Thursday 28 February 2008

டெல்லிச்சலொ


டெல்லியில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு, சொந்தமாக வீடுகள் இருக்கும் ஆச்சரியத் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக டெல்லி பல்கலைக்கழக சமூகவியல்துறை அங்குள்ள 3 ஆயிரத்து 526 பிச்சைக்காரர்களிடம் ஆய்வு நடத்தியது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 4 பேர் பட்டப் படிப்பை முடித்தவர்கள் என்றும், 6 பேர் கல்லு£ரியில் படித்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. டெல்லியில் மொத்தம் 58 ஆயிரம் பிச்சைக்காரர்கள் இருப்பதாகவும், அதில் பெரும்பாலானவர்களுக்கு தினமும் 500 ரூபாய் வருமானம் கிடைப்பதாகவும் தெரியவந்துள்ளது. இவர்களில் 355 பேருக்கு டெல்லியில் சொந்தமாக வீடு இருக்கிற தகவலும் வெளியாகியுள்ளது. இங்குள்ள பிச்சைக்காரர்கள், தாங்கள் தொழில் செய்யும் இடங்களுக்கு செல்ல பேருந்து மற்றும் சைக்கிள்களைப் பயன்படுத்துவதாகவும், சிலர் நாளன்றுக்கு 500 ரூபாய் வரை செலவு செய்து ஆடம்பரமாக வாழ்வதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

2 comments:

Anonymous said...

ennaku oru thiruvodu please ready pannunga

Dubukku said...

patam sooper :))