Monday 1 October 2007

2011_ல் ஏகப்பட்ட பேர் தமிழ்நாட்டுல முதலமைச்சர்!

அய்யய்யோ.... 2011_ல் ஏகப்பட்ட பேர் தமிழ்நாட்டுல முதலமைச்சர் ஆயிருவாங்க போலிருக்கே’’ என்று அலறியபடி வந்தார் ‘சட்ட சிக்கல்’ சிவா.
“ரொம்ப உணர்ச்சிவசப்பட வேண்டாம்....பொறுங்க...’’ என்று அவரை ஆறுதல் படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது நண்பர்கள் வட்டத்திற்கு.

“பின்ன என்னங்க.....

‘2011 ல் நான் தான் முதலமைச்சர்’ என்கிறார் அ.இ.ச.ம.க சரத்குமார்......
‘தி.மு.க., அ.தி.மு.க.வை மண்ணைக் கவ்வ வைத்து நான்தான் முதல்வராகப் போகிறேன்’ என்கிறார் தே.மு.தி.க விஜயகாந்த்......

‘எத்தன கட்சி, இருந்தாலும் மச்சி, அவங்கெல்லாம் குச்சி, ஊர்வாயத் தச்சி, குடுக்கப்போறேன் பச்சி’ என அடித்துச் சத்தியம் செய்கிறார் ல.தி.மு.க விஜய டி.ராஜேந்தர்.

என்னாகப் போகுதோ தமிழ்நாடு? என்று புலம்ப ஆரம்பித்து விட்டார் ‘மறதி’ மயில்வண்ணன்.

“வேணும்ன்னா ஒண்ணு பண்ணலாம்... முதல் ஆறு மாதம் சரத்குமார்... அடுத்த ஆறு மாதம் விஜயகாந்த்.... அடுத்தது ராஜேந்தர்....ன்னுமாத்தி மாத்தி ஆட்சி நடத்தச் சொல்லலாம்.....’’ என்று டேட்டா தங்கவேலு ஆசி வழங்க....
“சரி அப்ப நம்ம கார்த்திக்க எப்ப முதல்வராக்கறது?” என்று முந்திரிக் கொட்டையாய் மூக்கை நுழைத்தார் ‘பேக்வேர்டு ஒயிட்’ பாண்டியன்.
“அட... அவரையும் சுழற்சி முறைல ஆக்கிடலாம்..... இப்ப அதில்ல பிரச்னை.... இவுங்க எல்லாம் முதலமைச்சர் சரி...ஆனா அமைச்சரவைல யார் யாரப் போடறது?” என்கிற முக்கியமான பிரச்னையைக் கிளப்பி விட்டார் ‘அகோரப்பசி’ கு.செயக்குமார்.

அவ்வளவுதான், நண்பர்கள் வட்டமே கலகலத்து விட்டது. குளிர் காலக் கூட்டத் தொடர் போல மணிக்கணக்கில் அலசி ஆராய்ந்து ஒரு அமைச்சரவை பட்டியலினையே தயாரித்துத் தந்து விட்டார்கள்.
அதைப் பார்த்ததும் மயக்கம் போட்டு விழாதது ஒன்றுதான் மிச்சம். இதோ 2011_ல் அமையப் போகும் புதிய அமைச்சரவை:

தமிழக கல்வி அமைச்சர்: மாண்புமிகு.சிம்பு (என்கிற) சிலம்பரசன்.

பொதுப்பணித்துறை அமைச்சர்: மாண்புமிகு. நமீதா.

சமூக நலத் துறை அமைச்சர்: மாண்புமிகு. எஸ்.ஜே.சூர்யா.

நிதி அமைச்சர்:மாண்புமிகு. நயன்தாரா

ராணுவ அமைச்சர்: மாண்புமிகு.அர்ஜுன்.

அறநிலையத் துறை அமைச்சர்: மாண்புமிகு. சொர்ணமால்யா.

மின்சார அமைச்சர்: மாண்புமிகு.மணிரத்னம்.

தொழில் துறை அமைச்சர்: மாண்புமிகு. விஜயகுமார்.

தேர்தல் முடிவுகள் வெளிவர வெளிவரவே தமிழகத்தைத் தனியாக பிரித்துக் கொடுத்து விடுவார்கள் என்பதால், ராணுவ அமைச்சகம் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கிறது. காமராஜர் காலத்திற்குப் பிறகு சிக்கனமாக அமையப் போகும் இந்த அமைச்சரவையின் ஆயுளை மனதில் கொண்டு மேலே சிலருக்குக் கொடுக்கப்பட இருந்த பால்வளத் துறை மட்டும் முதலமைச்சர் வசமே இருக்கும் என்று அறிவிக்கப்படுகிறது.

எல்லாம் ஓ.கே...ஆனால்...இந்த சட்டமன்றம்...எம்.எல்.ஏ.ஹாஸ்டல் இதையெல்லாம் இடம் மாத்தனுமே என்றேன்.....

“எங்கே?’’ என்றார்கள் நண்பர்கள் கோரசாக.

சேப்பாக்கத்திலிருந்து....கீழ்ப்பாக்கத்திற்கு. என்றதுதான் தாமதம்.....

“அப்ப அங்கிருக்கவங்க எல்லாம் எங்கே போறதாம்?” என்றது ‘மறதி’ மயில்.
அவங்க மட்டுமில்ல.... ஒட்டு மொத்தத் தமிழ்நாடும் குடி போறதுக்கு இப்ப இருக்கறதை விட நல்ல வசதியான அற்புதமான இடம் ஒண்ணு இருக்கு....என்றவனிடம்,

“எங்கே என்று சீக்கிரம் சொல்லித் தொலை’’ என்றது மொத்த நண்பர்கள் வட்டமும்.

“வேறெங்கே.....வங்காள விரிகுடா கடல்தான்......’’ என்றபடி

எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்.......

சுட்டது குமுதம்.com

3 comments:

Anonymous said...

Namitha : I dont want PWD, I want MILK department

Anonymous said...

Maanbimigu Ramarajan: anne, paal vala thurai, enakku kodukkamae iruntha, thamizhnaade konthalikkum..

Anonymous said...

Aaha, vandhutaangala ,

Maanbimigu Ramarajan, Ungaluku thaan Senbagameh Senbagameh paatu teriyumeh, atha paadi Namithakiterndhu andha thurai vaangikonga. (yaaravadhu thappa purinjukita naa porupu ellai)