயன்படுத்திக் கொள்ளும்போது, நீங்கள் ஏன் திரும்பத் திரும்ப அங்கே போக வேண்டும்?

‘‘காரணம், அவர் என்னுடைய அரசியல் ஆசான். அவர் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. தமிழினத்திற்காகக் குரல் கொடுப்பவர் அவர். எனக்கு அவர் மீது அபிமானம்.
அடுத்தது, தமிழ் நாட்டை ஐந்து முறை ஆண்ட கலைஞர், எங்கள் ஆதரவை வெளிப்படையாகக் கேட்கிறார். ஆனால், விஜயகாந்த் யாருமே எனக்குத் தேவையில்லை என்கிறார். ஒரு சமையல் செய்தால் கூட நான்கு பண்டங்கள் தேவைப்படுகிறது. இவர் தனியாகவே சாய்ச்சுடுவாராம்.

உங்களை உதாசீனப்படுத்திய கழகங்களை விட்டுவிட்டு தேவை யில்லாமல் விஜயகாந்தை ஏன் சீண்டுகிறீர்கள்?

‘‘ஏன் என்றால் அவர் பேச்சு! ஊழலை ஒழித்து விடுவாராம். அ.தி.மு.க.வில் இருந்த எத்தனை ஊழல் மந்திரிகள் உங்களோடு இருக்கிறார்கள்? எத்தனை பேருக்கு பணம் வாங்கிக் கொண்டு பதவி கொடுத்திருக்கிறார்? இவர் பிறந்த தினம் வறுமை ஒழிப்பு தினமாம்! ‘ஐயய்யோ! தமிழ் நாட்டில் வறுமை ஒழிந்து போச்சு சார்’ (சிரிக்கிறார்) இதைப் பார்த்து விட்டு நான் சும்மா இருக்க முடியுமா?

நான் எம்.ஏ. வரலாறு படித்தவன். விஜயகாந்தின் தகுதி என்ன? என்ன பேசறார்? எம்.ஜி.ஆரையே எதிர்த்துக் குரல் கொடுத்த எனக்கு இந்த விஜயகாந்த் யார்? நூறு கோடி ரூபாய் கட்சிக்கு செலவு செய்தாரே, எப்படி வந்தது? ஒரு தமிழன் என்ற முறையில் அவர் ஊழல் முகத் திரையைக் கிழிப்பேன்.’’
கலைஞர் டி.வி.யில் உங்களுக்கு அழைப்பு இல்லை என்று கோபமாமே?
‘‘கிடையவே கிடையாது? என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். திறந்திருக்கிறது’ என்றார்கள். அமிர்தம் மற்றும் ராமநாராயணன்கூட கேட் டார்கள். இவர்கள் செப்டம்பர் 15_ம் தேதி துவக்கம் என்றபோது, நான் வெளிநாட்டில் இருந்தேன். பிஸியாக இருந்ததால் முடியவில்லை.
அப்புறம், சன் டி.வி. அரட்டை அரங்கத்தில் எனக்குக் கிடைத்த அங்கீகாரம், நான் அடுத்த தேர்தலில் ஈடுபட்டால் எங்கள் கைக்கு வந்துவிடும் அதிகாரம்! பேச்சுத் திறமை இருக்கிறது. படிப்பு இருக்கிறது. துடிப்பு இருக்கிறது. உண்மை இருக்கிறது. உழைப்பு இருக்கிறது. தன்னம்பிக்கை இருக்கிறது.’’

உங்களது அதீத தன்னம்பிக்கைதான் உங்கள் பிரச்னையே என்றால் ஒப்புக் கொள்வீர்களா?

(எழுந்து கொள்கிறார்?) ‘‘மன்மோகன் சிங் பிரதமராவேன் என்று தனது 48_வது வயதில் சொல்லியிருந்தால் அவரை பைத்தியம் என்றிருப்பார்கள். எனக்கு என்ன வயசு ஆச்சு? இருபத்து மூன்று வயதில் சினிமாவைக் கலக்கியவன். ரஜினியைத் தாண்டி வசூல் சக்ரவர்த்தியாக இருந்தவன்! (சொடுக்குப் போடுகிறார்)
புதுக்கோட்டையில் விஜயகாந்த் மாநாடு நடத்தியபோது வந்தது, அந்த ஊர்க் கூட்டம் இல்லை. சுற்றியுள்ள மாவட்ட ஆட்களை லாரிகளில் கொண்டு வருகிறார். இது பண்ருட்டி ஐடியாவாக இருக்கும். எனக்கு அப்படிச் சேர்க்கத் தேவையில்லை. என் கட்சியில் தொண்டன் அவனே செலவு பண்ண வேண்டும். விஜயகாந்த் மாதிரி பணத்தைக் கொட்டி ஆட்களைச் சேர்க்க வேண்டியதில்லை.’’

லட்சிய தி.மு.க.வின் அடுத்த லட்சியம்?

