Thursday 13 September 2007

சுட்டது Tamilcinema.com



ஐந்து மணிக்கு இன்டர்வியூவுக்கு போக வேண்டிய ஆள், பத்து மணிக்கு படுக்கையைவிட்டு எழுந்து குய்யோ முறையோ என்று குமுறிய மாதிரி குமுறிக் கொண்டிருக்கிறார் டி.ராஜேந்தர். எந்த கட்சியோடு கூட்டணி சேர்ந்தாலும் அந்த கட்சியை அங்கிருந்து கொண்டே ஏகடியம் பேசுவதும், கேட்டால் நான் யாருக்கும் பயந்தவன் அல்ல என்று குரல் உயர்த்துவதும் ராஜேந்தரின் வாடிக்கை.
இதை வேடிக்கையாக எடுத்துக் கொண்டு அவரை கண்டு கொள்ளாமல் இருந்தால், அந்த கூட்டணியை விட்டு வெளியேறி வேறொரு கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளவும் தயங்க மாட்டார் இந்த தன்மான சிங்கம். இப்படி கடந்த பலமுறை அ.தி.மு.க-தி.மு.க என்று மாறி மாறி வாழ்க்கை நடத்தியவர், திடீரென்று யாருக்கும் ஆதரவில்லை என்று குரல் கொடுத்திருக்கிறார். (அவருடைய கோடிக்கணக்கான(?) தொண்டர்கள் பலம் இல்லாமல் எப்படிதான் தங்கள் கட்சியை நடத்த போகிறார்களோ இவருடைய முன்னாள் தோழமை கட்சிக்காரர்கள்?!)
ராஜேந்தரின் இந்த புலம்பலுக்கு என்ன காரணம்? தனக்கு பின்னால் கட்சி ஆரம்பித்துவிட்ட விஜயகாந்த், சரத்குமார் போன்றவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் வளர ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களை மக்கள் ஏற்றுக் கொண்டதற்கு ஒரே காரணம், அவர்கள் யாருடனும் கூட்டணி வைத்துக் கொள்ளாததுதான். நாமும் அதுபோல் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டேன் என்று அறிக்கை விட்டால் மக்கள் தன்னை ஆதரிக்க மாட்டார்களா? ராஜேந்தரின், Ôகூட்டணி இல்லை' கோஷத்திற்கு அர்த்தம் புரிகிறதா?
மன்சூரலிகானும் இயக்குனர்தான். மணிரத்னமும் இயக்குனர்தான். இந்த உண்மை ராஜேந்தருக்கு புரிகிறதோ, இல்லையோ... மக்களுக்கு நன்றாகவே புரியும்!
Mikka nandri Tamilcinema.com

Ellarum oru O podunga, TR ippo kootanilerndhu vilagirukaar, innum koncha naala Arasiyala vitu vilagiruvaar. Vaarungal varaverpoam

5 comments:

Geetha Sambasivam said...

OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO

Aani Pidunganum said...

Aaha,

Enna ivlo periya "O" potinga, India varaikum ketkum pola :)

மங்களூர் சிவா said...

ஒண்ணும் புரியலை இருந்தாலும் ஒரு 'ஓ' போட்டாச்சு

மங்களூர் சிவா

Aani Pidunganum said...

Ennanga siva,
ippadi sollitinga,
TR yaaru!
Avar evlo periya aal!
Avarku Thondar padai evlo iruku!
Avar katchila ethanai peru irukaanga teriyumah! (Avarukey teriyadhungaradhu vera vishyam)
Ippadi ethanai vishyam iruku,
TR oru katchi nadatharaarnu avar solli thaaan teriyardhu, Ippadi irukara oruthar vilagina adhuku oru O podanum ellaiyah, Andha O than indha postingla

தி. ரா. ச.(T.R.C.) said...

தனியா வந்தாலும் கூட்டமாக வ்ந்தாலும் மொத்தமே ஓரு ஆள்தான் கட்சிலே. இதிலே ஜம்பம் வேறே.கட்சித் தொண்டர் ரா... கொடி ஏத்தினார்,கட்ச்சித் தலைவர் ரா.... பேசினார், கட்சிக் காரியதரிசி ரா.... நன்றி கூறினார்