‘‘தொடர்ந்து சுற்றுப் பயணம் செய்யப்போகிறேன். மாவட்டந்தோறும் 300 கொடிகள் வீதம் முப்பது மாவட் டங்களிலும் ஏற்றப் போகிறேன். இனி எந்தக் கட்சியையும் வளர்க்கப் போகப்போவதில்லை. கூட்டணி இல்லா விட்டாலும் தனித்து என்னால் நிற்க முடியும்! தமிழகம் முழுவதும் இந்தக் கொடியை (காட்டுகிறார்) ஏற்றிக் காட்டுவேன். லட்சிய தி.மு.க.வை ஆட்சியில் ஏற்றிக் காட்டுவேன்!.


தமிழகம் முழுவதும் இந்தக் கொடியை (காட்டுகிறார்) ஏற்றிக் காட்டுவேன்.
சுட்டது குமுதம்.com நன்றி

Sunday 23 September 2007

HR = HIGH RISK

After 2 years of selfless service, a man realized that he has not been promoted, no transfer, no salary increase no commendation and that the Company is not doing any thing about it. So he decided to walk up to His HR Manager one morning and after exchanging greetings, he told his HR Manager his observation.



The boss looked at him, laughed and asked him to sit down saying. My friend, you have not worked here for even one day.


The man was surprised to hear this, but the manager went on to explain.
Manager:- How many days are there in a year?
Man:- 365 days and some times 366
Manager:- how many hours make up a day?
Man:- 24 hours
Manager:- How long do you work in a day?
Man:- 8am to 4pm. i.e. 8 hours a day.
Manager:- So, what fraction of the day do you work in hours?
Man:- (He did some arithmetic and said 8/24 hours i.e. 1/3(one third)
Manager:- That is nice of you! What is one-third of 366 days?
Man:- 122 (1/3x366 = 122 in days)
Manager:- Do you come to work on weekends?
Man:- No sir
Manager:- How many days are there in a year that are weekends?
Man:- 52 Saturdays and 52 Sundays equals to 104 days
Manager:- Thanks for that. If you remove 104 days from 122 days, how many days do you now have?
Man:- 18 days.
Manager:- OK! I do give you 2 weeks sick leave every year. Now remove that14 days from the 18 days left. How many days do you have remaining?
Man:- 4 days
Manager:- Do you work on New Year day?
Man:- No sir!
Manager:- Do you come to work on workers day?
Man:- No sir!
Manager:- So how many days are left?
Man:- 2 days sir!
Manager:- Do you come to work on the (National holiday )?
Man:- No sir!
Manager:- So how many days are left?
Man:- 1 day sir!
Manager:- Do you work on Christmas day?
Man:- No sir!
Manager:- So how many days are left?
Man:- None sir!
Manager:- So, what are you claiming?
Man:- I have understood, Sir. I did not realise that I was stealing Company money all these days.
Moral - NEVER GO TO HR FOR HELP!!!

Have a Nice Day.
HR = HIGH RISK

Friday 21 September 2007

சுப்பிரமணியன் சுவாமி விட்ட ராம பாணம்...

ராமர் என்பது கற்பனைக் கதாபாத்திரம். ராமர் பாலம் என்று ஒன்று இல்லை’ என்பது தொல்லியல் துறையின் கருத்து என்று ராமர் பாலம் தொடர்பாக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடுத்த வழக்குக்கு பதில் மனு தாக்கல் செய்தது மத்திய அரசு. இதைக் கண்டித்து நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சியும் பிற இந்து அமைப்புகளும் இந்துக்களை மத்திய அரசு இழிவுபடுத்தி விட்டதாகப் போராட்டங்களை நடத்தியது. எதிர்ப்பின் வலுகண்டு மறுநாளே, மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்ட மத்திய அரசு, மாற்றுப்பாதையில் சேதுசமுத்திரத் திட்டத்தை செயல்படுத்துவதாகவும் சொல்லியிருக்கிறது.
இந்நிலையில் முதல்வர் கருணாநிதி, ஈரோடு முப்பெரும் விழாவில் பேசும்போது, ‘‘யார் ராமன்? அவன் எந்தப் பொறியியல் கல்லூரியிலே படித்து பொறியாளராக ஆனவன்? எப்போது அந்தப் பாலத்தைக் கட்டினான்? ஆதாரம் உண்டா?’’ என்றெல்லாம் கேள்விகள் எழுப்பியிருந்தார்.
முதல்வரின் இந்தப் பேச்சைக் கண்டித்து அவர் மீது வழக்கு தொடுக்கப் போவதாக அறிவித்-திருக்கும் சுப்பிரமணியன் சுவாமி, ‘ராவணன் பிராமணன், ராமன் சத்திரியன்’ என்று இன்னொரு திரியையும் பற்றவைத்திருக்கிறார்.
சுவாமியை சந்தித்தோம். ‘‘கருணாநிதி ஆவேசப்படவும், ஆத்திரப்படவும் காரணம் இருக்கிறது. மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சொன்ன பொய்யை மறுநாளே வாபஸ் பெற்றுவிட்டதால், அதிர்ச்சியடைந்திருக்கும் கருணாநிதிக்கு என்ன பேசுகிறோம் என்றே புரியவில்லை. இனிமேல் பகுத்தறிவுக் கதைகள் பேசி அரசியல் செய்ய முடியுமா? கவலை வந்துவிட்டது. ‘ராமர் எந்தக் கல்லூரியில் பொறியியல் படித்தார்?’ என்று கேட்கும் இவரால், ‘கன்னிமேரிக்கு கர்த்தர் எப்படிப் பிறந்தார்’ என்று கேட்க முடியுமா? கருணாநிதி, இந்துக்களை இழிவுபடுத்துவதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. அதனால், கவர்னரிடம் அனுமதி வாங்கி அவர்மேல் வழக்கு தொடரப் போகிறேன்’’ என்றவரிடம், ‘ராவணன் பிராமணன் என்று சொல்லியிருக்கிறீர்களே?’ என்றோம்.
‘‘ராமாயணத்திலேயே ராமன் சத்திரியன் என்பது தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. ராம சேது பாலத்தை அமைத்த ராமன் தன் குருவான வசிஷ்டரிடம், ‘யாரைக்கொண்டு ராம சேதுவைத் திறக்க யாகம் நடத்தலாம்?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு ‘அந்தப் பகுதியில் யாகம் செய்யத் தகுதியான பிராமணன், ராவணன் மட்டுமே. அவனை அழைத்து யாகம் நடத்துங்கள்’ என்று வசிஷ்டர் அறி-வுறுத்த, ராமனும் ராவணனை அழைத்திருக்கிறான். ராவணனும் யாக பூஜையில் கலந்துகொண்டான். அதனால் இனி, திராவிடக் கட்சிகள் சத்திரியனான ராமனுக்கு விழா எடுக்குமா?’’ என்றார்



அ.தி.மு.க. எம்.எல்.ஏ வான எஸ்.வி. சேகர் :



‘‘முதல்வர் கருணாநிதி சொல்வது போல ராமர் கற்பனைப் பாத்திரம் என்றால் முருகர், விநாயகர் எல்லாமே கற்பனைதானே. கடவுளே கற்பனை என்று சொல்லும்போது உண்டியல் காசு மட்டும் அரசுக்கு எதற்கு? அறநிலையத்துறை எதற்கு? கோயில்களை மத நம்பிக்கை உடையவர்கள் நடத்திக்கொள்ளட்டும். மூடநம்பிக்கை என்று கேலி பேசும் கருணாநிதி, அறநிலையத்துறை அலுவலகத்துக்குப் பூட்டுப் போடுவாரா?’’ என்கிறார் அ.தி.மு.க. எம்.எல்.ஏ&வான எஸ்.வி. சேகர் ஆவேசமாக.



சுட்டது from JuniorVikatan

Thursday 20 September 2007

முதல்வர் கருணாநிதி நாக்கில் Saturday


ஆணவமே, உன் பெயர்தான் கலைஞரோ !

தமிழக முதல்வர், ஹிந்துமத நம்பிக்கை கொண்டவர்கள் மனம் புண்படும்படி பேசுவது புதிய விஷயமல்ல. ஆனால், ஈரோட்டில் நடந்த தி.மு.க.வின் முப்பெரும் விழாவில் அவர் பேசியுள்ளது, அவர் காட்டி வருகிற ஹிந்துமத துவேஷத்தில், ஒரு புதிய அத்தியாயம்.
ராமர் பாலத்தை இடிக்காமல், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற மாற்று வழிகளை ஆராய்கிறோம் – என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கூறியிருப்பது, தமிழக முதல்வருக்கு பெரும் எரிச்சலை உண்டாக்கியிருக்கிறது. சேது சமுத்திரத் திட்டம் வருவதை விட, ராமர் பாலம் இடிக்கப்படுவதைத்தான் அவர் பெரிதும் விரும்புகிறார்; அதனால்தான் மாற்று வழியை ஆராய்வதில் அவருக்கு இவ்வளவு கோபம் வருகிறது. ஆனால் கோபம் வந்து என்ன பயன்?

மத்தியில், காங்கிரஸிற்கு ஓட்டு பயம் வந்து விட்டதால், அதற்கு முன் தி.மு.க. காட்டக்கூடிய "ஆதரவு வாபஸ்' பூச்சாண்டி பயம் எடுபடாது என்கிற நிலை; அதனால் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில், ராமர் மீது இருக்கிற மரியாதையை பிரகடனம் செய்ததோடு மட்டுமல்லாமல், புதிய வழியை ஆராய மூன்று மாத தவணை வாங்கியிருக்கிறது. முதல்வர் முப்பெரும் விழாவில், "...மூட, மௌடீக, மடத்தனமான மதவாதங்களை இன்றைக்கும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையின் காரணமாக, ராமன் பெயரை இழுத்து அவர்கள் இன்றைக்கு நம்மோடு விளையாடுகிறார்கள்... இன்றைக்கு நமக்கு ஏற்பட்டிருக்கிற, எதிர்காலத்தில் இருள் மயமாக ஆக்குகிற ஒரு பயங்கரமான சதித் திட்டத்தை முறியடிப்பதற்கு, ஒரு தீர்மானத்தை உங்கள் முன் வைக்கிறேன்' என்று கூறிவிட்டு – அந்த தீர்மானத்தில் "மதவாத அமைப்புகளுக்கு மத்திய அரசு அஞ்சி... சேது சமுத்திரத் திட்டத்தை தடுக்கிற முயற்சிக்கு இடம்கொடுத்து விடக்கூடாது என்று குரல் கொடுக்கிறோம்' – என்று கூறியிருக்கிறார்.

இப்படி குரல் கொடுத்தால் போதுமா? "மூட, மௌடீக, மடத்தனமான' மதவாதத்தை காங்கிரஸும், மத்திய அரசும் பேசத் தொடங்கி விட்டனவே? மத்திய சட்ட அமைச்சர், "இந்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக ராமர் விளங்குகிறார். விவாதத்திற்கு இடமளிக்கிற விஷயமல்ல இது. ராமர் இருந்தார் என்பதை சந்தேகிக்கவே முடியாது. இமயமலை, இமயமலையே; கங்கை, கங்கையே. அதுபோல ராமர், ராமரே! இதை நிரூபிக்கத் தேவையே இல்லை' என்று கூறிவிட்டார்.

மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து "ராமாயணம் புனிதமானது; மத்திய அரசு மதங்களை – அதுவும் இந்த வழக்கு தொடர்பாக குறிப்பாக ஹிந்து மதத்தை – முழுமையாக மதிக்கிறது' என்று கூறிவிட்டது.

அதாவது, முதல்வர் கூறுகிற "சதித் திட்டம்' மத்திய அரசின் ஒத்துழைப்பைப் பெற்றுவிட்டது. "எதிர்காலத்தை இருள் மயமாக்க' மத்திய அரசு முன்வந்து விட்டது. அப்படியிருந்தும் முதல்வர் மத்திய அரசுக்கு எப்படி ஆதரவு தரலாம்? எதிர்காலத்தை இருள் மயமாக்குகிற சதித் திட்டத்தை ஏற்கிற அரசில் தி.மு.க. எப்படி பதவிகள் வகிக்கலாம்? சதிகாரர்களுக்கு உடந்தையான கட்சியாகிவிட்ட காங்கிரஸின் ஆதரவைப் பெற்று, தமிழகத்தில் எப்படி அரசு நடத்தலாம்? இதெல்லாம் பெரியாருக்கு தி.மு.க. இழைக்கிற துரோகமல்லவா?
மத்திய அரசிலிருந்து விலகி, மத்திய அரசுக்குத் தருகிற ஆதரவை வாபஸ் பெற்று, தமிழக அரசுக்கு காங்கிரஸ் தருகிற ஆதரவையும் வேண்டாம் என்று உதறிச் செயல்பட்டால்தானே, சதித் திட்டத்தை முறியடிக்க முடியும்? அதற்கு முதல்வர் துணியாதது ஏன்? பதவி ஆசையைத் தவிர இதற்கு வேறு என்ன காரணம்?

"குடிலர்கள், குள்ள நரிகள்' என்று முதல்வர் வர்ணித்துள்ளவர்களின் பட்டியலில் இடம்பெற முன்வந்து விட்ட மத்திய அரசினரை எதிர்க்காத முதல்வர், குடிலர் ஆதரவாளரா? குள்ளநரி போஷகரா? தன்னுடைய பதவி, தன் குடும்பத்தினரின் பதவிகள் என்றால், பெரியார் கொள்கைகளை பலி கொடுக்கத் தயங்காதவர், வெறும் சவடால் பேச்சினால், வீரத்தைக் காட்டுகிறார்! வாய்ச்சொல் வீரம் என்பது இதுதான்.
இப்படி மத்திய அரசைக் கோபிக்க முடியாமல், அவரும் அவர் குடும்பத்தினரும் வகிக்கிற பதவிகள், முதல்வரைத் தடுக்கின்றன.
சரி; முதல்வர் தன்னுடைய கோபத்தை யார் மீது காட்டுவது? இருக்கவே இருக்கிறது ஹிந்து மத நம்பிக்கைகள்.

கோபத்தில், துவேஷத்தைக் கொட்டி முதல்வர் இப்படிப் பேசியிருக்கிறார்: "யார் ராமன்? எந்தப் பொறியியல் கல்லூரியிலே படித்து பொறியாளராக ஆனவன்? எப்போது அந்தப் பாலத்தைக் கட்டினான்? ஆதாரம் உண்டா?' என்றெல்லாம் கேட்டிருக்கிறார் முதல்வர்.
துவேஷம் தலைக்கேறியதால், ரொம்ப புத்திசாலித்தனமாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு, அவர் பிதற்றியிருக்கிறார்.

பாலத்தைக் கட்டியது ராமர் என்றால், அவரேதான் கற்களை எடுத்து அடுக்கி, அவற்றை ஒன்றிணைத்து, பாலத்தை தன் கையாலேயே கட்டினார் என்று அர்த்தமல்ல. ஒரு மன்னன் கோவில் கட்டினான்; சிற்பங்கள் வைத்தான் – என்றால் அவை, அவனே உளியைக் கையில் எடுத்து, செதுக்கியவை அல்ல. அவன் ஆணையின் மீது, அவன் விருப்பத்திற்கிணங்க, சிற்பக் கலை வல்லுனர்கள் செய்துள்ள பணிகள் அவை. ஆனால் அவை அந்த சிற்பிகளின் பெயரில் வழங்கப்படுவதில்லை; சம்பந்தப்பட்ட மன்னன் வைத்த சிற்பங்களாகவே அவை புகழ் பெறுகின்றன.

அதே போலத்தான் ராமர் கட்டிய பாலமும். முதல்வருக்கு ராமாயணத்தைப் பற்றி இழிவாகப் பேசத்தான் தெரியுமே தவிர, அதிலிருந்து மேற்கோள் காட்டுகிற போதெல்லாம் எதையாவது தப்பும் தவறுமாகப் பேச அவர் தவறுவதில்லை. (இதற்கு முன்பும் நாம் இதைச் சுட்டிக்காட்டியிருக்கிறோம்.)
அந்த பாலம் கட்ட, ராமருக்கு சமுத்திரராஜன் வழி கூறினான். அவனே, அதற்கு நளன் என்ற நிபுணனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் யோசனை கூறினான்.

"....நளன், தேவதச்சனாகிய விச்வகர்மாவின் மகன்; தந்தையிடமிருந்து வரமும் பெற்று, தொழிலும் கற்றவன்; நிபுணன். அவன் பாலத்தைக் கட்ட முன்வந்து, சுக்ரீவனைப் பார்த்து, "வானரர்களில் சிறந்தவரே! பாலம் கட்டுவதற்கான எல்லாப் பொருட்களும் உடனே சேகரிக்கப்பட வேண்டும்' என்று கேட்டுக்கொண்டான்.

நளன் கேட்ட பொருட்களை சேகரிக்க வானரர்கள் புறப்பட்டனர். (வானரர்கள் என்றால் ஆங்கிலத்தில் சொல்கிற "மங்கி' அல்ல; அவர்கள் குரங்குகள் அல்ல; பெரும் வீரர்கள்; கற்றவர்கள்; நகரத்தில் அரண்மனைகளைக் கட்டிக்கொண்டு வாழ்ந்தவர்கள்.... என்கிற விவரங்கள் வால்மீகி ராமாயணத்தில் இருக்கின்றன).
"வானரர்களின் உதவியுடன், பாறைகள் தகர்க்கப்பட்டன; மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டு, கொண்டுவரப்பட்டன. இம்மாதிரி பாறைகளும், மரங்களும், மற்ற பொருட்களும் கடற்கரையில் கொண்டு வந்து சேர்ப்பிக்கப்பட்டன. பாலம் கட்டப்படுகையில், பாறைகளை நேர்க்கோட்டில் நிறுத்தி வைக்க, பலமான கயிறுகள் பயன்படுத்தப்பட்டன. நளன் உத்திரவிட்டவாறு, பாறைகளை சமுத்திரத்தில் தள்ளிக் கொண்டும், மரங்களை பாறைகள் மீது நிறுத்தியும், பல வேலைகளைச் செய்தும், வானரர்கள் சுறுசுறுப்பாக இயங்கினர். கட்டி முடிக்கப்பட்ட பாலம், வான வீதியில் தெரிகிற நக்ஷத்திர மண்டலம் போல காட்சி அளித்தது. மேல் வானத்திலிருந்து பார்ப்பதற்கு, ஒரு பெண்ணின் கூந்தலை, இருபுறம் விலக்கி எடுக்கப்பட்ட வகிடு போல தோற்றமளித்த அந்த பாலத்தின் மீதேறி, வானரர்களும், மற்றவர்களும் கடலைக் கடந்து சென்றனர்...'

இவையெல்லாம் வால்மீகி ராமாயணத்தில், கூறப்பட்டுள்ள விவரங்கள். ஆகையால் புத்திசாலித்தனமாக கேட்பதாக நினைத்துக்கொண்டு, பிதற்றியுள்ள முதல்வர், "நளன் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தார்?' என்றாவது கேட்டிருக்கலாம். அப்படிக் கேட்டிருந்தால், அதற்கு நம்முடைய பதில் : நளன் தனது தந்தையிடம் தொழில் கற்றவன். நிபுணன் என்று பெயர் பெற்றவன்.
அது இருக்கட்டும். "ராமன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்து பாலம் கட்டினா(ன்)ர்?' என்று கேட்கிற முதல்வர், இதேபோல வேறு சில விஷயங்களைப் பற்றியும் கேள்வி கேட்பாரா?

"கண்ணகி தன்னுடைய மார்பகத்தைக் கிள்ளி எறிந்து, மதுரையை எரித்ததாகச் சொல்கிறார்களே – அந்த டெக்னிக்கை, அவள் எந்தக் கல்லூரியில் படித்தாள்? அது என்ன பயாலஜியா? அல்லது வெடிகுண்டு தயாரிக்கிற கலையா?' என்று முதல்வர் கேட்பாரா? நாம் கேட்க மாட்டோம்; ஏனெனில் கண்ணகி காட்டியது, கற்பின் சக்தி என்பதை ஏற்பவர்கள் நாம்.
தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய முதல்வர், "தொல்காப்பியர் எந்தக் கல்லூரியில் இலக்கணம் படித்தார்? தமிழ் இலக்கணத்தையே வகுத்ததாகச் சொல்லப்படுபவருக்கு இலக்கணம் கற்பித்தது யார்?' என்று கேட்பாரா? நாம் கேட்க மாட்டோம்; ஏனெனில், நமது சிற்றறிவுக்கு எட்டாத, பெரும் புலமையும், வல்லமையும் படைத்தவர்கள் முன் காலத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டவர்கள் நாம்.

"திருவள்ளுவர், திருக்குறள் எழுதியதாகச் சொல்கிறார்களே – அவர் எங்கு செய்யுள் இலக்கணம் படித்தார்? எங்கு தமிழ் கற்றார்? எங்கு ஃபிலாஸபி என்கிற தத்துவ விசாரணையை கற்றார்?' என்றெல்லாம் கேட்பாரா முதல்வர்? நாம் கேட்க மாட்டோம்; ஏனென்றால், திருவள்ளுவர் இறையருள் பெற்ற மகான் என்பதை உணர்ந்தவர்கள் நாம்.

சரி, இதெல்லாம் போகட்டும். ராமர் இருந்தாரா என்று கேட்கிற முதல்வர், இதுவரை தப்பித் தவறியாவது மற்ற மத நம்பிக்கைகள் பற்றி ஒரு சிறு விமர்சனமாவது செய்தது உண்டா? காஷ்மீரில் உள்ள ஹஸ்ரத்பால் மசூதியில் (புனித ஸ்தலத்தில்) நபிகள் நாயகத்தின் தலை முடி ஒன்று இருப்பதாகக் கூறப்பட்டு, அது பெரிதும் மரியாதைக்குரியதாகக் கருதப்படுகிறதே – அது பற்றி முதல்வர் பேசியதுண்டா?
"அந்த முடி, நபிகள் முடிதான் என்று எப்படித் தெரியும்? என்ன ஆதாரம்?' என்று அவர் கேட்பாரா? நாம் கேட்க மாட்டோம்; ஏனென்றால் மற்ற மத நம்பிக்கைகளை மதிக்கக் கற்றவர்கள் நாம்; மற்ற மதத்தவர்கள் போற்றி வணங்குகிற மகான்கள் பற்றி அவமரியாதையாகப் பேசுவது, அற்பத்தனம் என்று நம்புகிறவர்கள் நாம்.

"ஏசு கிறிஸ்து சிலுவையில் மாண்டு, பின்னர் உயிர்ப்பித்து வந்ததாகச் சொல்கிறார்களே? அவர் அந்தக் கலையை எந்த ஆராய்ச்சிக் கூடத்தில் பயின்றார்? அல்லது அவரை உயிர்ப்பித்தவர் எந்த விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலம் இந்த சிகிச்சையைக் கற்றார்? ஆதாரம் உண்டா?' என்று முதல்வர் கேட்பாரா? நாம் கேட்க மாட்டோம். மற்ற மத நம்பிக்கையையும், மற்ற மதத்தவர்கள் போற்றுகிற இறைத் தூதர்களையும் மட்டமாகப் பேசுவது, காட்டுமிராண்டித்தனமான செயல் என்பதை உணர்ந்தவர்கள் நாம்.
இவ்வளவு போவானேன்? "புத்தர் அணிந்த ஆடை – மஞ்சள் நிறமுடையது என்பதால், நானும் மஞ்சள் துண்டு போடுகிறேன்' என்பது முதல்வர், தன்னுடைய மஞ்சள் மகிமை பற்றி அருளிய பற்பல காரணங்களில் ஒன்று. "புத்தர் மஞ்சள் ஆடை அணிந்தார் என்பதற்கு என்ன ஆதாரம்? அவர் எங்கே அந்த ஆடைக்கு சாயம் ஏற்றினார்?' என்று முதல்வர் கேட்பாரா? நாம் கேட்க மாட்டோம். ஏனென்றால், அவதார புருஷர்கள் போல தோன்றிய பெரியவர்கள் பற்றி, மடத்தனமான விமர்சனங்கள் செய்வது, சுத்த முட்டாள்தனம் என்பதை உணர்ந்தவர்கள் நாம்.

இராமாயணம் வெறும் கதை என்று நேரு கூறியிருக்கிறார் – என்பது முதல்வர் காட்டுகிற பெரிய ஆதாரம்! நேரு உட்பட – எந்த நாஸ்திகரும், ராமாயணம் பற்றியோ, ஹிந்துக்கள் நம்பிக்கைகள் பற்றியோ, கூறுகிற கருத்துக்கள், அவை பற்றிய தீர்ப்பாகிவிடாது.
சரி, நேரு சொன்னதை இப்படி வேத வாக்காக – மன்னிக்கவும், பெரியார் வாக்காக – எடுத்துக்கொள்கிற முதல்வர், நேரு சொன்ன மற்றொரு கருத்து பற்றி என்ன சொல்லப்போகிறார்? "நான்சென்ஸ்' என்று தி.மு.க.வினரை நேரு வர்ணித்ததற்காக, இவர்கள் ஏன் போராட்டம் நடத்தினார்கள்? நேருவே சொல்லிவிட்டாரே? அப்புறம் ஏது அப்பீல்? "நான்சென்ஸ்' என்று ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே!

முதல்வர் வாய்க்கு வந்தபடி பேசியிருக்கிறார் – அதுவும் ஹிந்து மத நம்பிக்கைகளை பற்றி மட்டும்தான். ஏனென்றால் ஹிந்துக்கள் இளிச்சவாயர்கள் என்பது அவருடைய தீர்மானமான அபிப்ராயம். இல்லாவிட்டால், கோடானுகோடி மக்கள் வணங்குகிற புருஷோத்தமனை, இப்படி தாறுமாறாகப் பேசுவாரா அவர்?

பணம் தருகிற கர்வம், பதவி தருகிற பித்து, அரசியல் புகழ் தருகிற ஆணவம் போன்றவை ஒன்று கூடி ஒருவரிடம் இருக்கும்போது, அவர் வாய் இப்படித்தான் பேசும். ராமரின் பொறியியல் தகுதி பற்றி பேசுகிறவர், எந்தத் தகுதி கொண்டு முதல்வர் பதவி வகிக்கிறார்? மக்கள் தருகிற ஓட்டு; அதே மக்களில் முக்காலே மூணு வீசம் பேர் ராமரை தெய்வமாக வணங்குகிறவர்கள்.

"அந்த ஓட்டு வேண்டாம்; ராமனை தெய்வமாக நினைக்கிற மூடர்களின் ஓட்டு வேண்டவே வேண்டாம்!' என்று சொல்வாரா முதல்வர்? அவர் சொல்லாவிட்டால் என்ன? நாம் சொல்வோம். ராமரையும், மற்ற தெய்வங்களையும் வணங்குகிற ஹிந்துக்கள், இந்த முதல்வருக்கும், அவர் சார்ந்துள்ள கட்சிக்கும், இனியும் வாக்களிப்பது, வெட்கக்கேடான செயலாகத்தான் இருக்கும்.

சுட்டது from துக்ளக் (திரு.சோ)

Monday 17 September 2007

பட்சதும் கீசினதும்

செம்மொழித் தமிழின் பெருமையை மேலும் பன்மடங்கு உயர்த்த பெரும் போட்டியே நடந்து கொண்டிருக்கிறது கோடம்பாக்கத்தில்.
தங்களது படத்தின் தலைப்பை “தூய தமிழில்”
“பொறுக்கி” என்று வைப்பதா?
“பொல்லாதவன்” என்று வைப்பதா?
“கெட்டவன்” என்று வைப்பதா? என பட்டிமன்றமே நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு வார்த்தைக்கும் இவர்கள் கொடுக்கும் நெத்தியடி விளக்கங்களைக் கேட்டால், ஆனானப்பட்ட தமிழ்ப் பேராசிரியர்களே மயக்கம் போட்டு விழுந்து விடுவார்கள்.
“பொறுக்கி” என்றால் சமூகத்தில் நடைபெறும் குற்றங்களையும், அநீதிகளையும் பொறுக்கி எடுப்பவன் என்கிறார், பல்வேறு “கலைப் படைப்புகளை” தமிழுக்கு அளித்த ஷக்தி சிதம்பரம். இருந்தாலும் தயாரிப்பாளர் சங்கத்தின் வேண்டுகோளுக்காக வேறு பெயரையும் யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.
“ “கெட்டவன்” என்றால், ஒரு பெண்ணால் கெட்டவன் என்று அர்த்தம். யாரையும் திட்டுவதாக அர்த்தம் வராது. பெயரை மாற்றப் போவதில்லை நான்” என்கிறார் சிலம்புக்கு அரசன்.
“ “பொல்லாதவன்” என்கிற வார்த்தை யாரையும் திட்டுகிற அர்த்தத்தில் இல்லை. அதைவிட எனது மாமனாரே இந்தப் பெயரில் நடித்திருக்கும் போது...அங்கிள் மெச்சிய மருமகனாய் அதே பெயரில் நடிப்பதில் என்ன தவறு?” என்கிறார் தனுஷ்.
அதானே! இவர்கள் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?
ரொம்ப ரொம்பச் சரி...
நாளை “எச்சக்கலை” என்று தலைப்பு வைத்தால் கூட “நாங்கள் கலைகளின் எச்சத்தைப் பற்றிப் படம் எடுக்கிறோம்” என்று போட்டுத் தாக்கக் கூடவா நமக்குத் தெரியாது?.
அதனால் அப்படியே வேலையோடு வேலையாக.....
பேமானி
சோமாறி
கசுமாலம்
கம்மனாட்டி
முடிச்சவிக்கி
மொள்ளமாறி
விருந்தாளிக்குப் பொறந்தவன்
போன்ற “அரிய” டைட்டில்களையும் உடனே பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே....
ஏமாந்து விட்டா வேற எவனாவது லவட்டீட்டுப் போயிருவான்.


-------------------------------------------------------------------------------------


மிகச் சரியாய்
இசைக்கும்
இசைக் கருவிக்கு
இங்கெவனோ
பெயர் வைத்தான்
‘தப்’பென்று. [‘பாரதி ஜிப்ரான்']


எல்லாரும்
காதலிக்கிறார்கள்
பின்னொரு நாளில்
வருத்தப்படுகிறார்கள்.
சிலர் சேர்ந்ததற்காக
சிலர் பிரிந்ததற்காக.... [‘பாரதி ஜிப்ரான்']


சுட்டது from குமுதம்

Thursday 13 September 2007

Believe it or not






This page is been visited by nearly 14 crore people every day






சுட்டது Tamilcinema.com



ஐந்து மணிக்கு இன்டர்வியூவுக்கு போக வேண்டிய ஆள், பத்து மணிக்கு படுக்கையைவிட்டு எழுந்து குய்யோ முறையோ என்று குமுறிய மாதிரி குமுறிக் கொண்டிருக்கிறார் டி.ராஜேந்தர். எந்த கட்சியோடு கூட்டணி சேர்ந்தாலும் அந்த கட்சியை அங்கிருந்து கொண்டே ஏகடியம் பேசுவதும், கேட்டால் நான் யாருக்கும் பயந்தவன் அல்ல என்று குரல் உயர்த்துவதும் ராஜேந்தரின் வாடிக்கை.
இதை வேடிக்கையாக எடுத்துக் கொண்டு அவரை கண்டு கொள்ளாமல் இருந்தால், அந்த கூட்டணியை விட்டு வெளியேறி வேறொரு கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளவும் தயங்க மாட்டார் இந்த தன்மான சிங்கம். இப்படி கடந்த பலமுறை அ.தி.மு.க-தி.மு.க என்று மாறி மாறி வாழ்க்கை நடத்தியவர், திடீரென்று யாருக்கும் ஆதரவில்லை என்று குரல் கொடுத்திருக்கிறார். (அவருடைய கோடிக்கணக்கான(?) தொண்டர்கள் பலம் இல்லாமல் எப்படிதான் தங்கள் கட்சியை நடத்த போகிறார்களோ இவருடைய முன்னாள் தோழமை கட்சிக்காரர்கள்?!)
ராஜேந்தரின் இந்த புலம்பலுக்கு என்ன காரணம்? தனக்கு பின்னால் கட்சி ஆரம்பித்துவிட்ட விஜயகாந்த், சரத்குமார் போன்றவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் வளர ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களை மக்கள் ஏற்றுக் கொண்டதற்கு ஒரே காரணம், அவர்கள் யாருடனும் கூட்டணி வைத்துக் கொள்ளாததுதான். நாமும் அதுபோல் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டேன் என்று அறிக்கை விட்டால் மக்கள் தன்னை ஆதரிக்க மாட்டார்களா? ராஜேந்தரின், Ôகூட்டணி இல்லை' கோஷத்திற்கு அர்த்தம் புரிகிறதா?
மன்சூரலிகானும் இயக்குனர்தான். மணிரத்னமும் இயக்குனர்தான். இந்த உண்மை ராஜேந்தருக்கு புரிகிறதோ, இல்லையோ... மக்களுக்கு நன்றாகவே புரியும்!
Mikka nandri Tamilcinema.com

Ellarum oru O podunga, TR ippo kootanilerndhu vilagirukaar, innum koncha naala Arasiyala vitu vilagiruvaar. Vaarungal varaverpoam

Tuesday 4 September 2007

IS it True

Salary & Govt. Concessions for a Member of Parliament (MP)

Monthly Salary : 12,000

Expense for Constitution per month : 10,000

Office expenditure per month : 14,000

Traveling concession (Rs. 8 per km) : 48,000 ( eg.For a visit from kerala to Delhi & return: 6000 km)

Daily DA TA during parliament meets : 500/day

Charge for 1 class (A/C) in train: Free (For any number of times) (All over India )

Charge for Business Class in flights : Free for 40 trips / year (With wife or P.A.)

Rent for MP hostel at Delhi : Free

Electricity costs at home : Free up to 50,000 units

Local phone call charge : Free up to 1 ,70,000 calls.

TOTAL expense for a MP [having no qualification] per year : 32,00,000 [i.e . 2.66 lakh/month]

TOTAL expense for 5 years : 1,60,00,000

For 534 MPs, the expense for 5 years : 8,54,40,00,000 (nearly 855 crores)

AND THE PRIME MINISTER IS ASKING THE HIGHLY QUALIFIED, OUT PERFORMING
CEOs TO CUT DOWN THEIR SALARIES…..

Ennatha solla

Proud to be Indian